03/04/2024
" #ஏப்ரல்_3_1920
#பெருங்காமநல்லூர் -
#ஒரு_இரத்தசரித்திரம்
#நூற்றாண்டு_நினைவுநாள்🔥🔥
ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமான சம்பவம் இது நீங்கள் இந்த மண்ணை நேசிப்பவர் என்றால் முழுமையாக படியுங்கள்...
1920 ஏப்ரல் மாதம். உசிலம்பட்டி அருகே பெருங் காமநல்லூர் கிராமத்திற்கு
கை ரேகை வாங்க போலீஸ் பட்டாளம் வந்தது. கள்ள நாடே கிளர்ந்து எழுந்தது. நாட்டுப் பெரியவர்கள் ஒன்று திரண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. பக்கத்து ஊர்காரர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. காளப்பன்பட்டி, குமரம்பட்டி, போத்தம்பட்டி ஊர்களிலும் ஜனங்கள் தயாராகினர். பெருங்காமநல்லூர் மக்களுக்கு ஆபத்தான நிலை ஏற்படுமானால் "படாங்கு" வேட்டுச் சத்தம் வெடிக்கப்படும். வேட்டுச் சத்தம் கேட்டவுடன் பக்கத்து ஊர்காரர்கள் விரைந்து வந்து உதவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாயக்க மார்கள், ரெட்டியார்கள், பிள்ளைமார்கள், முதலியார்கள் போன்ற இதர சமூகத்தினரும் ஆதரவாக இருந்தனர்.
வீரன் விட்டி பெருமாள் தேவர் சிலம்பக் கலைஞர்களை ஒன்று திரட்டினார். இளைஞர்கள் ஆர்ப்பரித்தெழுந்தனர். பெருங்காமநல்லூர் ஒரு யுத்தத்திற்கு தயாரானது.
அதிகாரிகள் ஊர் மந்தையில் குவிந்தனர். ஆண் பெண் அனைவரும் மந்தையை நோக்கித் திரண்டனர். ஒரே கூட்டம்! கூச்சல் . கோபாவேசத்தோடு ஜனக்கூட்டம். ஆயுதப்படை கிராமத்தை சுற்றி முற்றுகை போட்டது. கட்டுக்கடங்காத கூட்டம். செம்புழுதி பறக்க நாலாபக்கமும் ஓடவும் ஆடவும் சீட்டி அடிக்கவும் சிலம்பம் சுற்றவுமாக இளைஞர்கள். மக்கள் கூட்டம் பெருகிக் கொண்டே போனது.
" அடாத காரியம் செய்து மக்களை அடிமைப்படுத்த வந்த பயல்களே, ஊரை விட்டுப் போங்கடா; இல்லையேல் உங்களை வெட்டி காத்தண்டம்மனுக்கு பலி கொடுத்து விடுவோம்" என்று முழங்குகிறார் விட்டி பெருமாள் தேவர்.
ஒரு கையில் கேப்பை ரொட்டித் துண்டையும் மறு கையில் கல்லையும் காட்டி ஓவாயன் சொன்னார், " எது வேண்டும் சொல். விருந்தாளியாக வந்தால் ரொட்டித் துண்டு. பகையாளியாக வந்தால் இந்தக் கல் தான் உனக்கு பரிசு" .
ஆம் நண்பர்களே.' பிற்காலத்தில் பாலஸ்தீன விடுதலைப் போராளி யாசர் அராபத் அய்.நா. மன்றத்தில் பேசும் போது சொன்னார், " ஒரு கையில் ஆலிவ் இலை. மறுகையில் துப்பாக்கி. எது வேண்டும் சொல். சமாதானமா? போரா? எதற்கும் தயார் என்று அறிவித்தார். ஆனால் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கும் மேலாக இதே விடுதலை உணர்ச்சியோடு கள்ள நாட்டு ஓவாயன் கேட்டார், " சமாதானம் என்றால் கேப்பை ரொட்டி . சண்டை என்றால் இதோ கல்" என்று அறைகூவல் விடுக்கிறார். விடுதலைப் போராளிகளின் சிந்தனை ஒரே அலைவரிசையில் தான் செல்லும் என்பதை பெருங் காம நல்லூர் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
ரேகையைப் பதிவதற்கு போலிஸ் சிலரை பிடித்தனர். மக்கள் போலிசார் மீது பாய்ந்து ஆட்களை மீட்க முனைந்தனர். உசிலம்பட்டி டெபுடி தாசில்தார் ஜான் அன்பு நாடார் சுடுவதற்கு ஆணையிட்டார். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராஜீ பிள்ளையும் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாச நாயுடுவும் போலிஸ் பட்டாளமும் சரமாரியாகச் சுட்டது.
அடிமைச் சட்டத்தை எதிர்த்து உயிரைத் துரும்பாய் மதித்து 16 பேர் களப் பலியாகினர்.
தோழர்களே!
1920 ஏப்ரல் 3 . வரலாற்றின் பக்கங்கள் செங்குருதியால் எழுதப்பட்ட நாள். ஜனங்கள் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டனர். இந்த ஏழை எளிய மக்களைக் காக்க யாருமே இல்லாத போது தென்பாண்டி மண்டலத்தின் முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர் திருமகனார் தோன்றினார். ஏழை எளிய மக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டங்களை நடத்தி அடிமை விலங்கை உடைத்து நொறுக்கினார். இம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். வரலாற்றில் வாழ்வாங்கு வாழும் பெருங் காம நல்லூர் ஈகியருக்கு வீரவணக்கம்!