14/03/2026
SDPI கட்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், மரக்காணம் கிழக்கு ஒன்றியம், மரக்காணம் நகரம் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி ரீஜென்சி திருமண மஹாலில் இன்று 07-03-2026 மாலை 5 மணியளவில் நகர தலைவர் I.B முபின் பாஷா தலைமையில் நடைபெற்றது.
நகர செயலாளர் A ஜலீல் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய பொறுப்பாளர் K ஜாஹிர் ஹுசைன் தொகுத்து வழங்கினார்.
மாவட்ட துணை தலைவர் MG ராஜாக் மற்றும் மரக்காணம் ஒன்றிய, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் சென்னை தெற்கு மண்டல செயலாளர் S.K அஸ்கர் அலி, மாவட்ட தலைவர் BPM ஜுபைர் அலி, மாவட்ட பொதுச் செயலாளர் S முகமது சலவாத்துல்லா , மாவட்ட செயலாளர் கா. அசேன் அலி, மாவட்ட செயலாளர் S அக்பர் அஹமது ,SDTU மாவட்ட செயலாளர் அன்சாரி மற்றும் திமுக மாவட்ட துணை செயலாளர் அ. ரவிக்குமார், ஒன்றிய சேர்மன் D தயாளன், மரக்காணம் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி நவாப் ஜான், பங்கு தந்தை FR லூர்து ஜெரால்டு, விசிக மண்டல துணை செயலாளர் ப. நாகராஜ், விசிக நகர செயலாளர் குமரவேல், தேமுதிக பேரூர் கழக செயலாளர் M அமல்தாஸ் , காங்கிரஸ் வட்டார தலைவர் கார்த்திக் பெருமாள், கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் SDPI கட்சி செய்யூர் தொகுதி தலைவர் பிலால் ஹுசைன், சித்தாமூர் ஒன்றிய தலைவர் யஹ்யா, இடைக்கழிநாடு நகர பொருளாளர் அஹமது அலி,மதுராந்தகம் நகர தலைவர் கலீல் ரஹ்மான், மதுராந்தகம் நகர இணை செயலாளர் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக நகர துணை தலைவர் KN முகமது இஸ்மாயில் நன்றியுரை ஆற்றினார்,
100 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.