31/05/2026
சுவாமிமலையின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பெருமையைப் பிரதிபலிக்கும் நிரந்தர அஞ்சல் முத்திரையை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியது.
சுவாமிமலை முருகனின் ஆன்மிக, வரலாற்று மற்றும் கலாச்சார சிறப்பை போற்றும் வகையில், இன்று அஞ்சல் துறையால் நிரந்தர அஞ்சல் முத்திரை (Permanent Pictorial Cancellation) அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த நிரந்தர அஞ்சல் முத்திரையில், தமிழ் எழுத்தான “ஓம்” முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது. இது பிரணவ மந்திரத்தின் தெய்வீகத்தையும், சுவாமிமலையின் ஆன்மிக அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது.
சுவாமிமலையில் இறைவன் முருகன், சிவபெருமானுக்கு “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை உபதேசித்தார் என்ற புராண வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.