26/05/2026
#ஜூன்_27_2026ல்_முதுகுளத்தூரில்_SDPI_கட்சி_அனைத்து_ஆற்றல்மிகு_அடலேறுகள்_அணிதிரளும்_அரங்கக்_கூட்டம்
மாவட்ட தலைவர் J.நூருல் அமீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் !!!
**************************************
கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மிகுந்த உற்சாகத்துடன் 25-05-2026 அன்று மாலை 4:00 மணியளவில் முதுகுளத்தூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ூருல்_அமீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட பொதுச்செயலாளர் ாஞ்சுபீர், மாவட்ட துணைத் தலைவர் மௌலவி ீரான்_முஹைதீன்_மன்பஈ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் ெய்யது_இப்றாகிம் அவர்கள் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
மாவட்ட செயலாளர் ்சுல்_மஹரிபா அவர்கள் வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பான இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் S .காஜா முஹைதீன் R.ராஜா முஹம்மது மாவட்ட பொருளாளர் M.செய்யது சதக்கத்துல்லா , முதுகுளத்தூர் தொகுதி தலைவர் S.முஹம்மது ரபீக் , உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொன்டு சிறப்பித்தனர்.
கட்சியின் சார்பில் பல்வேறு மக்கள் நல பணிகளை முன்னெடுக்கும் நோக்கில், செயற்குழு கூட்டத்தின் நிறைவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
#தீர்மானம்_1
அனைத்து ஆற்றல்மிகு அடலேறுகள் அணி திரளும் அரங்கக்கூட்டம்!!
******************************************
SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய அடுத்தகட்ட அரசியல் மற்றும் மக்கள் பணிச் செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், மாவட்டத்தின் அனைத்து செயல்வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் அடலேறுகளை ஒருங்கிணைக்கும் வகையில், வருகின்ற ஜூன் 27 அன்று மாபெரும் அரங்கக்கூட்டம் நடத்துவது என மாவட்ட செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர், ஆற்றல்மிகு தலைவர் S. அகமது நவவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற அழைப்பு விடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
#தீர்மானம்_2
முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்
*************"******************
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், இராமநாதபுரம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி ஆகிய இரு தொகுதிகளிலும் SDPI கட்சியின் ஆதரவு பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர்களான உயர்திரு. R.S. இராஜகண்ணப்பன் மற்றும் உயர்திரு. K.K. கதிரவன் ஆகியோர் மகத்தான வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு SDPI கட்சி தனது புரட்சிகரமான வாழ்த்துகளையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
மேலும், மக்களின் அடிப்படை உரிமைகள், சமூக நீதி, வளர்ச்சி மற்றும் மக்கள் நலப் பணிகளை முன்னெடுத்து செல்லும் அவர்களின் பொதுச்சேவைகளுக்கு SDPI கட்சி தோளோடு தோள் நின்று என்றும் உறுதுணையாக செயல்படும் என்பதை இம்மாவட்ட செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது.
#தீர்மானம்_3
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தெற்கு நரிப்பையூர் கடற்கரைச் சாலை!
விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்!!
**********************************
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், நரிப்பையூர் ஊராட்சியில் அமைந்துள்ள தெற்கு நரிப்பையூர் கடற்கரைச் சாலையானது மிகவும் சேதமடைந்து பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒரு வழிச்சாலையாக இருந்த இச்சாலை, தற்போது ஒருவரிச் சாலையாக மாறி, நாளுக்கு நாள் உயிர்ப்பலி ஏற்படுத்தக்கூடிய அபாயச் சாலையாக மாறியுள்ளது.
இச்சாலையை சீரமைக்க வேண்டி SDPI கட்சி சார்பில் கடந்த ஓராண்டாக ஊராட்சி மன்ற அலுவலகம், கடலாடி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அலுவலகங்களிலும் தொடர் மனுக்கள் அளிக்கப்பட்டதுடன் பல்வேறு ஜனநாயக போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இதுவரை எந்தவித உரிய நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கை தொடர்ந்து வருகிறது என்பதை இம்மாவட்ட செயற்குழு கடுமையாக கண்டிக்கிறது.
புதிய அரசு அமைந்துள்ளது என்ற காரணத்தை முன்வைத்து இனியும் காலதாமதம் செய்யாமல், தெற்கு நரிப்பையூர் கடற்கரைச் சாலையை உடனடியாக சீரமைக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாவட்ட செயற்குழு வலியுறுத்துகிறது.
தவறும் பட்சத்தில், SDPI கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்துவது என இம்மாவட்ட செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப அணி
SDPI கட்சி
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்