இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉன் Inna lillahi wa inna ilayhi raji'un

  • Home
  • India
  • Kilakarai
  • இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉன் Inna lillahi wa inna ilayhi raji'un

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉன்

Inna lillahi wa inna ilayhi raji'un Death news services provide information regarding deceased individuals, mainly in home town Kilakarai

 #வபாத்_அறிவிப்பு #கீழக்கரை_பழைய_குத்பா_பள்ளி_ஜமாத்தைச்சேர்ந்த, மர்ஹூம்.முகம்மது சதக்கத்துல்லா அவர்களின் மகனும் மர்ஹூம்....
15/06/2026

#வபாத்_அறிவிப்பு

#கீழக்கரை_பழைய_குத்பா_பள்ளி_ஜமாத்தைச்சேர்ந்த, மர்ஹூம்.முகம்மது சதக்கத்துல்லா அவர்களின் மகனும் மர்ஹூம்.செய்யது அபுதாஹீர் மர்ஹூம்., செய்யது அகமது கபீர் (ஶ்ரீலங்கா), காதர், சாகுல் ஹமீத், அவர்களின் சகோதரமாகிய முஹம்மது ஆதில் முஹம்மது அல் பத்ரான் அவர்களின் தகப்பனாருமாகிய,

#முகம்மது_சுல்த்தான்

அவர்கள் இன்று 15/06/2026 இரவு 9.30 மணியளவில், வபாத்தாகிவிட்டார்கள்,

#இன்னாலில்லாஹி_வயின்னாஇலைஹி_ராஜிவூன்.

அன்னாரின் மஃபிரத்திற்க்காகவும், மறுமை வாழ்விற்க்காகவும் அனைவரும் துவா செய்து கொள்ளுங்கள்.

நல்லடக்கம்:
அன்னாரின் ஜனாஸா நாளை 16/06/26 காலை சுமார் 9.00 am மணியளவில் ப. கு. பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

https://www.facebook.com/share/1EVKyWWDPh/

Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉 Salem, Halihul Jaman VM, Raah Rahman, Usr...
15/06/2026

Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉 Salem, Halihul Jaman VM, Raah Rahman, Usri Thameem, Makeen Mohammed, மார்ஸ் பேன்ஸி ஏர்வாடி நெல்லை., Ahamed Kamil, Ramees Khan, Mohamed Meera Sahib, Syed Hameed

மஸ்ஜிதுல் ஹராமில் இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காகப் பணியாளர்களால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஜனாஸா துணிகளின் ஆறு வண்ணங...
14/06/2026

மஸ்ஜிதுல் ஹராமில் இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காகப் பணியாளர்களால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஜனாஸா துணிகளின் ஆறு வண்ணங்களுக்குப் பின்னால் உள்ள அர்த்தங்களை விளக்குகிறது.வெள்ளை: இஹ்ராம் நிலையில் மரணமடைந்த ஒருவரைக் குறிக்கிறது, அல்லது தூய்மையை உணர்த்துகிறது.மஞ்சள்/பழுப்பு/கருப்பு: இந்த நிறங்கள் பெரும்பாலும் முக்கியப் பிரமுகர்கள், குறிப்பிட்ட தலைவர்கள் ஆகியோருக்காகவோ அல்லது பாலினம் மற்றும் வயதுக் குழுக்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவோ பயன்படுத்தப்படுகின்றன.நீலம்/பச்சை: நீலம் பொதுவாக மருத்துவமனை அல்லது மருத்துவ நிலையத்தில் இறந்த ஒருவரைக் குறிக்கிறது, அதே சமயம் பச்சை பெரும்பாலும் குழந்தைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

 #காயிப்_ஜனாஸா_தொழுகைبِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.இன்றையதினம் அபிஸினி...
14/06/2026

#காயிப்_ஜனாஸா_தொழுகை
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இன்றையதினம் அபிஸினியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவீட்டார். எனவே வாருங்கள்; அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன். [ஸஹீஹுல் புகாரி: 1245, 1317,1318, 1320,1333,3881, 3877]

