Induism

Induism தமிழர் மெய்யியல் -சித்தர் நெறி - சிவ ந?

The Induism of the siddhars is the ever existing source and force for universal peace, universal liberty, independence, equality and fraternity. The induism of the siddhars holds and professes the policy and principle of equal respects to all the human races, languages and religions. Induism of the siddhars is 43,73,101 years old it is written in and practised through divine language tamil which i

s as old as the earth. Induism of siddhars is not to be misunderstood as Hinduism.

# THE INDUISM IS THE RELIGION OF REASONING.
# THE INDUISM IS THE RELIGION OF RATIONALISM.
# THE INDUISM IS THE RELIGION OF RADICALISM.
# THE INDUISM IS THE RELIGION OF RIGHTS AND RESPECT.
# THE INDUISM IS THE RELIGION OF RESPONSIBILITY AND INTEGRITY.
# THE INDUISM IS THE RELIGION OF DUTY CONSCIENCE.
# THE INDUISM IS THE RELIGION OF FAITH AND COURAGE.
# THE INDUISM IS THE RELIGION OF CUSTOMS AND MANNERS.
# THE INDUISM IS THE RELIGION OF NATURALISM.
# THE INDUISM IS THE RELIGION OF HUMANITARIANISM.
# THE INDUISM IS THE RELIGION OF ARTS AND SCIENCE.
# THE INDUISM IS THE RELIGION OF AESTHETIC SCIENCE.
# THE INDUISM IS THE RELIGION OF LOVE AND AFFECTIONS.
# THE INDUISM IS THE RELIGION OF TRUTH AND SINCERITY.
# THE INDUISM IS THE RELIGION OF HUMAN BINDINGS AND BANDAGES.
# THE INDUISM IS THE RELIGION OF DIVINITIES AND DEITIES.
# THE INDUISM IS THE RELIGION OF INTER COSMIC UNIVERSE.
# THE INDUISM IS THE RELIGION OF THE MANTRIC , YENTRIC AND TANTRIC POWERS.
# THE INDUISM IS THE RELIGION OF THE OCCULT SCIENCE.
# THE INDUISM IS THE RELIGION OF THE ESTONIC DOCTRINE.
INDUISM IS THE RELIGION OF MYSTICAL PREDICTIONS AND DIVINE HEALINGS.
# THE INDUISM IS THE RELIGION OF LIFE , LIFE BEFORE BIRTH AND LIFE AFTER DEATH.
# THE INDUISM IS THE RELIGION OF SAGES AND SAINTS. [ MYSTICS AND DIVINATORS ].
# THE INDUISM IS THE RELIGION OF THE LIBERTY , INDEPENDENCE AND ENFRANCHISEMENT.

Day 10 Decorative
05/10/2022

Day 10 Decorative

 #மகாசிவராத்திரிஅருள்மிகு பிறதோச சிவனார்  அருள்மிகு கோள்வெல்லும் கொற்றவை திருக்கோயிலில்  #மகாசிவராத்திரி பெருவிழா ------...
10/03/2021

#மகாசிவராத்திரி

அருள்மிகு பிறதோச சிவனார் அருள்மிகு கோள்வெல்லும் கொற்றவை திருக்கோயிலில் #மகாசிவராத்திரி பெருவிழா
--------------------------------------------

நிகழும்
தமிழர் மெய்யியல் 43,73,122 ஆம் ஆண்டு மாசி மாதம் - 11/3/2021 வியாழக்கிழமை
பதினெண்சித்தர் பீடாதிபதிகள் அவர்கள் அருளிய தமிழர் மெய்யியல் முறையில்
"அண்ட பேரண்டமாளும் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ்மொழி யில்" சிவராத்திரி சிறப்பு பூசை நடைபெறும்.

