இராமசாமி தமிழ்க் கல்லூரி

இராமசாமி தமிழ்க் கல்லூரி இக்கல்லூரி 26.01.1964 இல் இந்தியப் பல்தமிழ்க் கழகம் என்ற அமைப்பு தொடங்கப் பெற்றது. நான்காண்டு தமிழ் Its an Government Aided College. Single Faculty College.

Tamil Literature (B. Litt) is the only course offered by the college.

உலகம் போற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றும் எண்ணத்தில் காரைக்குடியில் செந்தமிழ்ச் செல்வர் அமர‍ர் இராம. பெரி. பெரியகருப்பன் செட்டியார் அவர்களால் 26.01.1964 இல் இந்தியப் பல்தமிழ்க் கழகம் என்ற அமைப்பு தொடங்கப் பெற்றது. இவ்வமைப்பு அரசின் அங்கீகாரத்துடன் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் இணைவுக் கல்லூரியாக நான்காண்டு

தமிழ்ப்புலவர் பட்டயப் படிப்பைத் தொடங்கியது.
பின்னர் நடுவணரசின் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் ஒப்புதலுடன் கலைக்கல்லூரியாகத் தரம் உயர்த்தப் பெற்று மூன்றாண்டு பி.லிட். பட்டப் படிப்பை 1976 முதல் நடத்தி வருகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் இணைவுக் கல்லூரியாக 2003 ஆம் ஆண்டில் பல்கலைக் கழக நிதி நல்கைக்குழுவின் 12/B, 2f பதிவும் பெற்றுள்ளது.

முனைவர். மு.ஜெயமணிஉதவிப்பேராசிரியர்இராமசாமி தமிழ்க்கல்லூரிகாரைக்குடி
04/04/2022

முனைவர். மு.ஜெயமணி
உதவிப்பேராசிரியர்
இராமசாமி தமிழ்க்கல்லூரி
காரைக்குடி

மனித உரிமைகள்  பாதுகாப்பு சர்வதேச அமைப்பு வழங்கிய விவேகானந்தர் விருதுமுனைவர் .மு.ஜெயமணிஉதவிப்பேராசிரியர்
25/02/2022

மனித உரிமைகள் பாதுகாப்பு சர்வதேச அமைப்பு வழங்கிய விவேகானந்தர் விருது
முனைவர் .மு.ஜெயமணி
உதவிப்பேராசிரியர்

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் வழங்கிய தமிழ்த்தொண்டர் விருது.முனைவர். மு.ஜெயமணிஉதவிப்பேராசிரியர்
24/02/2022

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் வழங்கிய தமிழ்த்தொண்டர் விருது.
முனைவர். மு.ஜெயமணி
உதவிப்பேராசிரியர்

24-10.201 அன்று சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கம் வழங்கிய நல்லாசிரியர் விருதினை,உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் உயர்திரு வி.ஜி.ப...
27/10/2021

24-10.201 அன்று சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கம் வழங்கிய நல்லாசிரியர் விருதினை,உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் உயர்திரு வி.ஜி.பி .சந்தோசம் அவர்களின் பொற்கரங்களால் பெற்ற தருணம்... இந்த விருதினைப் பெற வாய்ப்பாக... எனக்கு உதவிப்பேராசிரியர் பணியைத் தந்து உதவிய நிறுவனத்தார் குடும்பத்திற்கு எனது நன்றியினைக் காணிக்கையாக்குகிறேன்.
இவ்விருது விழாவில் மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேத்திக்கும் விருது வழங்கப்பட்டது. பாரதியாரின் கொள்ளுப் பேத்தியைச் சந்திக்கும் வாய்ப்பினை வழங்கிய சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கத்திற்கும் என் நன்றிகள்...

