27/04/2026
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில், சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடைபெற்று வருகிறது. சில மாதங்களாகத் தூர்வாரும் பணி சரியாக நடைபெறாததால் தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டு, பாரம்பரிய முறையில் சீரமைக்கப்பட்டது. தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, முழுமையாகச் சாக்கடை கலந்த பழையாற்றின் நீரைக் குழாய் மூலம் நிரப்பியுள்ளனர்.
மக்களுக்கான குடிநீரையோ, பாசனத்திற்கான நீரையோ, இறைவழிபாட்டிற்கான நீர்நிலைகளையோ எதையும் பாதுகாத்து மக்கள் பயன்பாட்டிற்குத் தர முடியாத இந்த அரசுகள், வெறுமனே மத உணர்வுகளைத் தூண்டி வருகின்றன. பாஜகவும், 'மதச்சார்பற்ற அரசியல் செய்கிறோம்' என்று சொல்லிக்கொள்ளும் திமுகவும், மக்களின் வழிபாட்டு நம்பிக்கையையோ உணர்வுகளையோ துளியும் புரிந்துகொள்ளாமல், அதில் எவ்வித அக்கறையும் காட்டாமல் நாட்டின் இயற்கை வளங்களைச் சீரழித்துக்கொண்டிருக்கின்றன.
இந்த திராவிட, தேசியக் கட்சிகள் மக்களை வெறும் வாக்காளர்களாக மட்டுமே கருதுகின்றன. இவர்களுக்கு மண்ணின் வளமோ, மக்களின் நலனோ, இயற்கை வளத்தைக் காக்க வேண்டும் என்ற அக்கறையோ துளியளவும் இல்லை.
இந்த அவல நிலை மாறுவதற்கு மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நாம் தமிழர் கட்சி ஒன்றே தீர்வு.
#மக்களோடுமுத்துகுமார் #வெல்வான்விவசாயி #நாகர்கோயில்