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், "நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்து விட்டார். எனவே உங்கள் சகோதரருக்குத் தொழுகை நடத்துங்கள்" என்று கூறினார்கள். [அறிவிப்பவர்: முஸ்னத் அஹ்மத்:16146]

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பிரேதம் எதிரில் இல்லாவிட்டாலும் இறுதித் தொழுகை(ஃகாயிப் ஜனாஸா தொழுகை) நடத்தலாம் என்றே பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். வேறுசிலர் கூறுவதாவது: பிரேதம் எதிரில் இல்லாமல் இறுதித் தொழுகை நடத்தலாகாது. நஜாஷி மன்னருக்கு அவரது பிரேதம் எதிரில் இல்லாமலேயே தொழுகை நடத்தியதற்கான காரணம், அவர் வாழ்ந்த அபிசீனிய நாட்டில் அப்போது முஸ்லிம்கள் யாரும் இருக்கவில்லை. எனவே தொழவைக்ககாமலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டுவிட்டார். அவர் இறந்த செய்தியை நபியவர்களுக்கு இறைவன் செரியபடுத்தினான். அதையடுத்து அவருக்காக நபியவர்கள் மதீனாவில் தொழவைத்தார்கள். இவ்வாறு நஜாஷி மன்னருக்கு மட்டும்தான் நடைபெற்றது. வேறு யாருக்கும் நடைபெறவில்லை(துஹஃபத்துல் அஹவதி)
அவர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்துவிட்டார்" என்று நபியவர்கள் கூறிய செய்தி இவர்களது கருத்துக்கு வலுவூட்டுகிறது.

அஹ்மத் பின் ஹன்பல்(ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி(ரஹி) ஆகியோர், "அடக்கம் செய்யபட்டதிலிருந்து ஒரு மாதம் காலம்வரை அடக்கத் தலம் அருகில் தொழலாம்", என்று கூறுகின்றனர்

நபி(ஸல்) அவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது ச அத் பின் உபாதா(ரலி) அவர்களின் தாயார் இறந்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் திரும்பியதும் அவர் அருகில் ஜனாஸா தொழுகை தொழுதார்கள். அப்போது ஒரு மாதம் கழிந்துவிட்டிருந்தது. [திர்மிதி 959 இது நபித்தோழர் விடப்பட்ட முர்ஸல் வகை ஹதீஸ் ஆகும்]

மண்ணறை (கப்று) அருகில் (இறுதித் தொழுகை) தொழுவது:
ஸுலைமான் ஷைபானி கூறினார்:
தனித்திருந்த கப்ரைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள் அதில் எங்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்துத் தொழுதோம் என்று நபி(ஸல்) அவர்களுடன் சென்ற ஒருவர் எனக்கு அறிவித்தார்' என ஷஅபீ கூறினார். நாங்கள் 'அம்ரின் தந்தை(யாகிய ஷஅபீ )யே! உங்களுக்கு அதை அறிவித்தவர் யார்?' எனக் கேட்டதும் 'இப்னு அப்பாஸ்(ரலி) தாம்' என்றார் அவர். [ஸஹீஹுல் புகாரி:857,1319,1322, ஸஹீஹ் முஸ்லிம்: 1739]
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த "பெண்" அல்லது "இளைஞர்" ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். "அவர் இறந்துவிட்டார்" என மக்கள் தெரிவித்தனர். "நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்" என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். பிறகு "இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக்காணப்படுகின்றன. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்" என்று கூறினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. [ஸஹீஹ் முஸ்லிம்: 1742]

  #ஃபத்வா_தொழுகை(Gஙாஇப்) மறைவான ஜனாஸா தொழுகை தொடர்பான மார்க்க விளக்கம்Part  # 3அந்தவகையில், தற்போது நாட்டில் ஏற்பட்டிருக...
14/06/2026


