போர்க்குடி_அகம்படியர்

  • Home
  • India
  • Madurai
  • போர்க்குடி_அகம்படியர்

போர்க்குடி_அகம்படியர் போர்க்குடி அகம்படியர் - தமிழ்நாடு

பண்டித நேருவை மிஞ்சிய பச்சைத் தமிழன்!!! சுதந்திர போராட்ட வீரர் மதுரை சிதம்பர பாரதி சேர்வை அவர்களின் 121வது பிறந்த தினம் ...
05/06/2026

பண்டித நேருவை மிஞ்சிய பச்சைத் தமிழன்!!!

சுதந்திர போராட்ட வீரர் மதுரை சிதம்பர பாரதி சேர்வை அவர்களின் 121வது பிறந்த தினம் இன்று 🙏🙏🙏

பாரத மணித்திருநாடு சுதந்திரம் பெற வேண்டி ஆயிரக்கணக்கான தியாகிகள் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.ஆனால் அவர்களில் வெகு சிலரை மட்டுமே நமக்கு பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தி உள்ளது.பலரின் பெயர் கூட நமக்கு தெரிவதில்லை,அதனாலேயே அவர்களின் தியாகத்தை நாம் உணர்வதில்லை.அப்படி நாம் கொண்டாட மறந்த ஒரு மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் தான் அரசாண்ட அகமுடையார் பேரினத்தில் உதித்த மதுரை சிதம்பர பாரதி சேர்வை எனும் மாவீரர்.

பொதுவாக நேருவை தான் அதிக ஆண்டுகள் சிறை வாசம் செய்தவர் என்று நமக்கு தெரியும்,"பண்ணெண்டு வருடம் சிறையினிலே,பண்டித நேரு இருந்தாரே" எனும் பாடல் வரிகள் நேரு அவர்களின் சிறைவாசம் குறித்து நினைவுபடுத்துகின்றன.ஆனால் அவரை காட்டிலும் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அதாவது 1922 முதல் 1942 இடைப்பட்ட இருபது ஆண்டுகளில் ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகள் தனது வாழ்வை சிறையினிலே கழித்தவர் தான் நமது பெரு மதிப்பிற்குரிய மதுரை சிதம்பர பாரதி சேர்வை அவர்கள்.

ஆனால் சிதம்பர பாரதி சேர்வைக்கு எந்த நினைவு சின்னமும் கிடையாது,அரசு விழாவும் கிடையாது,பாடப் புத்தகங்களில் எந்த பக்கத்திலும் இவருக்கு இடமில்லை.இப்படி ஒரு மாபெரும் போராளி வாழ்வதற்கான எந்த குறிப்புகளும் தற்போது வரை அரசு சார்பில் இல்லை.அதற்காக நாமும் இவரை நினைவுபடுத்தாமல் கடந்து செல்ல கூடாது.

வாழ்க சிதம்பர பாரதி சேர்வையின் புகழ்!
வளர்க்க அவர் கண்ட புதிய பாரதம்!!
வந்தே மாதரம்!!!

#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#துளுவ_வேளாளர்
#போர்க்குடி_அகம்படியர்
#போர்க்குடி_அகமுடையார்

கொங்கு நாட்டு அகமுடையார் 💛💚கோவை மாவட்டம்,அவிநாசி நகரில் நமது உறவினரின் இல்லத்தில் காட்சி தரும் முதல் இந்திய சுதந்திர போர...
04/06/2026

கொங்கு நாட்டு அகமுடையார் 💛💚

கோவை மாவட்டம்,அவிநாசி நகரில் நமது உறவினரின் இல்லத்தில் காட்சி தரும் முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளான மாமன்னர் மருது பாண்டியர்கள் 🙏🙏🙏

#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#துளுவ_வேளாளர்
#போர்க்குடி_அகம்படியர்
#போர்க்குடி_அகமுடையார்

முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை IPS அவர்களுக்கு அகமுடையார் பேரின உறவுகள் சார்பில் இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐
04/06/2026

முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை IPS அவர்களுக்கு அகமுடையார் பேரின உறவுகள் சார்பில் இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐

மாற்று சாதியில் பிறந்திருந்தால் இந்நேரம் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கும், அகமுடையார் வரலாற்றை படித்த நேரத்திற்கு ...
04/06/2026

மாற்று சாதியில் பிறந்திருந்தால் இந்நேரம் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கும்,