சிவகங்கை மாவட்டக் கவனகக் கலை மன்றம் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசி...
05/10/2021

சிவகங்கை மாவட்டக் கவனகக் கலை மன்றம் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கல்விச்சுடர் எனும் விருதினை வழங்கும் விழாவினை காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று காரைக்குடியில் நடத்தியது . மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா அவர்கள் கரங்களால் ஆசிரியப் பெருமக்களுக்குக் கல்விச்சுடர் விருதுகள் வழங்கப்பட்டன . இவ்விழாவில் அடியேனும் கல்விச் சுடர் விருது பெறும் பேற்றினைப் பெற்றேன் .கடந்த காலத்தில் கல்விப் பணி சார்ந்து சரியான திசையில் பயணித்து இருக்கிறோம் என்ற உணர்வையும் எதிர்காலத்தில் இன்முகத்தோடு இப்பணியைத் தொடர வேண்டும் என்ற நம்பிக்கையையும் இவ்விருது எனக்கு அளித்தது . இனிய மகிழ்ச்சிகரமான பொழுதாக இன்றைய பொழுது அமைந்தது அன்புடன் நாகநாதன்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  பாரதி புத்தகாலயம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து காரைக்குடியில் நட...
05/10/2021

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாரதி புத்தகாலயம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து காரைக்குடியில் நடத்துகின்ற நான்காவது புத்தக கண்காட்சியில் ஞாயிறு (3.10.2021)அன்று மாலை தோழர் மோகன் அவர்களின் நான் அம்மா ஆயிட்டேன் என்ற சிறுகதைத் தொகுப்பு நூலை காரைக்குடி வட்டாட்சியர் வெளியிட நான் அதனைப் பெற்றுக் கொண்டேன் . பின்பு நூலைப்பற்றி அறிமுக உரையும் நிகழ்த்தினேன். இனிய மாலைப் பொழுது. தொடர்ந்து நல்ல நூல்களைப் படைத்து வரும் இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன் நாகநாதன்

காரைக்குடியில் அக்டோபர் 2 தொடங்கி அக்டோபர் 10 வரை பாரதி புத்தகாலயம் தன் தோழமை அமைப்புகளோடு இணைந்து புத்தகக் கண்காட்சியை ...
05/10/2021

காரைக்குடியில் அக்டோபர் 2 தொடங்கி அக்டோபர் 10 வரை பாரதி புத்தகாலயம் தன் தோழமை அமைப்புகளோடு இணைந்து புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது . இதில் ஒவ்வொரு நாளும் மாலையில் நல்ல நூல்களை வெளியிட்டும் வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 4 அன்று தோழர் சபிதா பானு அவர்களின் பாலைவனப் பனித்துளி என்னும் கவிதை நூலை காரைக்குடி நகராட்சியில் ஆணையாளர் வெளியிட உவேசா பதிப்பகத்தின் தோழர் லெனின் பெற்றுக் கொண்டார். தோழர்கள் பலரின் வாழ்த்துரைகளுக்கு நடுவில் கவிதை நூலை அறிமுகம் செய்து உரையாற்றினேன். நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் மிக்கதாக இன்றைய மாலைப்பொழுது அமைந்தது
அன்புடன் நாகநாதன்

காரைக்குடி(03-10-2021) முடியரசனார் அவைக்களம் வழங்கிய"வெல்க தமிழ் ஆசிரியர்" விருது...
04/10/2021

காரைக்குடி(03-10-2021) முடியரசனார் அவைக்களம் வழங்கிய"வெல்க தமிழ் ஆசிரியர்" விருது...

காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா 2. 10. 2021 அன்று மாலை 5 மணி அளவில் சி...
04/10/2021

காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா 2. 10. 2021 அன்று மாலை 5 மணி அளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் போது, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்பட்ட, காந்தியடிகள் பற்றிய கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. சங்கத் தலைவர் திரு.வ.ராம.வீர.ராம. ராமசாமி அவர்கள் தலைமை உரையும், செயலர் திரு.பெரி. வீரப்பன் அவர்கள் வரவேற்பு மற்றும் நன்றியுரையும் வழங்கினர். நானும் பேராசிரியர் நாகநாதன் அவர்களும் காந்தியடிகள் பற்றிய இரு தலைப்புகளில் உரை நிகழ்த்தினோம்.நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே ...

01/07/2021

Address

Illupakkudi Road, Near Karaikudi Railway Junction
Karaikkudi
630003

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+914565220458

Website

Alerts

Be the first to know and let us send you an email when இராமசாமி தமிழ்க் கல்லூரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to இராமசாமி தமிழ்க் கல்லூரி:

Share