#ஃபத்வா_தொழுகை

(Gஙாஇப்) மறைவான ஜனாஸா தொழுகை தொடர்பான மார்க்க விளக்கம்

Part # 3

அந்தவகையில், தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் மரணித்தவரது ஜனாஸாவுக்குரிய தொழுகையை சுகாதார வழிமுறைகளைப் பேணி, குறிப்பிட்ட சிலருக்கே ஒன்று சேர்ந்து ஜனாஸாத் தொழுகை நாடாத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறே ஊர்கள் முடக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் வேறு காரணங்களினால் மரணித்தவர்களின் ஜனாஸாத் தொழுகைகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

எனவே, இவ்வாறான ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்வதற்கு முடியாத நிர்ப்பந்த நிலையில் உள்ளவர்கள் மறைவான ஜனாஸாத் தொழுகையை தொழுதுகொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

பொதுவாக ஏதாவது ஒரு காரணத்தினால் ஒரு ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ள முடியாமல் போகும் போது, அந்த ஜனாஸா பிறரால் தொழுவித்து அடக்கம் செய்யப்பட்ட போதிலும், அந்த ஜனாஸாவுடைய கப்ருக்கு அருகில் ஜனாஸாத் தொழுகையை தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

(وَإِذَا صُلِّيَ عَلَيْهِ) أَيْ الْمَيِّتِ (فَحَضَرَ مَنْ) أَيْ شَخْصٌ (لَمْ يُصَلِّ) عَلَيْهِ (صَلَّى) عَلَيْهِ نَدْبًا (مغني المحتاج – فَصْلٌ فِي دَفْنِ الْمَيِّتِ وَمَا يَتَعَلَّقُ بِهِ)

இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.


عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ امْرَأَةً – أَوْ رَجُلًا – كَانَتْ تَقُمُّ المَسْجِدَ – وَلاَ أُرَاهُ إِلَّا امْرَأَةً – فَذَكَرَ حَدِيثَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ صَلَّى عَلَى قَبْرِهَا. (صحيح البخاري: 460)

மஸ்ஜிதை சுத்தம் செய்யக்கூடிய பெண்மனி (அல்லது ஒரு ஆண்) மரணித்து அடக்கம் செய்யப்பட்ட பின்பு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பெண்ணுடைய கப்ருக்கு அருகாமையில் தொழுதார்கள் என அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி : 460)

அந்தவகையில் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஊர்கள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்த ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ள முடியவில்லையோ, அவர்களுக்காக மேற்கூறப்பட்ட அடிப்படையில் மறைவான ஜனாஸாத் தொழுகையை தொழுதுகொள்ள முடியும், அல்லது முடக்கம் நீக்கப்பட்டதன் பின்னர் அந்தக் கப்ருக்கு அருகாமையில் ஜனாஸாத் தொழுகையை தொழுதுகொள்வதற்கும் மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

அல்லாஹு தஆலா இத்தகைய நோயினால் மரணிப்பவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸை அருள்வானாக, அத்துடன் அவர்களது குடும்பத்தினருக்கு மன ஆறுதலைக் கொடுத்தருள்வானாக.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.


அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்

செயலாளர், பத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

மேற்பார்வையாளர்- பத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)

தலைவர்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

  #ஃபத்வா_தொழுகை(Gஙாஇப்) மறைவான ஜனாஸா தொழுகை தொடர்பான மார்க்க விளக்கம்Part  # 2மையித்தை கிப்லாவின் திசையில் வைத்து நேரடி...
14/06/2026


#ஃபத்வா_தொழுகை

(Gஙாஇப்) மறைவான ஜனாஸா தொழுகை தொடர்பான மார்க்க விளக்கம்

Part # 2

மையித்தை கிப்லாவின் திசையில் வைத்து நேரடியாக அதன்மீது தொழுகை நடாத்துவதே ஜனாஸாத் தொழுகையின் பொதுவான முறையாகும்.

அந்த முறைக்கு மாற்றமாக வெளியூரில் மரணித்த ஒருவருக்காக நடாத்தப்படும் தொழுகைக்கு (பGஙாஇப்) மறைவான ஜனாஸாத் தொழுகை என்று சொல்லப்படும். இந்த மறைவான ஜனாஸாத் தொழுகை விடயத்தில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.



