08/08/2025
#சங்கிகள்
சங்கிகளின் ஊழலை எதிர்த்து தக்க ஆதாரங்கள் மற்றும் வாதங்களோடு நீங்கள் ஒரு பதிவு போடுகிறீர்கள்.
அப்பதிவை பாராட்டி 20 பேர் கமெண்ட் போடுவார்கள்.
ஆனால், பதிவிட்ட உங்களை, உங்கள் அம்மாவை, உங்கள் அப்பாவை, உங்களின் பிறப்பை, உங்களின் பிறப்புறுப்பை எல்லாம் திட்டி... படு ஆபாசமாக கொச்சையான வார்த்தைகளுடன் 100 பேர் கமெண்ட் போட்டு இருப்பார்கள்.
கமெண்ட் செக்சன் பார்ப்பதற்கு...
என்னமோ சங்கிகள்தான் இந்நாட்டில் 5 மடங்கு அதிகமாக உள்ளது போன்று தோன்றும். இது தவறு.
ஆனால்,
20 பேர் மட்டுமே பாராட்டிய பதிவுக்கு 100 பேர் லைக் போட்டு இருப்பார்கள்.
இப்போது... லைக் செக்சனை கமெண்ட் செக்சனுடன் ஒப்பிட்டு பார்த்தால்... சங்கிகள் இந்த நாட்டில் பாதிக்கு பாதியாக உள்ளது போல தோன்றும். இதுவும் தவறு.
ராஹுல் காந்தி போல... சில மணி நேரம் ஒதுக்கி... கமெண்ட் போட்டோர் பின்னணி குறித்து நீங்கள் கொஞ்சம் ஆழமாக ஆய்வு செய்தால்...
உங்கள் பதிவை பாராட்டி லைக் இட்டு கமெண்ட் போட்ட 20 பேர் மற்றும்... கமெண்ட் போடாமல் லைக் மட்டும் இட்ட மீதி 80 பேரும்.... ஒரிஜினல் ஐடியில் வந்தவர்களாக இருப்பார்கள்.
ஒரிஜினல் என்றால்...
அவர்களின் ப்ரொஃபைல் ஒப்பனாக இருக்கும். அதில் நீங்கள் சென்று பார்த்தால்... அவர்களின் பெயரிலேயே ஐடியின் லிங்க் இருக்கும். அதில் அவர்கள் நிறைய பதிவுகள் போட்டு இருப்பார்கள். அல்லது பிறரின் பதிவுகளை பகிர்ந்து இருப்பார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் படித்த பள்ளி, கல்லூரி, பணியாற்றும் அலுவலகம், பிறந்த ஊர், வாழும் ஊர் எல்லாமே தெளிவாக அங்கே இருக்கும். அவர்களின் ஃபிரண்ட்ஸ் லிஸ்ட் எடுத்துப் பார்த்தால்... அவர் படித்த பள்ளி, கல்லூரி மற்றும் அவரின் ஊர் நண்பர்கள் எல்லாம் அங்கே இருப்பார்கள். பலர் தங்களின் முகப் படத்தையே ப்ரொஃபைல் ஃபோட்டோ ஆக வைத்து இருப்பார்கள். அதை கிளிக் செய்தால் அவர்களின் நண்பர்கள் அவரை அடையாளம் கண்டு அந்த ப்ரொஃபைல் பிக்சர் பதிவில் கமெண்ட் போட்டு இருப்பார்கள்.
இதுவே...
நீங்கள் அந்த ஆபாச கமெண்ட் போட்ட 100 பேரின் பெயரை கிளிக் செய்தால்...ப்ரொஃபைல் ஓபன் ஆகாது. லாக் பண்ணி வைத்து இருப்பார்கள். ஒப்பனாக இருந்தாலும் எந்த பதிவும் அடையாள முகவரி தகவலும் இருக்காது. படித்த பள்ளி, கல்லூரி, ஊர் ஏதும் இருக்காது. ஃபிரண்ட்ஸ் லிஸ்ட் பார்த்தால்... உங்கள் பதிவில் ஆபாச கமென்ட் போட்ட பிறர் அங்கே இருப்பார்கள்.