#மகாசிவராத்திரி பூசை :
11/3/21 வியாழன்

மாலை 5.30 மணிக்கு-
பிறணவ ஓங்காரத் தேவகுமாரன் பிள்ளையாருக்கு திருமுழுக்காட்டு வழிபாடு

மாலை 7 மணி முதல் 8.30 வரை :

*தமிழர் மெய்யியல்*
இந்துவேத வாழ்வியல்நெறி கலந்துரையாடல்

இரவு 9 மணிக்கு மேல்
*கோள்வெல்லும் கொற்றவை* க்கு திருமுழுக்காட்டு வழிபாடு

இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை
*பிறதோச சிவனார்* க்கு 18 வகை பழங்கள்,
9 வகை பூக்கள்,
திருநீறு, குங்குமம், வெண்ணெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், வாசனைத்திரவியங்கள் ..... கொண்டு
நன்னீராட்டு நடைபெறும்.

*சிறப்பு பூசை*

இரவு பதினான்காவது நாழிகையில் (11:36 மணி - 12:00 மணி)
தேவர்கள் பூசை செய்திட மண்ணுக்கும் விண்ணுக்கும் இலிங்க வடிவில் இருந்து சிவனாக காட்சி கொடுக்கும் பிறதோச சிவனார்க்கு சிறப்பு
தீபாராதனை..

மாலை முதல் காலை வரை மகாசிவராத்திரி இரவு முழுவதும் நடைபெற உள்ள பூசையில் எனது குருதேவர் அருட்பேரரசர்
#அன்புசித்தர்
அவர்கள்

*அண்டபேரண்டமாளும் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ்மொழி* யில் அருளிய காயந்திரி மந்தர, மந்திர, மந்திறங்கள் ஓதி வேள்வி நடைபெறும்.

12/3/21 வெள்ளிக்கிழமை காலை 6.18 மணி முதல் அருட்சினை செய்து தரப்படும்

அனைவரும் கலந்துக்கொண்டு அருளாசி பெற்றிட அன்புடன் அழைக்கின்றோம்.

அருள்மிகு
பிறதோச சிவனார்
அருள்மிகு கோள்வெல்லும் கொற்றவை திருக்கோயில்
இராசீவ் காந்தி நகர்,
செந்தில் நகர் பேருந்து நிறுத்தம் அருகில்
சென்னை - 99

https://g.co/kgs/d1g6uV

உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்!பெண்கள் இல்லாமல் அருளுலகச் செயல்பாடுகள் எதுவும் பயனளிக்காது!! பயனளிக்காது!!  # வானவில்லின்...
08/03/2021

உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்!

பெண்கள் இல்லாமல் அருளுலகச் செயல்பாடுகள் எதுவும் பயனளிக்காது!! பயனளிக்காது!!

# வானவில்லின் [7] ஏழு வண்ணங்களின் கவர்ச்சியும்;
# இசையின் [7] ஏழு சுரங்களின் ஈர்ப்பும்; எழிச்சியும் ;
# வாரத்தின் [7] ஏழு நாட்களின் நுட்ப, திட்ப அமைப்பும்
# [7]ஏழு கடல்களின் எழிலும்.....

ஒருங்கிணைந்து வடிவப் பட்டிருப்பவளே பெண்.
இவள் பூசைக்குரியவள் என்பதால் 1.காய் 2.அரும்பு 3.மொக்கு 4.போது 5.மலர் 6.பூ 7.வீ என்று [7] ஏழுப் பருவங்களாக பகுத்திருப்பது போல் சித்தர் நெறி- சீவநெறி-தமிழர் இந்து வேதத்தில், பெண்ணின் வளர்ச்சிப் பருவங்களும்

1.பேதை
2.பெதும்பை
3.மங்கை
4.மடந்தை
5.அரிவை
6.தெரிவை
7.பேரிளம் பெண் என்று [7] பருவங்களாக, பகுத்திருக்கிறார்கள்.