அகமுடையார் வரலாற்றை படித்த நேரத்திற்கு பதிலாக ஏதாவது அரசு போட்டித் தேர்வுகளுக்கு படித்திருந்தால் மிக உயர்ந்த பதவிக்கு சென்றிருக்கலாம்,

பிழைக்கத் தெரியாத மனிதன் என்று கிராமப்புறங்களில் இன்றும் சிலரை அடையாளம் சுட்டி சொல்வார்கள்,தனக்கென்று வாழாமல் சமூகத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தியாகிகள் அவர்கள்.அதுபோல தான் நமது அண்ணன் பாலமுருகன் அகமுடையார் ♥

பசும்பொன்னிற்கும்,கோரிப்பாளையத்திற்கும் திரிந்த குடிமக்களை காளையார்கோவிலுக்கு செல்ல வைத்த வழிகாட்டி,

முத்துராமலிங்கதிற்கும்,மூக்கையாவிற்கும் கொடி பிடித்த கரங்களில் மாமன்னர் மருது பாண்டியர்களின் வரலாற்று புத்தகத்தை ஏந்த வைத்த ஆசிரியர்,

வடக்கு - தெற்கு என்று சிதறிக்கிடந்த உறவுகளை அகமுடையார் பேரினம் என்று ஒரு குடையின் கீழ் அணிதிரள வைத்து செயற்கரிய செயலை செய்தவர்.

இருகுலத்தோரின் தரம் தாழ்ந்த செயல்களுக்கு வேறு எந்த மனிதனாக இருந்தால் இந்த துறையை விட்டு தெறித்து ஓடி இருப்பார்கள்.நமது அண்ணன் மட்டுமே திராணியுடன் களத்தில் நின்றார்,இப்போதும் நிற்கிறார்.

அகமுடையார் சங்கத்தையே நிறுவிய பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளையை வெள்ளாட்டிகள் அபகரிக்க முயன்ற நிலையில் தக்க சமயத்தில் தடுத்து வெள்ளாட்டிகளை தனது வரலாற்று ஆதாரங்கள் துணையுடன் வெளுத்தவர்,

உலகில் வாளின் கூர்மையும்,நூலின் கூர்மையுமே சிறந்தது,காலப்போக்கில் வாளின் கூர்மை முனை மழுங்கிவிடும்,நூலின் கூர்மை மேலும் கூடும்.இதனை நன்கு உணர்ந்து தான் நமது அண்ணன் தொடர்ச்சியாக எங்கெல்லாம் புத்தக கண்காட்சி நடைபெறுகிறதோ அங்கு சென்று அகமுடையார் காப்பகத்திற்காக பல வரலாறு நூல்களை சேகரித்து வருகிறார்.

மீண்டும் ஒரு முறை நினைவு படுத்த விரும்புவது என்னவென்றால் இந்த நொடி பொழுது வரையில் பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு தக்க அங்கீகாரத்தை இந்த அகமுடையார் பேரினம் வழங்கவில்லை என்பதே.குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு மூன்றாம் சாதியினரை எல்லாம் வரவேற்று மகிழ்ச்சி அடையும் நம் உறவுகள்,நமக்காகவே வாழும் ஒரு மனிதரை அரவணைப்பு செய் தவறுகிறோம்.

ஆதியும்,அந்தமும் இல்லாத தாய் மொழி தமிழ் போல வாழ்வாங்கு வாழ அனைத்து அகமுடையார் பேரின முன்னோர்களின் திருப்பெயரால் இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#துளுவ_வேளாளர்
#போர்க்குடி_அகம்படியர்
#போர்க்குடி_அகமுடையார்

நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்!!! சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்திய அனைவருமே போற்றத்தக்கவர...
03/06/2026

நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்!!!

சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்திய அனைவருமே போற்றத்தக்கவர்கள்,ஆனால் வெகு சிலரை தான் நமக்கு அடையாளம் தெரியும்.அதுபோலவே மண்ணின் வளம் காக்க,சாதிய இழிவு,தீண்டாமை,இலவச கல்வி மற்றும் மருத்துவத்தை நமக்கு வழங்க களத்தில் நின்ற அனைத்து நாம் தமிழர் வேட்பாளர்களுமே நட்சத்திர வேட்பாளர்கள் தான்.ஆனால் ஒருசிலர் மட்டுமே காட்சி ஊடகங்கள் அல்லது சமூக வலைதளங்களின் மூலம் தெரிகின்றனர்,எனவே அந்த உறவுகளை மட்டும் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

