Aisa Madurai

Aisa Madurai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aisa Madurai, Political organisation, indira nagar 2nd Street, Ramanaayakanpatti, vadipatti, Madurai.

The All India Students' Association (AISA), founded in 1990, is the student wing of CPI(ML) Liberation, advocating for accessible education, anti-privatization, caste/gender justice, and anti-fascism.

கல்வி கீழ்ப்படிதலை உடைக்கும்! – மார்க்ஸ். இன்று நினைவு கூர்வோம் !
14/03/2026

கல்வி கீழ்ப்படிதலை உடைக்கும்! – மார்க்ஸ்.
இன்று நினைவு கூர்வோம் !

"The ruling class fears education because it makes obedience impossible."



01/03/2026
01/03/2026
JNU -14 To Be Finally Released! The Truth Prevails, The Struggle Continues!Delhi Court Grants Release to All Students!AI...
01/03/2026

JNU -14 To Be Finally Released!
The Truth Prevails, The Struggle Continues!
Delhi Court Grants Release to All Students!

AISA

  CasteistVCRedResignImplementUGCEquityDalitLivesMatterInCampusAISA_TN_StruggleRYA_Revolutionபுரட்சி_வெல்லும்ஜேஎன்யூ_போர...
28/02/2026



CasteistVCRedResign
ImplementUGCEquity
DalitLivesMatterInCampus
AISA_TN_Struggle
RYA_Revolution
புரட்சி_வெல்லும்
ஜேஎன்யூ_போராட்டம்
தலித்_மாணவர்கள்_உரிமை
StopCasteTerrorInUniversities

27/02/2026

JNU 14 taken to Tihar jail!
Rise against the mockery of democracy!
Rise against Shantishree Pandit's casteist model of repression!

After 16 hours of baseless detention and the autocratic arrest of 14 JNU Students including JNUSU President Aditi, JNUSU VP Gopika, JNUSU JS Danish, Former JNUSU President Nitish and AISA All India President Neha have been sent to Tihar jail after appearance before the Judicial Magistrate in Patiala House Court. JNU will observe total strike against the totalitarian casteist VC Shantishri Pandit!

AISA-RYA to hold All India Protest on 28th February!
Stand with JNUSU!
Casteist VC must resign!

AISA

26/02/2026







கௌரவ விரிவுரையாளர்களின் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ போராட்டம்​தமிழ்நாடு முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள...
18/02/2026

கௌரவ விரிவுரையாளர்களின் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ போராட்டம்
​தமிழ்நாடு முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள், ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற முதன்மைக் கோரிக்கையை முன்வைத்துத் தொடர்ந்து பல நாட்களாகப் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக AISA மற்றும் AISF அமைப்புகள் இணைந்து இன்று மேலூர் அரசு கலைக் கல்லூரியில் போராட்டம் நடத்தின.
​இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய மாணவர் கழகத்தின் (AISA) மேலூர் கல்லூரி கிளைச் செயலாளர் தோழர் அருண்குமார் மற்றும் அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் (AISF) கல்லூரி கிளைச் செயலாளர் நிஷா ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். அகில இந்திய மாணவர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் சேது பாண்டி சிறப்புரையாற்றினார்.

யுஜிசி சமத்துவ விதி, இல்லப் பணியாளர் வழக்குகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் அதன் குறுகிய மனப்பான்மையை எதிரொளி...
05/02/2026

யுஜிசி சமத்துவ விதி, இல்லப் பணியாளர் வழக்குகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் அதன் குறுகிய மனப்பான்மையை எதிரொளிக்கின்றன.

யுஜிசி சமத்துவ விதிகள் 2026-க்கு எதிரான பொதுநல வழக்கிலும் பெண் தொழிலாளர் சங்கமும் இதர அமைப்புகளும் தொடர்ந்த இல்லப் பணியாளர் உரிமை சார்ந்த பொதுநல வழக்கிலும் ஜனவரி 29 அன்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், ஒரு குறுகிய, மேட்டிமைவாதப் பார்வையைப் எதிரொளிக்கின்றன. இக்கருத்துகள் குறித்து நாங்கள் எங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறோம்.

யுஜிசி சமத்துவ விதிமுறைகளுக்கு எதிரான வழக்கு

யுஜிசி விதிமுறைகளுக்குத் தடை விதிக்கும்போது. இந்த விதிகளை "தெளிவற்றவை". "தவறாகப் பயன்படுத்தப்படக்கூடியவை" என்று நீதிமன்றம் விவரித்தது; மேலும், "சாதியற்ற சமூகத்தை அடைவதில் நாம் இதுவரை என்ன சாதித்திருக்கிறோமோ, அதிலிருந்து இப்போது நாம் பின்னோக்கிச் செல்கிறோமா?" என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது என ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி தெரிய வருகிறது.

