10/06/2026
பத்திரிக்கை செய்தி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளர் பணியிடங்களுக்கான TNPSC மூலம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் அனைவருக்கும் பணி நியமனம் வழங்க கோரியும் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு சார்பாக இன்று (10.06.2026) தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் அருகில் Link Road-யில் நடைபெற்றது.
கோரிக்கைகள்:
1. மின்சார வாரியத்தில் தேர்ச்சி பெற்ற 9600 தேர்வர்களுக்கும் கள உதவியாளர்கள் பணி நியமன வழங்கிடு..
2. பெண்களுக்கு 30 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு அளித்திடுக..
3. உடற்தகுதி தேர்வில் கம்பம் ஏற pole climbing shoe பயன்படுத்திட அனுமதி வழங்கு..
4. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட..
இந்த ஆர்ப்பாட்டத்தில் DYFI மாநில செயலாளர் தோழர் கார்த்திக், மாநில பொருளாளர் தோழர் சந்துரு, மாநில துணைத்தலைவர் தோழர் அபிராமி, COTEE சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜெய்சங்கர், மாநில செயலாளர் தோழர் அருள் செல்வம், கள உதவியாளர் தேர்வர்கள் ஒருங்கிணைப்பாளர் தோழர் நந்தகுமார், மகேந்திரன், சுரேஷ் குமார், ஆரோக்கிய ஜயராஜ், தமிழ் செல்வி, ரேணுகா, DYFI வட சென்னை மாவட்ட தலைவர் தோழர் விஜய், மத்திய சென்னை செயலாளர் தோழர் பார்த்திபன், தலைவர் தோழர் அருண் குமார், பொருளாளர் தோழர் விக்னேஷ், தென் சென்னை மாவட்ட தலைவர் தோழர் குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தோழமையுடன்
DYFI Tamilnadu