30/05/2026
*இந்நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு
https://www.facebook.com/share/p/14ekyVYe3ZU/
அனைவருக்கும் வணக்கம் !
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில், குழந்தைகள் கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்கும் வகையில் *”கோடைக்கொண்டாட்டம் -2026”* என்ற நிகழ்வு இன்று *(30.05.2026) காலை 11 மணிக்கு* இனிதே துவங்கியது. இதில் *திரு. T.R. ஜோதிலிங்கம், திரு. பாலசுப்ரமணியன்* அவர்களின் *"வேடிக்கை கணக்குகள் மற்றும் சிந்தனை விளையாட்டுகள் (Fun mathematics & mind Games) "* என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் *விரல்களின் உதவியுடன் கூட்டல் மற்றும் பெருக்கல் கணக்குகளை துல்லியமாகக் கணக்கிடும் முறைகள் குறித்து செய்முறை விளக்கங்கள்* அளிக்கப்பட்டன. மேலும், *எண்களை ஒழுங்குபடுத்தி Magic Square உருவாக்குவது, கவனச்சிதறல் இல்லாமல் துல்லியமாகக் கணக்கிடும் முறைகள், நினைவாற்றலை வளர்க்கும் மனக்கணக்குப் பயிற்சிகள், எண் புதிர்கள் மற்றும் சிந்தனை விளையாட்டுகள் போன்ற பல்வேறு செயல்பாடுகள்* கற்றுக்கொடுக்கப்பட்டன. இந்நிகழ்வில், குழந்தைகளே நேரடியாகப் பங்கேற்று கணக்குகளைச் செய்து பார்த்ததுடன், கேள்விகளுக்குப் பதிலளித்து தங்களது திறமைகளையும் வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு செயல்பாடும் *குழந்தைகளின் தர்க்கரீதியான சிந்தனை, கணக்கிடும் திறன், கவன ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் வகையில்* அமைந்திருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் செயல்பாடுகளில் பங்கேற்று பயனடைந்தனர்.
இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.