அதாவது,

1. 'பூவும், பாவையும் ஒன்று'
2. 'மங்கையும், மலரும் ஒன்று',
3. 'மாதும், போதும் ஒன்று',
4. 'மங்கையும், மொக்கும் ஒன்று' ,
5. 'பெதும்பையும் அரும்பும் ஒன்று',
6. 'மங்கையும், ஆறுமணமலரும் ஒன்று',
7. 'குமரியும், கூம்பும் அவிழ்ந்த போதும் ஒன்று'
8. 'பெண்ணும், வண்ண மலரும் ஒன்று',
9. 'மடந்தையும், தடாகத்து பூவும் ஒன்று',
10.'தெரிவையும் தேர்ந்த மணம் பரப்பும் மலரும் ஒன்று' 11.'பேரிளம் பெண்ணும் அதிகமாக பூத்து விட்ட பூவாகிய வீயும் ஒன்று' ,
12.'கன்னியும், கட்டவிழ்ந்த மொக்கான போதும் ஒன்று';

என்று கணக்கற்ற கருத்து விளக்கச் சொற்றொடர்கள் பெண்களைப் பெருமைப் படுத்தும் வண்ணம் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் அருளிய இந்து வேதத்தில் - சித்தர் நெறி- சீவநெறி எழுதப்பட்டிருக்கின்றன.

எனவே இந்துவேத வழியில் வாழ்கிறவர்களும் சரி; சித்தர் நெறி- சீவநெறி- தமிழர் இந்துவேதமதமான இந்துமத வழியில் வாழ்கிறவர்களும் சரி, தமிழர் மெய்யியல் -சித்தர் நெறி - சிவ நெறி-சைவ நெறி வாழ்கிறவர்களும் சரி; எக்காரணத்தைக் கருதியும், அல்லது எக்கடவுளின் பெயராலும் அல்லது எந்த விரதங்களின் பெயராலும் அல்லது எந்த சடங்குகளின் பெயராலும் அல்லது எந்த பூசையின் பெயராலும் பெண்களை மறுத்தோ; வெறுத்தோ; இழித்தோ; பழித்தோ; விலக்கியோ; நீக்கியோ; தடுத்தோ; அகற்றியோ; குறை கூறியோ; குற்றம் சாட்டியோ; பதுக்கியோ; ஒதுக்கியோ; மாசுபடுத்திச் செயல்பட்டால் அது கண்டிப்புக்கும்; தண்டிப்புக்கும் உரிய மாபெரும் தவறு!! மாபெரும் தவறு!! மாபெரும் தவறு!! மாபெரும் தவறு!!
அதுமட்டுமல்ல; இச்செயல் சித்தர் நெறி- சீவநெறி- தமிழர் இந்து வேதத்துக்கும், இந்து மதத்துக்கும் மாபெரும் துரோகச் செயலாகும்!! மாபெரும் துரோகச் செயலாகும்!! மாபெரும் துரோகச் செயலாகும்!!

அதாவது!! அதாவது!! அதாவது!! தமிழர் மெய்யியல் என்னும் சித்தர் நெறி- சீவநெறி- தமிழர் இந்துவேதமும், இந்துமதமும் பெண்கள் இல்லாமல் அருளுலகச் செயல்பாடுகள் எதுவும் பயனளிக்காது!! பயனளிக்காது!! பயனளிக்காது!! எனத்தெளிவாகக் கூறுகிறது...
என்பார்

எனது குருதேவர்
அருட்பேரரசர்
'அன்பு சித்தர்'

 #சித்தர்நெறி - தமிழர் மெய்யியல்"அருளாளர்கள் அனைவரும் ஒன்றே"" இறைவழிபாடு எத்தனை வகைகள் இருப்பினும் பயன் நன்றே""அவரவர் நா...
22/11/2020

#சித்தர்நெறி - தமிழர் மெய்யியல்

"அருளாளர்கள் அனைவரும் ஒன்றே"

" இறைவழிபாடு எத்தனை வகைகள் இருப்பினும் பயன் நன்றே"

"அவரவர் நாடு, மொழி, இனம், சமுதாய, விருப்பம் ஆகியவற்றிற்கேற்ப விரும்பிய கடவுள், ஆண்டவர், தெய்வம், தேவர், தேவதை, அவதாரம், அடியார், இருடி, ....... முதலிய இன்னேரன்ன பிறரில் யாரை வேண்டுமானாலும் வணங்கலாம்"

" உலகில் உள்ள எல்லா தேவாலயங்களும், கோவில்களும், திருச்சபைகளும், வழிப்பாட்டுக்குரிய இடங்களும் .... சித்தர்களால் தான் உருவாக்கப் பட்டவை என்பதால் #மதவெறி யே தேவையில்லை"

" மனிதனை விலங்காக ஆக்கிடாமல், வெறியற்று நெறியோடு வாழச் செய்வதே மதம். இதனை மனிதரின் நன்மைக்காக உருவாக்கியவர்கள் சித்தர்களே."