ஷாபிஈ மத்ஹப் உட்பட பெரும்பான்மையான அறிஞர்கள் மறைவான ஜனாஸாத் தொழுகை தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது என குறிப்பிடுகின்றனர்.



(وَيُصَلَّى عَلَى الْغَائِبِ عَنْ الْبَلَدِ) وَإِنْ قَرُبَتْ الْمَسَافَةُ وَلَمْ يَكُنْ فِي جِهَةِ الْقِبْلَةِ خِلَافًا لِأَبِي حَنِيفَةَ وَمَالِكٍ؛ لِأَنَّهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – «أَخْبَرَ النَّاسَ وَهُوَ بِالْمَدِينَةِ بِمَوْتِ النَّجَاشِيِّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ وَهُوَ بِالْحَبَشَةِ» . رَوَاهُ الشَّيْخَانِ. (مغني المحتاج – فَصْلٌ فِي الصَّلَاةِ عَلَيَّ الْمَيِّت)

(وَيُصَلَّى عَلَى الْغَائِبِ عَنْ الْبَلَدِ) بِأَنْ يَكُونَ بِمَحَلٍّ بَعِيدٍ عَنْ الْبَلَدِ بِحَيْثُ لَا يُنْسَبُ إلَيْهَا عُرْفًا أَخْذًا مِنْ قَوْلِ الزَّرْكَشِيّ عَنْ صَاحِبِ الْوَافِي وَأَقَرَّهُ أَنَّ خَارِجَ السُّورِ الْقَرِيبَ مِنْهُ كَدَاخِلِهِ وَيُؤْخَذُ مِنْ كَلَامِ الْإِسْنَوِيِّ ضَبْطُ الْقُرْبِ هُنَا بِمَا يَجِبُ الطَّلَبُ مِنْهُ فِي التَّيَمُّمِ وَهُوَ مُتَّجَهٌ إنْ أُرِيدَ بِهِ حَدُّ الْغَوْثِ لَا الْقُرْبِ وَلَا يُشْتَرَطُ كَوْنُهُ فِي جِهَةِ الْقِبْلَةِ وَذَلِكَ لِأَنَّهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – «أَخْبَرَ بِمَوْتِ النَّجَاشِيِّ يَوْمَ مَوْتِهِ وَصَلَّى عَلَيْهِ هُوَ وَأَصْحَابُهُ» رَوَاهُ الشَّيْخَانِ وَكَانَ ذَلِكَ سَنَةَ تِسْعٍ وَجَاءَ «أَنَّ سَرِيرَهُ رُفِعَ لَهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – حَتَّى شَاهَدَهُ» وَهَذَا بِفَرْضِ صِحَّتِهِ لَا يَنْفِي الِاسْتِدْلَالَ لِأَنَّهَا – وَإِنْ كَانَتْ صَلَاةَ حَاضِرٍ بِالنِّسْبَةِ لَهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – هِيَ صَلَاةُ غَائِبٍ بِالنِّسْبَةِ لِأَصْحَابِهِ. (تحفة المحتاج – فَصْلٌ فِي الصَّلَاةِ عَلَيَّ الْمَيِّت)

الْمُتَّجَهُ أَنَّ الْمُعْتَبَرَ الْمَشَقَّةُ وَعَدَمُهَا فَحَيْثُ شَقَّ الْحُضُورُ وَلَوْ فِي الْبَلَدِ لِكُبْرِهَا وَنَحْوِهِ صَحَّتْ وَحَيْثُ لَا وَلَوْ خَارِجَ السُّورِ لَمْ تَصِحَّ (حاشية الشرواني)

