06/07/2026
🪑 குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக 25 நாற்காலிகள் வழங்கப்பட்டன 🪑
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு சி. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர்களின் மக்கள் நல ஆட்சிக் கனவை முன்னெடுத்தும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சருமான திரு வினோத் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், 33வது வார்டில் இயங்கி வரும் பால்வாடியில் பயிலும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
அப்பால்வாடியில் பணியாற்றும் திருமதி உமா அவர்கள், 25 குழந்தைகளும் அமர்ந்து படிப்பதற்கு நாற்காலிகள் தேவை என கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை உடனடியாக ஏற்று, இன்று பால்வாடிக்கு 25 நாற்காலிகள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தஞ்சை கிழக்கு மாவட்ட பொருளாளர் திரு விஜய் சந்திரன் அவர்கள் நேரில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நாற்காலிகளை வழங்கி சிறப்பித்தார். உடன் பகுதி செயலாளர் திரு தெட்சிணாமூர்த்தி அவர்கள், திரு பிரபு அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த நலத்திட்ட உதவி அரவிந்த் E.J., தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை அமைப்பாளர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
"குழந்தைகளின் கல்வி வளர்ச்சியே சமூகத்தின் எதிர்கால வளர்ச்சி" என்ற எண்ணத்துடன், மக்கள் நலப் பணிகள் தொடரும்.
மக்களின் நலனுக்காக என்றும் களத்தில்...
#சி_ஜோசப்_விஜய் #அமைச்சர்_வினோத் #விஜய்சந்திரன் #தெட்சிணாமூர்த்தி #அரவிந்த் மக்கள்சேவை தாராசுரம் 33வதுவார்டு TVK தவெக தஞ்சைகிழக்குமாவட்டம்