Namma Shoolagiri / நம்ம சூளகிரி

Namma Shoolagiri / நம்ம சூளகிரி தன் சாதிக்காக
அடிக்கடி அரிவாளேந்தும் நீ.. நம்
தமிழ் சாதிக்காக
தலை நிமிர்த்த மறந்ததேன்.

28/04/2026

கிராமத்தில் இல்லாத VAOக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

உயர் நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்பு

வழக்கு விவரம்

வழக்கு எண்: W.P.(MD) No. 13916 of 2019
தேதி: 01.07.2019
வழக்கு: A. Selvagurunathan v. The District Collector & Others
நீதிமன்றம்: மதுரை கிளை, மதராஸ் உயர்நீதிமன்றம்
நீதிபதி: நீதியரசர் R. Suresh Kumar

வழக்கின் முக்கிய பிரச்சனை

Melaiyur Revenue Village-இல் பணிபுரியும் Village Administrative Officer (VAO), அந்த கிராமத்தில் வசிக்கவில்லை என்று மனுவில் கூறப்பட்டது. அவர் வெள்ளிக்கிழமை கிராமத்தை விட்டு சென்று, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை திரும்புவதாகவும், இதனால் மக்களுக்கு உடனடி சேவைகள் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மனுதாரர் குற்றம்சாட்டினார்.

இதனால் ஏற்படும் பாதிப்புகள்

VAO கிராமத்தில் இல்லாதபோது:

வருமானச் சான்று, சமூகச் சான்று போன்ற சேவைகள் தாமதமாகும்.

அவசர நிர்வாகத் தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படும்.

பொதுமக்கள் நேரடியாக அலுவல் உதவி பெற முடியாத நிலை உருவாகும்.
என்ற பொதுப் பிரச்சனை நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இதே பிரச்சனை முன்பும் பல வழக்குகளில் நீதிமன்ற கவனத்திற்கு வந்ததாகவும் Court குறிப்பிட்டது.

மனுதாரர் எடுத்த நடவடிக்கை

மனுதாரர் Collector, RDO, Tahsildar உள்ளிட்ட அதிகாரிகளிடம் representation கொடுத்தார். பின்னர் தகவல் பெற முயற்சி செய்தபோதும் பிரச்சனைக்கு நடவடிக்கை இல்லை என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

சட்ட நிலை என்ன?

VAO தன் charge village-இலேயே வசிக்க வேண்டும் என்பது நீதிமன்றம் புதியதாக உருவாக்கிய கோட்பாடு அல்ல. முன்னர் K.S. Vivekanandam வழக்கில், Tamil Nadu Ministerial Service Rules-இன் Rule 38(b)(iii) மற்றும் Rule 10 அடிப்படையில், VAO தன் பொறுப்பு கிராமத்திலேயே வசிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

முன்னோடி தீர்ப்பு என்ன சொல்கிறது?

K.S. Vivekanandam வழக்கில், VAOக்கள் கிராமத்தில் தங்காமல் நகரங்களில் அல்லது district headquarters-ல் இருந்து பணிபுரிவது காரணமாக, கிராம மக்களுக்கு சான்றிதழ் மற்றும் grievance redressal போன்ற சேவைகள் பாதிக்கப்படுவதாக Division Bench பதிவு செய்தது. மேலும், VAOக்கள் விதிமுறைகளை மீறினால் மட்டும் அல்லாமல், அவர்களை கண்காணிக்காத superior officers மீதும் disciplinary action எடுக்கலாம் என்று Court கூறியது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தின் கருத்து

Justice R. Suresh Kumar, இது புதிய பிரச்சனை அல்ல; ஏற்கனவே நீதிமன்றம் பலமுறை directions கொடுத்துள்ளது என்றார். அவை முறையாக செயல்படுத்தப்படாததால், மக்கள் மீண்டும் நீதிமன்றம் வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று Court சுட்டிக்காட்டியது.