செந்தமிழன் சீமான் - காரைக்குடி - 30,793 (13.43%)

இடும்பாவனம் கார்த்திக் - வேதாரண்யம் - 10,396 (6.41%)

வனக்காவலன் வீரப்பன் மகள் வித்யாராணி வீரப்பன் - மேட்டூர் - 7,109 (3.08%)

சகோதரி கார்த்திகா - கீழ்வேளூர் - 8,069 (5.32%)

ஜல்லிக்கட்டு ராஜேஷ் - திருவெறும்பூர் - 9,311 (4.36%)

சகோதரர் கரிகால பாண்டியன் - ஸ்ரீவில்லிபுத்தூர் - 13,274 (6.86%)

மருத்துவர் கார்த்திகேயன் - பல்லாவரம் - 14,065 (4.96%)

சகோதரர் பேரறிவாளன் - கோவை தெற்கு - 5,062 (3.23%)

சகோதரி தாரிகா சல்மான் - இராணிப்பேட்டை - 7,236 (3.27%)

சகோதரி அனீஸ் பாத்திமா - பாபநாசம் - 9,604 (4.62%)

நடிகர் திருமுருகன் - ஒரத்தநாடு - 10,135 (5.19%)

முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் அவர்களின் பேத்தி வெற்றிச்செல்வி - காஞ்சிபுரம் - 6,950 (2.82%)

மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் - விழுப்புரம் - 5,786 (2.69%)

இயக்குனர் களஞ்சியம் - ஆயிரம் விளக்கு - 3,717 (2.82%)

சகோதரி எழிலரசி - புதுக்கோட்டை - 11,673 (6.13%)

சகோதரர் இசை மதிவாணன் - வாசுதேவநல்லூர் - 12,856 (6.77%)

சகோதரி மரியா ஜெனிபர் - கன்னியாகுமரி - 13,689 (5.72%)

சகோதரர் ஹிம்லர் - கிள்ளியூர் - 12,764 (7.19%)

#நாம்_தமிழர்
#தமிழ்_தேசியம்
#தமிழன்
#நாதக
#அகமுடையார்_பேரினம்

முக்குலத்தை மிதித்த கள்ளர்கள்!!! அகமுடையார் பேரின முன்னோர்கள் முக்குலத்தோர் எனும் மூடநம்பிக்கையை எதிர்த்தனர் என்ற பதிவை ...
03/06/2026

முக்குலத்தை மிதித்த கள்ளர்கள்!!!

அகமுடையார் பேரின முன்னோர்கள் முக்குலத்தோர் எனும் மூடநம்பிக்கையை எதிர்த்தனர் என்ற பதிவை பகிர்ந்தால் ஒப்பாரி வைக்கும் இருகுலத்தோர் பார்வைக்கு...

1945ஆம் நவம்பர் 12ஆம் தேதியன்று ஆண்டு கிருஷ்ணசாமி வன்னியர் எனும் கள்ளர் சாதி தலைவர் தலைமையில் 5000 கள்ளர்கள் மன்னார்குடியில் ஒன்றுசேர்ந்து முக்குலத்தோர் எனும் பிற்போக்கான அரசாங்கம் எடுத்த முடிவை எதிர்த்து தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

தேவர் எனும் பொதுப்பயரை கள்ளர்கள் ஏன் எடுத்தார்கள் என்பதற்கு அவர்களே தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்கள் :

1) அகம்படியர்,கள்ளர்,மறவர் மூன்றும் வெவ்வேறு சாதிகள்,

2) மூன்று சமூகங்களுக்கும் எவ்வித சம்பந்தமோ,பழக்கவழக்கமோ எக்காலத்திலும் இருந்ததில்லை,

3) கள்ளர் சாதிக்கு பல பட்டங்கள் உள்ள நிலையில் அனைவரையும் தேவர் என்ற பொதுப்பெயரின் கீழ் வருவதை விரும்பவில்லை.

அகமுடையார் பேரின முன்னோர்கள் எதிர்த்த அதே காலகட்டத்தில் தான் கள்ளர் சாதியினரும் முக்குலத்தோர் எனும் பிழைப்புவாதத்தை எதிர்த்துள்ளனர்.இரண்டு சமூகங்களும் தனித்தனியே எதிர்க்காமல் கைகோர்த்து எதிர்த்திருந்தால் அந்தந்த சமூகங்களின் தனித்தன்மை மாசுபடாமல் இருந்திருக்கும்.