சாதி, இனப் பாகுபாடு என்பவை வெறும் அருவமான கருத்துகளோ அல்லது வரலாற்று எச்சங்களோ அல்ல. அவை நமது கல்வி நிறுவனங்களிலும் சமூகம் முழுவதிலும் நிலவும் கொடூரமான, அன்றாட நடைமுறை நிகழ்வுகளாகும். "சாதியற்ற சமூகம்” என்ற வெற்றுப் பேச்சு, ரோஹித் வெமுலா அல்லது டாக்டர் பாயல் தட்வியின் நிறுவனப் படுகொலைகளுக்கோ, அல்லது ஏஞ்சல் சக்மாவின் இனவெறிக் கொலைக்கோ நீதியை வழங்க முடியுமா? சாதியக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள், அல்லது அத்தகைய போராட்டங்களின் விளைவாகப் பிறந்த, சாதிய இனப் பாகுபாடுகளுக்கு எதிரான குரல்களை வலுப்படுத்தும் சட்ட நடவடிக்கைகள் நாட்டைப் பின்னோக்கித் தள்ளுகிறது என்று தலைமை நீதிபதி ஏன் கருதுகிறார்? உண்மையில், பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் தொடர்பான புகார்கள் 2019 முதல் 2024 வரை 118% அதிகரித்துள்ளன என்பதை பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தரவுகளே காட்டுகின்றன. சாதி அடிப்படையிலான இந்த வன்முறை நிகழ்வுகள், சாதிய சமூக கட்டமைப்பின் விளைவுகளாகும். இந்த சாதிய சமூக அமைப்பு முறை, நிறுவனங்கள் மற்றும் அரசின் உடந்தையுடன் நிலைநிறுத்தப்படுகிறது. நிறுவனப் படுகொலைகளுக்குப் பலியான ரோஹித் வெமுலா, டாக்டர் பாயல் தட்வி ஆகியோரின் தாய்மார்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கிற்குப் பதிலளிக்கும் விதமாக, தாமதமாக வந்தவை தான், இந்த யுஜிசி சமத்துவ விதிகளாகும். இந்த விதிகள் போதுமானவையல்ல; மேலும் வலுவற்றவை, என்றபோதிலும் கூட, வரவேற்கத்தக்க முன்னெடுப்பேயாகும்.

இந்தத் தடையாணையானது பார்ப்பனிய அழுத்தத்திற்கு அடிபணிவது என்று நாங்கள் கருதுகிறோம். வரலாற்று ரீதியாக, ஒடுக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிரான ஒவ்வொரு சட்டமும் ஆதிக்க வர்க்கத்தினரின் பிற்போக்குத்தனமான, வெறித்தனமான எதிர்வினைகளையே எப்போதும் எதிர்கொண்டுள்ளன. இத்தகைய சந்தர்ப்பங்களில், ஆதிக்க வர்க்கத்தினர் தங்கள் சமூக சலுகைகளையும் நிறுவன தண்டனையின்மையையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, சமத்துவ நடவடிக்கைகளைத் தங்களுக்கு எதிரான தனிப்பட்ட பாதிப்புகளாகத் திரித்துக் கூறுகின்றனர். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த நடவடிக்கையைத் தடுக்கும் நோக்கில் சாதிய வெறிக்கூச்சலைக் கிளப்பும் எந்தவொரு முயற்சியையும் நிராகரிக்கவும் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நிற்கவும் சமூகத்தின் அனைத்துப் முற்போக்கு பிரிவினருக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற அரசமைப்புச் சட்டத்தின் தொலைநோக்குப் பார்வைக்காகக் குரல் கொடுப்போம்!

இல்லப் பணியாளர்களுக்கான நலத்திட்டங்களைக் கோரும் பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களும் அதே அளவு கவலையளிக்கின்றன. ஊடகத் தகவல்களின்படி, தொழில் வளர்ச்சிக்குத் தொழிற்சங்கங்கள் தடையாக இருப்பதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளதுடன், குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது வேலைக்கு ஆளெடுப்பதை பாதிக்கும் என்றும் சிரமங்களை ஏற்படுத்தும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது. பெரும்பாலான ஆலை மூடல்களுக்குத் தொழிற்சங்கங்களோ அல்லது தொழிலாளர்களின் போராட்டங்களோ காரணமல்ல; மாறாக, நிர்வாகச் சீர்கேடும் திட்டமிட்ட நிதித் மடைமாற்றமுமே காரணம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இருந்தபோதிலும், தொழிலாளர் விரோத குழுக்களின் எதிர்ப் பரப்புரையையும் தப்பெண்ணங்களையும் தலைமை நீதிபதி ஊதிப் பெரிதாக்குவதைச் செய்துள்ளார்.

இக்கருத்துகள் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களையும் தியாகங்களையும் சிறுமைப்படுத்துவதோடு. அவற்றை அழித்தொழிக்கவும் முயல்கின்றன. எட்டு மணி நேர வேலை நாள், குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு, அடிப்படைத் தொழிலாளர் பாதுகாப்புகள் ஆகியவை தொழிலாளரின். தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் மூலமே அடையப்பட்டன. இந்தப் போராட்டங்கள் இல்லாவிட்டால், அடிமைத்தனமும் கொத்தடிமை முறையுமே சமூக ஒழுங்காகத் தொடர்ந்திருக்கும்.

தொழிற்சங்கங்களைப் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகப் கருதி புறக்கணிப்பது. தொழிலாளர் பாதுகாப்பு என்பது தடை அல்ல, மாறாக நியாயமான, சமத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் என்ற அடிப்படை உண்மையை மறுப்பதாகும்.

மத்தியக் கமிட்டி
சிபிஐ(எம்எல்) லிபரேசன்.

31/01/2026

யுஜிசி (UGC) சமத்துவ விதியை நடைமுறைப்படுத்து! ரோகித் சட்டத்தின் நோக்கத்தோடு யுஜிசி வழிகாட்டுதல்களை அமல்படுத்தக் கோரி பீகாரின் அரா (Ara) நகரில் அகில இந்திய முற்போக்கு மாணவர் கழகம் (AISA) மற்றும் இதர அமைப்புகள் இணைந்து நடத்திய மாபெரும் எதிர்ப்புப் பேரணி. கல்வி வளாகங்களில் சாதியத்தை ஒழிப்போம்!

Address

Indira Nagar 2nd Street, Ramanaayakanpatti, Vadipatti
Madurai
625018

Alerts

Be the first to know and let us send you an email when Aisa Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share