எனவே எம்மதத்தையும் மறுக்காதே! , வெறுக்காதே!

என்கிறார்
எனது குருதேவர்
அருட்பேரரசர்
'அன்பு சித்தர்'

எனது குருதேவர்   #அன்புசித்தர் அருளிய தத்துவங்கள், சித்தாந்தங்களை, போதனைகளையும் செயலாக்கும்சித்தர் கூடத்தின் ஃநம் குழந்த...
15/11/2020

எனது குருதேவர்
#அன்புசித்தர் அருளிய தத்துவங்கள், சித்தாந்தங்களை, போதனைகளையும் செயலாக்கும்

சித்தர் கூடத்தின்
ஃநம் குழந்தைகள் - கள்ளிகுடி, மதுரை மாவட்டம்.

 #தீவாளித் [தீபாவளி] திருநாள் - பதினெண் சித்தர்கள் வழங்கிய இந்தியத் திருநாள் -  #கொண்டாடும்முறை:தீவாளி விளக்கம், வரலாறு ...
13/11/2020

#தீவாளித் [தீபாவளி] திருநாள் - பதினெண் சித்தர்கள் வழங்கிய இந்தியத் திருநாள் - #கொண்டாடும்முறை:

தீவாளி விளக்கம், வரலாறு பற்றி நேற்று பார்த்தோம். இன்று எப்படிக் கொண்டாடப்பட வேண்டுமென்ற பேருண்மையை தெரிந்து கொள்வோம் :

#தீவாளி - கொண்டாடும் முறை:

‘தீஆவளி’ பற்றிக் குறிக்கும் குருபாரம்பரிய வாசகங்கள் இன்றைய தமிழகத்தைக் காக்கும் ஒரு வலிமை மிகும் சாதனம் ஆகும். ‘தமிழர்கள் தீவாளித் திருநாள் தங்களுடைய திருநாள்தான்’ என்ற பேருண்மையை உணர்ந்தும், நம்பியும் செயல்பட்டால்தான் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் வளர்ச்சியையும், தமிழினத்தின் உரிமையையும் பேண முடியும். இதற்காகத் தீவாளி எப்படிக் கொண்டாடப்பட வேண்டுமென்பதை விளக்குகிறோம்.

பதினெண் சித்தர்கள் தமிழ்மொழியின் ஒலி அலைகளின் மூலம் தனிமனிதர்கள் தங்களுடைய முன்னோர்களில் பிறப்பெடுக்காமல் அலைபவர்களின் ஆவி, ஆன்மா, உயிர் எனும் மூன்றையும் ஆண்டுக்கு ஒருமுறை தீவாளி அமாவாசை அன்று எண்ணெய் நீராடிப் புத்தாடை அணிந்து அவரவர் வசதிப்படி புறா, கோழி, ஆடு, மீன்.... பலியிட்டு; அழைத்து விருந்திட்டு மகிழும் திருநாளாகவே தீவாளித் திருநாளை படைத்தார்கள்.