(وَيُصَلِّي إمَامٌ) أَعْظَمُ (وَغَيْرُهُ عَلَى غَائِبٍ عَنْ الْبَلَدِ، وَلَوْ كَانَ دُونَ مَسَافَةِ قَصْرٍ، أَوْ) كَانَ (فِي غَيْرِ جِهَةِ الْقِبْلَةِ) أَيْ: قِبْلَةِ الْمُصَلِّي (بِالنِّيَّةِ إلَى شَهْرٍ) كَالصَّلَاةِ عَلَى الْقَبْرِ، لَكِنْ يَكُونُ الشَّهْرُ هُنَا مِنْ مَوْتِهِ، كَمَا فِي شَرْحِ الْمُنْتَهَى لِأَنَّهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – صَلَّى عَلَى النَّجَاشِيِّ فَصَفَّ – أَيْ: النَّاسَ – وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا ” (كشاف القناع عن متن الإقناع -فَصْلٌ فِي الصَّلَاةِ عَلَى الْمَيِّتِ)



இதற்குப் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொள்கின்றனர்.



عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى النَّجَاشِيَّ فِي اليَوْمِ الَّذِي مَاتَ فِيهِ خَرَجَ إِلَى المُصَلَّى، فَصَفَّ بِهِمْ وَكَبَّرَ أَرْبَعًا. (صحيح البخاري : 1245)



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நஜாஷி மன்னர் அவர்கள் மரணித்த நாளிலேயே அவர் மரணித்ததைப் பற்றி (மக்களுக்கு) தெரிவித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழும் இடத்தை நோக்கிச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றனர். நபியவர்கள் நான்கு தக்பீர் கூறி தொழுகையை நடாத்தினார்கள் என அபூ ஹு ரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி : 1245)



ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் வேறு சில ஆதாரங்களை அடிப்படையாக வைத்து அவ்வாறான தொழுகை ஒன்று இல்லை என்று கூறுகின்றனர்.



(Gஙாஇப்) ஜனாஸா தொழமுடியும் என்ற ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில், வெளியூரில் மரணித்த ஒருவருக்காகவோ அல்லது ஊரில் மரணித்திருந்திருந்தாலும் நோய் அல்லது முடக்கம் போன்ற நிர்ப்பந்தமான காரணங்களினாலோ அந்த ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள், அதற்காக மறைவான ஜனாஸாத் தொழுகையை தொழுதுகொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

  #ஃபத்வா_தொழுகை(Gஙாஇப்) மறைவான ஜனாஸா தொழுகை தொடர்பான மார்க்க விளக்கம்Part  # 1எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; சலாத்தும்,...
14/06/2026


#ஃபத்வா_தொழுகை

(Gஙாஇப்) மறைவான ஜனாஸா தொழுகை தொடர்பான மார்க்க விளக்கம்

Part # 1

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஜனாஸாவுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று அதன்மீது தொழுகை நடாத்துவதாகும். அந்தத் தொழுகையின் நோக்கம் மரணித்தவருக்கு துஆ செய்வதாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.



عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وآله وسلم قال: «مَا مِنْ مَيِّتٍ يُصَلِّى عَلَيْهِ أُمَّةٌ مِنَ الْمُسْلِمِينَ يَبْلُغُونَ مِائَةً كُلُّهُمْ يَشْفَعُونَ لَهُ إِلَّا شُفِّعُوا فِيهِ. (صحيح مسلم : 947)

மரணித்த ஒருவருக்கு நூறுபேர் கொண்ட முஸ்லிம் குழுவினர் (இறுதித்) தொழுகை தொழுது, அவர்களில் ஒவ்வொருவரும் அவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படாமல் இருப்பதில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹு முஸ்லிம் : 947)



عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ مَاتَ ابْنٌ لَهُ بِقُدَيْدٍ – أَوْ بِعُسْفَانَ – فَقَالَ: يَا كُرَيْبُ، انْظُرْ مَا اجْتَمَعَ لَهُ مِنَ النَّاسِ، قَالَ: فَخَرَجْتُ، فَإِذَا نَاسٌ قَدِ اجْتَمَعُوا لَهُ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: تَقُولُ هُمْ أَرْبَعُونَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: أَخْرِجُوهُ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ، فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلًا، لَا يُشْرِكُونَ بِاللهِ شَيْئًا، إِلَّا شَفَّعَهُمُ اللهُ فِيهِ»، (صحيح مسلم : 948)

இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு மா அவர்களின் அடிமையான குறைப் பின் (அபீமுஸ்லிம்) ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு மா அவர்களுடைய புதல்வர் ஒருவர் “குதைத்” அல்லது “உஸ்ஃபான்” எனுமிடத்தில் மரணித்துவிட்டார். அப்போது இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு மா அவர்கள், “குறைப்! மக்கள் ஒன்றுகூடிவிட்டனரா எனப் பாருங்கள்” என்று கூறினார்கள். நான் சென்று பார்த்தபோது அங்கு மக்களில் சிலர் குழுமியிருந்தனர். நான் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு மா அவர்களிடம் வந்து விடயத்தைச் சொன்னபோது “அவர்கள் நாற்பது பேர் இருப்பார்களா, சொல்லுங்கள்” என்றார்கள். நான் “ஆம்” என்றேன். “அதை (ஜனாஸாவை) எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்” என்று கூறிவிட்டு, “ஒரு முஸ்லிம் மரணித்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்று இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு மா அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹு முஸ்லிம் : 948)



ويُسَنُّ) حَيْثُ كانُوا سِتَّةً فَأكْثَرَ (جَعْلُ صُفُوفِهِمْ ثَلاثَةً فَأكْثَرَ) لِلْخَبَرِ الصَّحِيحِ «مَن صَلّى عَلَيْهِ ثَلاثَةُ صُفُوفٍ فَقَدْ أوْجَبَ أيْ غُفِرَ لَهُ» كَما فِي رِوايَةٍ والمَقْصُودُ مَنعُ النَّقْصِ عَنْ الثَّلاثَةِ لا الزِّيادَةِ عَلَيْها ومِن ثَمَّ قالَ فَأكْثَرَ وفِي مُسْلِمٍ «ما مِن مُسْلِمٍ يُصَلِّي عَلَيْهِ أمَةٌ مِن المُسْلِمِينَ يَبْلُغُونَ مِائَةً كُلُّهُمْ يَشْفَعُونَ لَهُ إلّا شُفِّعُوا فِيهِ» وفِيهِ أيْضًا مِثْلُ ذَلِكَ فِي الأرْبَعِينَ(تحفة المحتاج – فَصْلٌ فِي الدَّفْنِ وَمَا يَتْبَعُهُ)

இணை வைத்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா ?கேள்வி :வெளிப்படையில் இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்தவர் அதே நிலையில் மரணித்து வி...
14/06/2026

இணை வைத்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா ?

கேள்வி :
வெளிப்படையில் இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்தவர் அதே நிலையில் மரணித்து விட்டால் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா?

பதில் :
நம்முடைய வெளிப்படையான பார்வையில் ஒருவர் இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்து அதே நிலையில் மரணித்து விட்டார் என்றால் அவருக்கு ஜனாஷா தொழுகை நடத்துவது கூடாது. அதே நேரத்தில் ஒருவர் மரணிப்பதற்கு முன்னால் இணைவைக்கின்ற காரியங்களிலிருந்து வெளியேறிவிட்டார் என்று சாட்சிகளின் மூலம் தெளிவாகிவிடுமென்றால் அவரை முஃமினாகத்தான் நாம் கருதவேண்டும். அது போன்று சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை இணைவைத்தவர் என்று நாம் முடிவு செய்யக் கூடாது.
இறுதி வரை இணைகற்பிக்கும் காரியங்களை செய்து மரணித்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதும், பாவமன்னிப்பிற்காக பிரார்த்தனை செய்வதும் கூடாது என்பதற்கான ஆதாரங்களைக் காண்போம்.

