03/08/2023
உள்நுழைய
வரவேற்பு!உங்கள் கணக்கில் உள்நுழைய
உங்கள் பயனர் பெயர்
உங்கள் கடவுச்சொல்
உங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா?
கடவுச்சொல் மீட்பு
உங்கள் கடவுச்சொல்லை மீட்டெடுக்கவும்
உங்கள் மின்னஞ்சல்
நாம் தமிழர் கட்சி
முகப்பு கட்சி செய்திகள்
தலைமைச் செய்திகள்அறிக்கைகள்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கைகளை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
ஜூலை 29, 2023100
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கைகளை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் அழிந்துவரும் வேளாண்மையைப் பாதுகாக்க தமிழக விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் ஏற்க மறுத்துவருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டினை மாறி மாறி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் கடந்த 60 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் வேளாண்மை முற்றிலும் சீரழிக்கப்பட்டுள்ளது. காவிரி, தென்பெண்ணை, பாலாறு, முல்லைப் பெரியாறு, சிறுவாணி என்று தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை ஒட்டுமொத்தமாக இரு திராவிடக் கட்சிகளும் காவு கொடுத்து முப்போகம் விளைந்த தமிழ்நாட்டில் ஒரு போகம் கூட வேளாண்மை செய்ய முடியாத அளவிற்கு தமிழ் நிலத்தினை பாலைவனமாக மாற்றியுள்ளது. அதுமட்டுமின்றி விளை நிலங்களை வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்வதை வேடிக்கை பார்த்து பாசனப் பரப்பையும் குறைத்ததுடன், வளர்ச்சி என்ற பெயரில் நிலக்கரி, மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன் என நாசகார திட்டங்களை அனுமதித்து விளைநிலங்களை பாழ்படுத்தியுள்ளது. மேலும், எட்டுவழிச்சாலை, புதிய விமான நிலையம், தொழிற்பூங்கா அமைப்பது என அடுத்தடுத்து விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்து வேளாண்மையையே அடியோடு அழிக்கும் பணிகளையும் திராவிட அரசுகள் மேற்கொண்டு வருகின்றது.
வறட்சி, புயல், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், விதைகள், உரங்கள், வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றின் விலையை கட்டுக்குள் வைக்காமல் பன்மடங்கு அதிகரிக்கச் செய்தும் வேளாண் பெருங்குடி மக்களை வதைத்து வருகின்றன. இத்தனை தடைகளையும் தாண்டி விவசாயிகள் விளைவித்த பயிர்களுக்கு உரிய விலை வழங்காமலும