(1) கொடிநிலை வழிபாடு

அமாவாசையின் அதிகாலையில் குடும்பத்தலைவர்கள் எண்ணை நீராடிப் புத்தாடையணிந்து தீ+ஆவளி --> குத்து விளக்குகளை விண்வெளியில் மீன் (விண்மீன்) கூட்டத் தோற்றமாக வீட்டின் உள்ளும் புறமும் ஏற்றிடல் வேண்டும். வாசலில் புதுமணல் பரப்பிக் குண்டம் அமைத்து நெருப்பு வளர்த்துப் பலி கொடுத்து மெய்ஞ்ஞானக் கொடி ஏற்றி அவ்வக்காலப் பதினெண் சித்தர் பீடாதிபதிகளால் வழங்கப்படும் பூசாமொழி வாசகங்களைக் கூறிக் ‘கொடிநிலை வழிபாடு’ என்பதனை நிறைவேற்ற வேண்டும். இதில், விண்மீன்கள், கோள்கள், இராசிகள், பிண்ட, அண்ட, பேரண்ட, அண்ட பேரண்டத்தவர்கள், இம்மண்ணுலக உருவ, அருவ, அருவுருவங்கள்... ... முதலிய அனைவரும் வழிபடப் படுகிறார்கள். அமாவாசை நாளில் மேற்குறித்த அனைவரும் அழைப்பை ஏற்று வருவர். அமாவாசை விரதத்தின் பெயரால் மரக்கறி உணவுதான் படைத்தல், உண்ணல் ... என்ற பழக்கம் பிற்காலத்திய பழக்கம். அமாவாசையில் இறைச்சியுணவு (புலால், மாமிசம்) படைக்கப்பட்டேயாக வேண்டும்.

குறிப்பு:- தீவாளி அல்லாத மற்ற அமாவாசைகளில் குறிப்பிட்டத் தனிமனிதருக்காகப் பூசை செய்தால்; இறந்து போன அந்த மனிதன் எந்த உணவை விரும்பி உண்பாரோ (மரக்கறி உணவு அல்லது இறைச்சி) அந்த உணவைத்தான் படையலாகப் போட்டு வழிபட வேண்டும்.

அப்படியல்லாமல் அமாவாசைப் பூசையென்றால் இறைச்சி உணவே கூடாது என்று மறுத்து மரக்கறி உணவையே படைப்பது தவறு! தவறு!! தவறு!!!

(2) கந்தழி வழிபாடு:

கந்தழி வழிபாடு - அதாவது சூரியனை வழிபடல். பகலில் உருமவேளை அல்லது உச்சி வேளை எனப்படும் கலசப் பூசைக்குரிய (தாந்தரீக, எந்தரீக, மாந்தரீகப் பூசைகளுக்கு உரிய) 11 முதல் 1½வரை = 2½ மணி நேரம் = 1 சாமம் வீட்டில் செய்த பலகாரங்கள், காலையில் பலி கொடுத்ததைச் சமைத்த உணவு, பூசைக்குரிய பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ, புகை (சாம்பிராணி, ஊதுபத்தி), கற்பூரம் ... ... முதலியவைகளையெல்லாம் வைத்து கந்தழி எனப்படும் சூரிய வழிபாட்டைச் செய்ய வேண்டும்.

(3) வள்ளி வழிபாடு:

மாலையில் வள்ளி வழிபாடு (வள்ளி நிலை வழிபாடு) வீட்டின் முற்றத்தில் அல்லது நடுவீட்டில் அல்லது பூசையறையில் ஐந்து (5) திரியிட்ட குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். அதற்கு நேராகச் சுவற்றில் நிலவைப் போல் வட்டமாக அவரவர் விருப்பப்படி விருப்பமான அளவில் சந்தனத்தாலோ அல்லது மஞ்சளாலோ பூசி மெழுக வேண்டும். அதில் திருநீற்றாலும் குங்குமத்தாலும் பட்டைகளும் பொட்டுக்களும் 3 முதல் 48 வரை வைத்து அலங்கரிக்க வேண்டும். ஒரு மண் கலயத்தில் மஞ்சள்நீர் நிரப்பி 1. மாவிலை 2. வேப்பிலை 3. அரச இலை 4. ஆலிலை 5. வில்வ இலை 6. தென்னைக் குருத்தோலை 7. பனைக் குருத்தோலை 8. துளசி இலை 9.அருகம்புல் முதலியவைகளை வைத்து நடுவில் தேங்காய் வைத்து நூல் சுற்றி கலசம் தயாரித்து வைக்க வேண்டும். வசதி வாய்ப்புகளுக்கேற்ப எல்லோரும் புத்தாடையணிந்து பால், பழங்கள், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பால் பொங்கல், பலகாரங்கள் ... ... முதலியவைகளைப் படைத்து நிலவை (திங்களை) வழிபட வேண்டும்.

