21/07/2023
70 வயது மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம்
Tamil News
பள்ளிக்கரணை:பள்ளிக்கரணை, மனோகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தா, 70. கடந்த 17ம் தேதி காலை கோவிலுக்கு சென்றுவிட்டு, பள்ளிக்கரணை குளம் எதிரே சாலையைக் கடந்தார்.
அப்போது இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த தீனா, 21 என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் சாந்தா மூளைச் சாவு அடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து சாந்தாவின் நான்கு மகன்கள் மற்றும் உறவினர்கள், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
அதே மருத்துவமனையில் சாந்தாவின் இரு கண்கள் மற்றும் கல்லீரல், உறுப்பு தானம் செய்யப்பட்டன.
பள்ளிக்கரணை:பள்ளிக்கரணை, மனோகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தா, 70. கடந்த