15/07/2022
மதுரை கூடல்நகர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒளிரும் மதுரை ஒருங்கிணைப்பாளர் துரை விஜயபாண்டியன் தலைமை வகித்தார்.1982 அண்ணாமலை பல்கலைக்கழக பொறியாளர் குழும உறுப்பினர் சி.பி.ரவி.முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பனையோலை மணிவண்ணன் காந்தி கலந்து கொண்டார்.பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நீதிமணி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் ,ஊடகவழி கல்வி சிறந்ததா ,வகுப்பறை கல்வி சிறந்ததா என்ற பட்டிமன்றம் நடந்தது.1982 அண்ணாமலை பல்கலைக்கழக குழுமத்தை சேர்ந்த சி.பி.ரவி , திருமேனி ,அழகப்பன்,பழனியப்பன் ஆகியோர் ஆறாம் வகுப்பு மாணவிகள் அறுபத்தி ஐந்து பேருக்கு சீருடைகள் வழங்கினார்கள்.இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஹெப்சி ஆண்டனி மஸ்கீரின் அவர்கள் கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடத்தில் வந்த மாணவிகள் மற்றும் பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டார்கள்.