ஆதாரம் : 1
مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ (113) وَمَا كَانَ اسْتِغْفَارُ إِبْرَاهِيمَ لِأَبِيهِ إِلَّا عَنْ مَوْعِدَةٍ وَعَدَهَا إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ إِنَّ إِبْرَاهِيمَ لَأَوَّاهٌ حَلِيمٌ (114)} )التوبة(

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர் (அல்குர்ஆன் 9 : 113, 114)

மேற்கண்ட வசனத்தில் நபியும், இறைநம்பிக்கை கொண்டவர்களும் இணைகற்பிப்போருக்கு பாவமன்னிப்பு தேடுவது கூடாது என அல்லாஹ் தடுக்கின்றான்.
ஜனாஸா தொழுகை என்பது இறந்தவருக்காக கேட்கின்ற பாவமன்னிப்பு பிரார்த்தனைதான். எனவே இணைகற்பித்த நிலையில் மரணித்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது கூடாது என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

 #ஜனாஸா_தொழுகைஅதிகமான வேறு இரு ஷர்த்துகளும் இதற்கு உண்டு.1. கபன் துணிகள் சந்u வேண்டும்.2. வேண்டும்.ஃபர்ளுகள்:1. ஃபர்ளான ...
14/06/2026

#ஜனாஸா_தொழுகை

அதிகமான வேறு இரு ஷர்த்துகளும் இதற்கு உண்டு.

1. கபன் துணிகள் சந்u வேண்டும்.
2. வேண்டும்.

ஃபர்ளுகள்:

1. ஃபர்ளான என்று நிய்யத் செய்வது. நான்கு தக்பீரை கிப்லாவை நோக்கி அல்லாஹ்விற்காக என்று மூன்று அம்சங்கள௉ நிய்யத் செய்வது சுன்னத் ஆகும்.
2. நின்று தொழ சக்தியுடையோர் நின்றீ ஃபர்ளாகும்.
3. தக்பீர் சொல்லித் தொழுவது பர்ளாகும்.
Read more Read more Share Share Share Share Share Share Share Share Share Share Share Share Share Share Share Share Share Share Share Share Share கட்டிக் கொள்வது சுன்னத்தாகும்.
4. பர்திஹா ஓதுவது ஃபர்ளாகும். ஃபாதிஹாவிற்கு முன் அஊது கூறுவதும் இறுதியில் ஆமீன் கூறுவதும் சுன்னத்தாகும்.
5. இரண்டாவது ந ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது ஃபர்ளாகும். அத்துடன் அவர்கள் குடும்பத்தார்களையும் ஸலவாத்தில் இணைத்து ஓதுவதும௏ முன் அல்ஹம்துலில்லாஹ் ம முஃமின்களுக்காகவும் துஆ செய்வதும் சுன்னத்துக்களாகும்.
6. மய்யித்திற்காக துஆ செய்வது ஃபர்ளாகும்

, #ஜனாஸா_தொழுகை_நிய்யத் ஜனாஸா தொழுகைக்கு என தனியாக வாய்மொழியாக அரபு மொழியில் நிய்யத் (எண்ணம்) கூற வேண்டியதில்லை. மனதிற்க...
14/06/2026

, #ஜனாஸா_தொழுகை_நிய்யத்

ஜனாஸா தொழுகைக்கு என தனியாக வாய்மொழியாக அரபு மொழியில் நிய்யத் (எண்ணம்) கூற வேண்டியதில்லை. மனதிற்குள் நினைப்பதே போதுமானது.தமிழில் நீங்கள் பின்வருமாறு நிய்யத் கொள்ளலாம்:"இந்த இமாமைப் பின்பற்றி, அல்லாஹ்வுக்காக, 4 தக்பீர்களைக் கொண்ட ஜனாஸா தொழுகையை நிறைவேற்றுகிறேன்."ஜனாஸா தொழுகையின் முறைகளை அறிய Kayalpatnam Janaza Guide மற்றும் சுவனத்தென்றல் Janaza Methods போன்ற தளங்களைப் பார்வையிடலாம்.

Address

12/10 TNP Street
Kilakarai
623517

Website

Alerts

Be the first to know and let us send you an email when இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉன் Inna lillahi wa inna ilayhi raji'un posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category