இவர்களின் நாராச கமெண்டை ஆராய்ந்தால்... ஒரே கமெண்ட் காபி பேஸ்ட் ஆகி இருக்கும். அல்லது ஒரே கண்டெண்ட் பலர் போட்டு இருப்பார்கள். ஒரு வார்த்தையில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தால்... பலரின் கமெண்டில் அதே வார்த்தையில் அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கும். ஒரு வாக்கியத்தில் 2 வார்த்தைகளுக்கு இடையில் தேவை இல்லாமல் ஒரு புள்ளி இருந்தால்... அதேபோல பலரின் கமெண்டிலும் அதே புள்ளி அப்படியே இருக்கும். ஒரே விதமான ஸ்மைலி பிக்சர்கள் இருக்கும்.
இதிலிருந்து நீங்கள் ஒன்றை புரிவீர்கள். உங்கள் பதிவில் அருவருப்பு கமண்ட் போட்டவர்கள் 100 பேர் அல்ல... வெறும் 4 அல்லது 5 பேர் மட்டுமே... வெவ்வேறு போலி ஐடிகளில் வந்து... ஆளுக்கு தலா 20 கமெண்ட் போட்டு உங்களை திட்டி உள்ளனர் என்பதை நீங்கள் எளிதாக புரிந்து கொள்வீர்கள். இப்படி ஒரு வேலையை ஊதியம் கிடைக்காமல் யாருமே செய்ய மாட்டார்கள். இவர்களுக்கான ஊதியம்... எலக்ட்டோரல் பாண்டு, பீயெம்கேடுஃபண்டு ஆகிவற்றில் இருந்து செல்லக்கூடும்.
ஆக,
சங்கிகள் இந்நாட்டில் மிகவும் குறைவு.
சங்கிகள் இந்நாட்டில் சிறுபான்மை. நல்லோர்களான நாமே இந்நாட்டில் பெரும்பான்மை.
அப்படி இருந்தும் சங்கிகள் அதிக ஓட்டுகளை பெற்று ஆட்சியில் இருக்கக் காரணம்... தேர்தல் ஆணையத்தின் உதவியால் நடக்கிற EVM மோசடிகளும்... போலி வாக்காளர்களின் கள்ளஓட்டுப்பதிவும்தான்.... என்று ராஹுல் காந்தி... #திருட்டுத்_தேர்தல்_ஆணையம் கொடுத்த தரவுகளில் இருந்தே ஆதாரத்தை எடுத்துபோட்டு... நேற்று நிரூபித்து விட்டார்.
18 வயது பூர்த்தி ஆன புதிய இளைஞர்கள் நிரப்புகிற Form 6 வாக்காளர்களில்... 33,692 பேர்... 50, 60, 70, 80 வயதுள்ள வயோதிகர்கள் என்றால்... எந்தளவுக்கு இந்த சிறுபான்மை சங்கிகள் ஆதரவு பெற்ற #ஃபாசிஸ_சங்கி_பாஜக_அரசு இந்த #களவாணித்_தேர்தல்_ஆணையம் மூலம் பெரும்பான்மை மக்களின் ஓட்டுகளுக்கு எதிராக வெற்றி பெற்று... எளிதாக ஆட்சியை பிடித்துள்ளது என்பது புரிகிறதா..?!
#பொய்_என்றால்_மோடி #மோடி_என்றால்_பொய்
#வேண்டும்_காங்கிரஸ்
#மீண்டும்_காங்கிரஸ்
#வெறுப்பை_விரட்டுவோம்
#அன்பை_பரப்புவோம்
#தேர்தல்_ஆணையம்