நீதிமன்றம் கண்டிப்பு

VAO கிராமத்தில் இல்லாமல் இருப்பது ஒரு சாதாரண அலட்சியம் அல்ல; அது அதிகாரப்பூர்வ கடமையை பாதிக்கும் விஷயம் என நீதிமன்றம் பார்த்தது. அதேபோல், இதுபோன்ற புகார்களில் action எடுக்காத Tahsildar, RDO, Collector போன்ற மேல் அதிகாரிகளின் கண்காணிப்பு பங்கும் முக்கியம் என நீதிமன்றம் வலியுறுத்தியது.

உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவுகள்

இந்த வழக்கை முடிக்கும்போது Court பல முக்கிய directions கொடுத்தது:

ஒவ்வொரு மாவட்டத்திலும், RDO தலைமையில் grievance cell அமைக்க வேண்டும்; அதில் இரு Tahsildar rank அதிகாரிகள் சேர்க்கப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கு, VAO மீது complaint கொடுக்க grievance cell உள்ளது என்று public notice / advertisement அளிக்க வேண்டும்.

புகார் வந்தவுடன், 3 நாட்களுக்குள் VAO-வை summon செய்து enquiry நடத்தி report தயார் செய்ய வேண்டும்.
தவறு இருப்பதாக grievance cell கருதினால், disciplinary action பரிந்துரைக்க வேண்டும்.

இதற்கான grievance cell அமைப்பை இரண்டு வாரங்களுக்குள் Collector செய்து compliance தாக்கல் செய்ய வேண்டும் என்று Court உத்தரவிட்டது.

உங்கள் உரிமை என்ன?

VAO கிராமத்தில் கிடைப்பதில்லை, சேவைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என்றால்:

Collector / RDO / Tahsildar-க்கு complaint கொடுக்கலாம்
தகவல் கேட்டு RTI மனு அளிக்கலாம்.

தேவையான நிலையில் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.

என்பதை இந்த தீர்ப்பு நடைமுறை ரீதியாக நினைவூட்டுகிறது.

இதன் முக்கிய அம்சம்

VAO பணிபுரியும் கிராமத்தில் தங்க வேண்டும் என்பது விருப்ப விஷயம் அல்ல; சேவை விதிமுறைகளோடு சம்பந்தப்பட்ட கடமையாக நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. விதிமுறை மீறல் இருந்தால், VAO மட்டும் அல்லாமல், அவரை கண்காணிக்க வேண்டிய மேலதிகாரிகளின் பொறுப்பும் கேள்விக்குள்ளாகலாம்.

நாம் சிந்திக்க வேண்டும்

“VAO கிராமத்தில் இல்லையெனில் — அது சாதாரண தவறு மட்டும் அல்ல; மக்கள் சேவையை பாதிக்கும் கடுமையான நிர்வாக குறை.”

“உங்கள் உரிமையை நீங்கள் அறிந்தால் தான் — அதிகாரி பொறுப்புடன் செயல்படுவார்.”

அன்புடன்
சுப. கார்த்திகேயன்

28/04/2026
18/04/2026

ஜெயிலுக்கு நேரமாச்சி...
* பத்திரப்பதிவு செய்ய ரூ.1,00,000 லஞ்சம் வாங்கிய காட்பாடி சார்பதிவாளர் மற்றும் ஆவண எழுத்தர் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை + ரூ.25,000 அபராதம் விதித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவு...
2019 முதல் 2026 வரை...

பத்து ரூபாய் இயக்கம் மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் IG அவர்களை இன்று 17.04.2026 மாலை 04.00 மணியளவில் நேரில் சந்தித்து...
18/04/2026

பத்து ரூபாய் இயக்கம்

மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் IG அவர்களை இன்று 17.04.2026 மாலை 04.00 மணியளவில் நேரில் சந்தித்து சாத்தான் குளம் குற்றவாளிகளை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி மனு கொடுத்து உள்ளோம்

பத்து ரூபாய் இயக்க பொது செயலாளர் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜு மாநில செயலாளர் வழக்கறிஞர் க. சதீஷ்குமார்.
மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. ரமேஷ் குமார் மாவட்ட அமைப்பாளர் எஸ்.முருகானந்தம் மனு கொடுத்தனர்

மனு விபரம்

பெறுதல்
காவல் துறை தலைவர் அவர்கள்
தென் மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம்
மதுரை