வசதி வாய்ப்புகளுக்கேற்ப அவரவர் வீட்டு வாசலிலோ, தெரு முனையிலோ, கோயில்களின் வாசல்களிலோ ஒன்று முதல் ஒன்பது சொக்கப்பானைகள் (வைக்கோல், சோளத்தட்டை, ஓலைகள், விறகுகள் முதலியவைகளால் கோபுரம் போல் கட்டி நிறுத்தப் படுபவை) நிறுத்திடல் வேண்டும். அவரவர் வீட்டில் நிலவுப் பூசை குத்து விளக்கின் முன் செய்து முடித்தபிறகு வீட்டினுள் ஏற்றிய கற்பூரத்தை அல்லது குத்து விளக்கு (நெருப்பை) தீயைப் பயன்படுத்தித்தான் சொக்கப்பானை எரிக்க வேண்டும். இந்த சொக்கப்பானையின் சாம்பலை அவரவரின் வீடு, நிலம், காடு, தோட்டம், வயல் முதலிய எல்லா இடங்களிலும் தூவி விடுவதால் எல்லாவகையான தீமைகளும் தடுக்கப்பட்டும் அகற்றப்பட்டும் தேவையான நன்மைகள் விளைந்திடும்.

எனவே, தமிழர்கள் அனைவரும் இம்மண்ணுலகுக்குரிய கொடிநிலை வழிபாடு, கந்தழி நிலை வழிபாடு, வள்ளி நிலை வழிபாடு எனும் முப்பெரும் வழிபாட்டினையும் தீவாளியை முன்னிட்ட அமாவாசை நாளில் கொண்டாடி எல்லாவித நன்மைகளையும் அடைய வேண்டும். இதன் மூலம் தமிழர்கள், பதினெண்சித்தர்கள் வழங்கிய இந்து மதப்படி வாழ்ந்து மொழிப்பற்று, இன ஒற்றுமை, நாட்டு உரிமை, பண்பாட்டுப் பிடிப்பு முதலியவற்றில் விழிப்போடும், செழிப்போடும் என்றென்றும் வாழ்ந்திடுவார்கள் ... - என்ற பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அமராவதி ஆற்றங்கரைக் கருவூறாரின் குருபாரம்பரிய வாசகங்களைப் பற்றி கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளை குறிக்கிறார்.

எனது குருதேவர்
அருட்பேரரசர்
'அன்பு சித்தர்'

தெரிந்து செயல்பட்டால்தான் தமிழினத்தின் உரிமையையும், வளர்ச்சியையும் பேண முடியும்.

 #தீவாளி -  #விளக்கம்அனைவருக்கும் என் இனிய தீவாளித் [தீபாவளி] திருநாள் நல்வாழ்த்துகள். தீவாளி ஏன், எதற்கு, எப்படிக் கொண்...
12/11/2020

#தீவாளி - #விளக்கம்

அனைவருக்கும் என் இனிய தீவாளித் [தீபாவளி] திருநாள் நல்வாழ்த்துகள். தீவாளி ஏன், எதற்கு, எப்படிக் கொண்டாடப்பட வேண்டுமென்பதை என்ற பேருண்மையை தெரிந்தும், புரிந்தும், உணர்ந்தும் செயல்பட்டால்தான் தமிழினத்தின் உரிமையையும், வளர்ச்சியையும் பேண முடியும்.

தீ ஆவளி சித்தர்கள் உருவாக்கிய திருநாள். கார்த்திகைக்கு அகல் விளக்குகளை வழிபாடு செய்வது போல்; தீஆவளிக்கு குத்து விளக்கு ஏற்றியும், தீ வளர்த்தும் [ஐந்தீ] ஒளியை வழிபடுவதுதான் தீஆவளித் திருநாள். இந்த ஒளி வணக்கமே இம் மண்ணுலகை அண்டபேரண்டங்களோடு இணைக்கிறது.