இப்போது கூட எதுவும் கெட்டுவிடவில்லை,முக்குலத்தோர் எனும் போலி கட்டமைப்பில் அகமுடையார் பேரினத்திற்கு அடுத்த நிலையில் (மக்கள் தொகையில்) இருப்பவர்கள் கள்ளர் சாதியினர் தான்.அகமுடையார் பேரின உறவுகளை போல கள்ளர் சாதியினரும் தங்களின் தனித்தன்மை,குலச்சிறப்பை மனதில் கொண்டு பயணித்தால் தமிழ் குடிகள் மத்தியில் ஒற்றுமை தழைத்தோங்கும்.

#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#துளுவ_வேளாளர்
#போர்க்குடி_அகம்படியர்
#போர்க்குடி_அகமுடையார்

நாம் தமிழர் கட்சி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற தொகுதிகள்!!! நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழ...
03/06/2026

நாம் தமிழர் கட்சி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற தொகுதிகள்!!!

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் பற்றி ஒவ்வொரு பதிவிலும் நாம் பார்த்து வருகிறோம்,அந்த வகையில் இந்த பதிவில் நாம் தமிழர் கட்சி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற 17 தொகுதிகளையும்,வாக்கு சதவீதத்தையும் அறிந்து கொள்வோம்.

1) காரைக்குடி - 30,793 (13.43%)
2) ஆலங்குளம் - 23,380 (10.49%)
3) சோழிங்கநல்லூர் - 21,919 (4.9%)
4) மானாமதுரை - 19,676 (9.43%
5) சிவகங்கை - 19,021 (8.89%)
6) நாங்குநேரி - 17,618 (8.41%)
7) ஒட்டப்பிடாரம் - 17,279 (8.81%)
8) ராஜபாளையம் - 16,972(9.27%)
9) கவுண்டம்பாளையம் - 16,834 (4.62%)
10) தென்காசி - 16,394 (6.98%)
11) ஆவடி - 16,335 (4.72%)
12) இராதாபுரம் - 15,270 (7.69%)
13) பரமக்குடி - 15,363 (8.1%)
14) திருப்பத்தூர் - 15,291 (7.09%)
15) உசிலம்பட்டி - 15,185 (6.78%)
16) முதுகுளத்தூர் - 15,112 (6.53%)
17) திருநெல்வேலி - 15,108 (6.92%)

மேற்குறிப்பிட்ட 17 தொகுதிகளை மண்டல வாரியாக பார்த்தால் கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியும்,வடக்கு மண்டலத்தின் இரண்டு தொகுதியில் உள்ளது.தென் தமிழகத்தில் மட்டும் சுமார் 14 தொகுதிகளில் நாம் தமிழர் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளது.குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்குதொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளது.அதுபோல நெல்லை மாவட்டத்தில் மூன்று தொகுதிகள்,இராமநாதபுரம்,தென்காசி மாவட்டங்களில் தலா இரண்டு தொகுதிகள்,மதுரை,விருதுநகர்,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியிலும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மொத்தமுள்ள பத்து தொகுதிகளில் எதிலும் 15 ஆயிரம் வாக்குகளை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டல வாரியாக நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் :தமிழகத்தின் 234 தொகுதிகளையும் நான்கு மண்டலங்களாக தொகுத்துள்ளனர்.அவை தொண...
02/06/2026

மண்டல வாரியாக நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் :

தமிழகத்தின் 234 தொகுதிகளையும் நான்கு மண்டலங்களாக தொகுத்துள்ளனர்.அவை தொண்டை மண்டலம்,கொங்கு மண்டலம்,சோழ மண்டலம்,பாண்டிய மண்டலம் எனும் நான்கு மண்டலங்கள் ஆகும்.

வடக்கு மண்டலம் அல்லது தொண்டை மண்டலத்தில் சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,வேலூர்,திருப்பத்தூர்,இராணிப்பேட்டை, திருவண்ணாமலை,விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பத்து மாவட்டங்களில் 69 தொகுதிகள் உள்ளன.

மேற்கு அல்லது கொங்கு மண்டலம் எனும் பெரும் நிலப்பரப்பில் கோயம்புத்தூர்,ஈரோடு,திருப்பூர்,நாமக்கல்,சேலம்,கரூர்,தர்மபுரி,கிருஷ்ணகிரி,நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய பத்து மாவட்டங்களில் 68 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

சோழ மண்டலம் எனப்படும் டெல்டா மண்டலத்தில் தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை,புதுக்கோட்டை,திருச்சி,கடலூர்,அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள 46 தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.

