10/12/2025
கூட்டுறவுத்துறையின் உடனடி நடவடிக்கை :
மதுரை அனுப்பானடி, ஆதிமூலம் பிள்ளை சந்து என்ற முகவரியில் வசிக்கும் 85 வயது முதியவர் திருமதி.கருப்பாயி அம்மாள் என்பவரது கைரேகை விழாததாலும் கருவிழி ஸ்கேன் ஆகாத காரணத்தாலும் அனுப்பானடி வடக்கு தெரு நியாய விலைக் கடையில் குடிமைப் பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டதால், விற்பனையாளர், மேற்படி அம்மையாரிடம் அவருக்கு பதிலாக வேறொருவரை, நி.வி.கடையில் பொருட்கள் பெற பிரதிநிதியாக சேர்த்திடக் கோரி அருகில் உள்ள பொதுச் சேவை மையத்தை அனுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அம்மையாரின் வீட்டின் அருகில் வசிக்கும் வேறு சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேறுசில காரணங்களுக்காக 08-12-2025 அன்று செல்லுகையில் அவர்களுடன் இவரையும் அழைத்துச் சென்றுள்ளனர், அங்கு மதுரை கிழக்கு குடிமைப் பொருள் சரக அலுவலகத்தில் இவரது கோரிக்கையின்படி திருமதி.குஞ்சரம் என்பவரை பிரதிநிதியாக சேர்க்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வடக்கு தெரு நி.வி.கடையில் பிரதிநிதியாக சேர்க்கப்பட்டவரின் கைரேகை பெற்று திருமதி.கருப்பாயி அம்மாள் அவர்களுக்கு அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் ஆகிய குடிமைப் பொருட்கள் 08-12-2025 பிற்பகல் 1.04 மணியளவில் வழங்கப்பட்டுள்ளது.
அவர் குடிமைப் பொருட்களை முழுமையாக பெற்றுக் கொண்டது தொடர்பாக அவரது வீட்டிற்கு சென்று நேரில் அவரிடம் விசாரித்து உறுதி செய்யப்பட்டது.
மேலும் அவரிடம் ஒவ்வொரு மாதமும் அவரது வீட்டிற்கு வந்து குடிமைப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அவர் கடைக்கு வரத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அம்மையார் நன்றி தெரிவித்தார். என்றென்றும் மக்களின் சேவையில் கூட்டுறவுத்துறை.