பொருள்: நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சாத்தான்குளம் தூக்கு தண்டனை குற்றவாளிகளை காவல்துறை பதவியில் இருந்து நிரந்திர நீக்கம் (Dismiss) செய்ய கோருதல் தொடர்பாக

அன்புடையீர் வணக்கம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அப்பாவி தந்தை மகன் இருவரும் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மாண்பமை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எஸ்சி எண் 470/2020 –ல் 23.03.2026-ல் குற்றவாளிகளுக்கு தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது. 06.04.2026-ல் இரட்டை தூக்கு தண்டனை அனைத்து குற்றவாளுக்கும் நீதிமன்றம் வழங்கி உள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை நீதிமன்றத்தால் இரட்டை கொலைக் குற்றவாளிகள் என்று இரட்டை தூக்கு தண்டனை பெற்று உள்ளார்கள்.

நீதிமன்றத்தால் இரட்டை கொலைக் குற்றவாளிகள் என்று இரட்டை தூக்கு தண்டனை தற்போது இன்று வரையில் காவல் துறை பதவியில் இருப்பதும் கடந்த 6 ஆண்டுகளாக இந்த குற்றவாளிகள் இரட்டை கொலை வழக்கில் சிறையில் உள்ள நிலையில் காவல் துறை பதவியில் தொடர்ந்து நீடித்து வருவதும் காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது இவர்கள் காவல் துறை பதவியில் உள்ள ஒவ்வொரு நிமிடமும் கண்ணியமிக்க காவல் துறைக்கு அவமானமாகும்.

தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மேல் முறையீடு) விதிகள் மற்றும் இந்திய அரசியலைம்ப்பு சட்ட உறுப்பு 311 –ன் படி இந்த குற்றவாளிகளை காவல் துறை பதவியில் இருந்து நிரந்திர பணிநீக்கம் (Dismiss) செய்யப்பட வேண்டியவர்கள் ஆனால் தற்போது வரை இவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு சம்பளத்தில் 75% பிழைப்பூதியம் பெற்றுவருகின்றனர்

தூக்கு தண்டனை குற்றவாளிகளை உடனடியாக எவ்வித விசாரணையும் இல்லாமல் நிரந்திர பதவி நீக்கம் செய்ய தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்களுக்கு சட்டப்படியான அதிகாரம் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆந்திராவை சேர்ந்த பெண்னை தாயின் கண்முன் பாலியல் பலாத்காரம் செய்த காவலர்களை காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த 27 ம் நாளில் நிரந்தர பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் என்பதை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.


எனவே நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது காவல்துறை பதவியில் உள்ள இரட்டை கொலை குற்றவாளிகளை காவல் துறை பதவியில் இருந்து நிரந்திர பதவி நீக்கம் (Dismiss) செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றோம்.


அனுப்புநர்:-
Dr நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்
பொதுச் செயலளர்
பத்து ரூபாய் இயக்கம்
094456 75801

08/04/2026
06/04/2026

இங்க தப்பு செஞ்சா தப்பிக்கவே முடியாதுன்னும்
தப்பு செஞ்சா இது மாதிரி கடுமையான தண்டனை எல்லாம் கிடைக்கும்ன்னு ஒவ்வொருத்தனுக்கும் பயம் இருக்கணும் அதுவும் குறிப்பா அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு அவசியம் இந்த பயம் இருக்கணும்

04/04/2026

டெல்லி கஞ்சவாலா பகுதியில் இயங்கி வந்த போலி "sensodyne" டூத் பேஸ்ட் தயாரிப்பு நிறுவனத்தை முடக்கிய குற்றப்பிரிவு போலீசார்..

03/04/2026

விழிப்புணர்வு பதிவு
எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல

#பதிவு #விழிப்புணர்வு

ஓட்டுக்கு பணமாக பிச்சை எடுத்தால் பிச்சை எடுத்து வைத்த சேமித்த சிறுவாடு பையுடன் சேர்த்தி மொத்தமாக காணாமல் போகும்

Address

Krishnagiri
635115

Telephone

+917904058717

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Shoolagiri / நம்ம சூளகிரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category