பாண்டிய மண்டலம் என்றும் தென் மண்டலம் என்றும் அழைக்கப்படுகின்ற மண்டலத்தில் மதுரை,தேனி,விருதுநகர்,சிவகங்கை,இராமநாதபுரம்,திருநெல்வேலி,தென்காசி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள 51 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது.

மண்டல வாரியாக நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் :
தொண்டை மண்டலம் : 4,64,839
கொங்கு மண்டலம் : 4,73,583
டெல்டா மண்டலம் : 3,75,759
பாண்டிய மண்டலம் : 6,55,656.

அகமுடையார் ✅முக்குலத்தோர் ❌எங்கள் முன்னோர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள் என்றால் அது எங்களின் நலம் சார்ந்ததாக மட்டுமே இருக்...
02/06/2026

அகமுடையார் ✅
முக்குலத்தோர் ❌

எங்கள் முன்னோர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள் என்றால் அது எங்களின் நலம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும்,இந்த கருத்தில் நாங்கள் திடமாக உள்ளோம்.

முக்குலத்தோர் என்பது செயற்கை கட்டமைப்பு,பிழைப்புவாதம்,இடைச்செருகல் என்பதை நன்கு உணர்ந்த எங்கள் அகமுடையார் பேரினத்தின் சான்றோர் பெருமக்கள்,தொடக்கத்திலிருந்தே முக்குலத்தோர் எனும் மூடத்தனத்திற்கு குட்டு வைத்துள்ளனர்.

1985ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 தேதி,எம்ஜிஆர் தலைமையிலான அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது.அதில் அகம்படியர் வடபகுதி,அகம்படியர் தென்பகுதி என்று இருந்த கோமாளிதனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக "அகமுடையார்" என்று அறிவித்து அரசாணையை வெளியிட்டுள்ளது.அரசாணை எண் : 1564.

1986ஆம் ஆண்டு மதுரையை பாண்டியன் சேர்வை எனும் அகமுடையார் நடந்தி வந்த அகம்படியர் குரல் எனும் நமது அகமுடையார் பேரின நாளேட்டில் இதுபற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போதிய விழிப்புணர்வு இல்லாததால் காலப்போக்கில் அகமுடையார் பேரின உறவுகளுக்கு இந்த விடயம் தெரியாமலே உள்ளது.இந்த அரசாணை வருவதற்கு சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே முக்குலத்தோர் எனும் செயற்கை கட்டமைப்பில் நாங்கள் இணைய விரும்பவில்லை என்று தென்னாடு ஜவஹர் பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளை அவர்கள் அரசிற்கு அளித்த ஆட்சேபனை மனு உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களை அடுத்தடுத்த பதிவுகளில் அறிந்து கொள்வோம் உறவுகளே.

#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#துளுவ_வேளாளர்
#போர்க்குடி_அகம்படியர்
#போர்க்குடி_அகமுடையார்

தாழ்மையான வேண்டுகோள்!!! முத்தரையர்,தேவேந்திரர்,பறையர்,வன்னியர்,செங்குந்தர்,கோனார் உள்ளிட்ட தமிழ் உறவுகளுக்கு ஒரு கடைக்கோ...
02/06/2026

தாழ்மையான வேண்டுகோள்!!!

முத்தரையர்,தேவேந்திரர்,பறையர்,வன்னியர்,செங்குந்தர்,கோனார் உள்ளிட்ட தமிழ் உறவுகளுக்கு ஒரு கடைக்கோடி அகமுடையாரின் கண்ணீர் மல்க முன்வைக்கும் கோரிக்கை 🙏🙏🙏

அகமுடையார் என்ற சொல்லிற்கான பொருள் அகத்தில் (மனதில்) நல்ல எண்ணங்களை உடையவர் (உடையார்) என்று பொருள்.எங்களின் முன்னோர்களும் குலத்தின் மாட்சியை உயிர் போகும் நிலையிலும் தவறவிடவில்லை.

அனைத்து சமூகங்களையும் அரவணைத்து செல்லவே நாங்கள் விரும்புகிறோம்,எங்கள் அகமுடையார் பேரினத்திற்கு தனிப்பட்ட முறையில் எந்த சக தமிழ் குடியும் பகைவர்கள் கிடையாது.மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு எதிராக சிலர் சூழ்ச்சி செய்துள்ளது வரலாற்றின் மூலம் நமக்கு தெரியவருகிறது.அந்த துரோகிகளின் சூழ்ச்சியால் நமக்கு கிடைக்க வேண்டிய சுதந்திரம் 146 ஆண்டுகள் தள்ளிப் போனது தான் பெருந்துயரம்.அதுபோன்ற ஆங்கிலேயர்களின் அடிவருடிகள் அகமுடையார்களுக்கு எதிரி இல்லை,பாரத மணித்திருநாட்டிற்கே பெரும்சுமை.

முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முக்குலத்தோர் சாதியினர் என்று சக தமிழ் உறவுகள் மேற்கோள் காட்டி பதிவிடும் போது,அது அகமுடையார் பேரினத்தை வெகுவாக பாதிக்கிறது.

மாற்று சாதியினர் செய்யும் செயல்களுக்கு,எந்த தொடர்பும் இல்லாத அகமுடையார் பேரினத்தின் மீது கலங்கம் ஏற்படும் வகையில் பல நண்பர்கள் பதிவிடுகின்றனர். உதாரணமாக வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து செயல்பட்டது மாற்று சாதியினர்,ஆனால் வன்னியர் பார்வையில் முக்குலத்தோர் என்று சிந்தித்து,அப்பழுக்கற்ற அகமுடையார் பேரினத்தின் மீது வன்னிய நண்பர்கள் ஆதங்கம் கொள்கின்றனர்.

இதேபோல் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே நடைபெறும் சாதிய தீண்டாமை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சற்றும் தொடர்பில்லாத அகமுடையார் பேரினத்தின் மீது பழிச்சொல் வீசப்படுகிறது.

மீண்டுமொருமுறை நினைவுபடுத்திக் கொள்வது என்னவென்றால்,அகமுடையார் பேரின உறவுகளாகிய நாங்கள் அனைத்து தமிழ் உறவுகளையும் சமமாகப் பார்க்கிறோம்.வன்னியர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர் எனவே அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்,விஸ்வகர்மா குலத்தினர் எண்ணிக்கையில் சற்று குறைவாக உள்ளனர்,அதனால் அவர்களை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நாங்கள் நினைக்கவில்லை.எண்ணிக்கையில் என்ன உள்ளது,எண்ணத்தில் தான் உள்ளது நாம் எப்படிபட்ட குலத்தை சேர்ந்தவர் என்று.

தமிழர் என்ற நேர் கோட்டில் ஒட்டுமொத்த தமிழ் குடிகளுடன் கைகோர்த்து பயணிக்க விரும்புகின்றோம்,எங்களை முக்குலத்தோர் என்று சிறுமைப்படுத்தி ஒதுக்கிவிட வேண்டாம்.

முக்குலத்தோர் எனும் போது மற்ற தமிழ் சாதிகள் அகமுடையார்களிடம் சற்று இடைவெளியை பின்பற்றுகின்றனர்,அது அனைத்து தமிழ் உறவுகளுடன் அகமுடையார் பேரினத்திற்கு உள்ள தொடர்பை துண்டிக்கும் வகையில் உள்ளது.மேலும் முக்குலத்தோர் என்றால் தலா நான்கு மாவட்டங்களில் வாழும் சிறுபான்மை சாதி என்று தவறான கருத்து அகமுடையார் பேரினத்தின் மீது மற்ற தமிழ் சாதி நண்பர்களுக்கு தோன்றுகிறது.ஆனால் நிதர்சனத்தில் 20ற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவி வாழும் ஒரு குடி - அகமுடையார் பேரினம்.

எனவே அகமுடையார் பேரினத்தை பற்றி குறிப்பிடும் போது அழுத்தம் திருத்தமாக அகமுடையார் என்றே பதிவு செய்யுங்கள்.நல்ல கருத்தாக இருந்தால் வாழ்த்துங்கள்,தவறான விடயமாக இருக்கும் பட்சத்தில் சுட்டிக் காட்டுங்கள்,நாங்கள் திருத்திக் கொள்கிறோம்.முக்குலத்தோர் என்று பத்தோடு பதினொன்றாக இருக்க எங்கள் தன்மானம் என்றும் இடம் கொடுக்காது,அகமுடையார் பேரினம் என்ற தனித்தன்மையுடன் பயணிக்கவே நாங்கள் எப்போதும் விருப்பமாக உள்ளோம் 💛💚

நன்றி 🙏🙏🙏

Address

Madurai
625006

Website

Alerts

Be the first to know and let us send you an email when போர்க்குடி_அகம்படியர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category