31/03/2022
Anbumani Ramadoss
வன்னிய சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில் , பாமக கட்சியின் அன்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பதிவுசெய்த ஒற்றை கருத்து , அவரின் சாதி வன்மத்தை எடுத்துரைக்கிறது .
வடதமிழ்நாட்டில் ஆண்ட சாதி என்று மார்தட்டி சுற்றித்திரியும் சத்ரிய குல வன்னிய சொந்தங்கள் , பொதுவெளியில் சமூக மாற்றத்திற்கு அடிப்படையான இட ஒதுக்கீட்டு முறையை பிச்சை , இலவசம் , சலுகை போன்ற பல சொற்களால் வன்மம் தீர்த்து வரும் நிலையில் , உள் இட ஒதுக்கீடு பெற்று அகமகிழ்ந்த தருணம் இன்று காலாவதி ஆக்கப்பட்டது .
சரியான புள்ளி விபரங்கள் இல்லை என்பதனால் ,உள் இட ஒதுக்கீடு அரசாணை செல்லாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ,
பட்டியல் படுத்தப்பட்ட சமூகத்திற்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் , சமூக கட்டமைப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள அருந்ததியர் சமூகத்திற்கு 3% உள் இட ஒதுக்கீடு கடந்த 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அது மட்டும் சாத்தியமா ??? என்று வன்மத்தை கக்கியுள்ள மரியாதைக்குரிய அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு சில விளக்கங்கள்.
அருந்ததியர் , சக்கிலியர் , மாதாரி , மாதிகா தோட்டி , ஆதி ஆந்திரா என்னும் 6 பட்டியல் சமூக சாதிகளுக்கு வழங்கப்பட்டது . மொத்தமுள்ள பட்டியல் சமூக சாதிகள் 76 , உள் இட ஒதுக்கீடு போக 15% இட ஒதுக்கீட்டினை மீதமுள்ள 70 பட்டியல் சமூகங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன .
அருந்ததிய சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீடு குறித்து ஜனவரி 23 , 2008 ஆம் ஆண்டு சட்டசபையில் கலந்தாலோசித்து முடிவு செய்ய இந்த அரசு கருதி உள்ளது என்று அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி பதிவு செய்தார் . பின்பு மார்ச் 12 , 2008 அன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசுவாமி நீங்கலாக அனைத்து கட்சியினரும் அருந்ததியினர் சமூக உள் இட ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்தனர் . அன்றைய கலைஞர் அவர்களின் உரையில் , 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி , அருந்ததியர் மற்றும் சக்கிலியர் மக்கள் மட்டுமே 15,48,792 பேர் உள்ளனர் , இது மொத்தம் உள்ள ஆதிதிராவிட மக்கள் தொகையில் 13.06% ஆகும் , எனவே அம்மக்களுக்கு 2.35% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஒரு உத்தேச முடிவு எடுக்கப்பட்டது . அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அருந்ததிய சமூக இயக்கங்கள் , ஆய்வு செய்வதற்காக ஆணையம் கோரியது . அதன் விளைவாக ,
நீதியரசர் ஜனார்த்தனம் ஆணையம் - 2008ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது . இந்த ஆணையமானது அருந்ததியர் இன மக்களின் சமூக நிலை , பொருளாதார நிலை , கல்வி நிலை போன்றவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப தரவுகளை சமர்ப்பித்து , அம்மக்களுக்கான உள் இட ஒதுக்கீடு பெறுவதற்காக பரிந்துரை செய்தது .
மேலும் ,
தோழர் ம.மதிவண்ணன் அவர்கள் " அருந்ததியர்ளாகிய நாங்கள்..." என்ற அறிக்கையை தயார் செய்து , நீதியரசர் ஜனார்த்தனம் ஆணையத்திடம் வலியுறுத்தல் அறிக்கையாக சமர்ப்பித்தார் .
அந்த அறிக்கையானது புத்தகமாகவும் வெளியிடப்பட்டது .
வெளியீடு : கருப்புப் பிரதிகள் , விலை : ரூபாய் : 25 .
இந்த அறிக்கையில் , தோழர் மணிவண்ணன் அவர்கள்
மருத்துவம் , பல் மருத்துவம் , பொறியியல் மற்றும் சட்டக்கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் பட்டியல் சமூக மாணவர்களில் , அருந்ததிய சமூக மாணவர்களின் விகிதாச்சாரம் என்ன? என்பதை மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளார் .
சட்டமன்றத்திலும் , நாடாளுமன்றத்திலும் அருந்ததிய சமூக மக்களின் பிரதிநிதித்துவம் என்ன என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளார் .
இந்த அறிக்கையில் இவர்கள் கோரிய இட ஒதுக்கீடு 5.4 % ஆகும் .
எனவே , அருந்ததிய சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீடு என்பது சாதி அரசியல் பலத்தைக் கொண்டு மிரட்டி பெறப்பட்ட உரிமை அல்ல .
அருந்ததி களுக்கான உள் இட ஒதுக்கீட்டிற்கான அடிப்படைக் கூறு என்பது அரசியல் அதிகாரம் அற்ற நிலையே .
வன்னியர் சமூகத்தின் அரசியல் அதிகாரம் என்னவென்பது கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் அனைவருக்கும் தெரியும் . 2021 சட்டசபையில் எத்தனை வன்னிய சாதியை சார்ந்த உறுப்பினர்கள் உள்ளனர் என்பது அன்புமணி அவர்களுக்கு நன்கு புரியும் என்று நம்புகின்றேன் .
12.03.2008 அன்று நடந்த கூட்டத்தில் , அருந்ததிய சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்த கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சியும் உண்டு .
வன்னிய சமூக மக்களின் வாழ்வாதாரத்தை அடமானம் வைத்துப் பிழைக்கும் அரசியல்வாதி வரலாற்றை திருப்பி பார்த்து பேச தொடங்குங்கள் .
உங்களின் வன்மத்திற்கான விடை,இந்த விளக்கம் மட்டுமே ....
- தோழர் ஹிமானா
#தோஹி |