#தீவாளி - #வரலாறு :-

தீஆவளி எனும் திருநாள் அனாதிக்காலம் தொட்டு நிகழ்ந்து வருகிறது.

* பாரத காலத்தில் நரகாசுரன் தீஆவளி அன்று போரிட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி ஏதேச்சையாக நடந்ததால்; பின்னர், அது வரலாற்று நிகழ்ச்சியாகவும், அதனாலேயே தீஆவளித் திருநாள் தோன்றியது என்ற தவறான கருத்து உருவாக்கப் பட்டு விட்டது. எனவே, தீஆவளி திருநாளுக்கும் நரகாசுரன் மடிவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.

** இதே போல், இன்றுள்ள சமண மதத்தைத் தோற்றுவித்த 27-வது தீர்த்தங்கரான மகாவீரர் நிர்வாண முத்தி நிலையை அடைந்தது இதே தீஆவளி நன்நாளில்தான்; இதன்படி சமணர்கள் [ சைனர்கள் = அருக சமயத்தவர்] தங்களுடைய மத குருவான மகாவீரர் நிறைவு பெற்றதை ஒட்டிய நாளான இந்நாளை தங்கள் தலைவரால்தான் தோன்றியது எனக்கூறி வருகிறார்கள். இதுவும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியே!.

** “முருகன் தேவசேனாதிபதியாகப் பொறுப்பேற்றதும்;

** சிவ பெருமான் திரிபுரம் எரித்ததும்;

** இறையனார் இம்மண்ணுலகை அருளாட்சிக்குரியதாக ஏற்றதும்;

**பதினெண் சித்தர்கள் இம் மண்ணுலகிற்கு வந்ததும்; இந்து மதத்தை வழங்க ஆரம்பித்ததும்;

** முதல் கருவறையை அமைத்ததும் இத்தீஆவளித் நன்நாளில்தான்

எனக் குருபாரம்பரியம் மிகத்தெளிவாக பாராட்டிக் குறிக்கிறது.

எனவே, தீஆவளி தமிழர் திருநாள்; மனித நாகரீகமும் பண்பாடும் மணிசன் மனிதனாக மாறிய பொன்நாள்” ... ... அனாதிக்கால கருவூறார் குருபாரம்பரிய வாசகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

"தீவாளித் [தீபாவளி] திருநாள் - பதினெண் சித்தர்கள் வழங்கிய இந்தியத் திருநாள்."

எனது குருதேவர்
அருட்பேரரசர்
'அன்பு சித்தர்'

எதற்கு, எப்படிக் கொண்டாடப்பட வேண்டுமென்பதை - நாளை பார்ப்போம்

சிரசுவதி பூசைபதினெண்சித்தர்களுடைய நூல்களில் சிரசுவதி, பிறம்மசத்தி பிறம்மதேவி, கலைமகள் என்ற பெயரில் கலைவாணிக்கு குறிக்கப்...
25/10/2020

சிரசுவதி பூசை

பதினெண்சித்தர்களுடைய நூல்களில் சிரசுவதி, பிறம்மசத்தி பிறம்மதேவி, கலைமகள் என்ற பெயரில் கலைவாணிக்கு குறிக்கப்படுகின்றன

சிரசுவதி என்றால் தலையில் வாழுபவள் என்று பொருள், அதாவது, சிரசு + வதி = சிரசுவதி, சிரசு, சிரம், என்றால் தலை, வதி என்றால் வாழுபவள் என்று பொருள். சிரசுவதி = தலையில் வாழுபவள் என்று பொருள்.

இவ்வுலகைப் படைத்து வாழக்கூடிய பிறம்மண் என்பவர் தலையில் வாழ்வதால் சிரசுவதி என்று பெயர். இவளே அனைத்துக் கலைகளுக்கும் தலையாக விளங்குபவள். இது பற்றி இந்து வேத நூல்களின் தெளிவுபட கூறுயுள்ளது.

இச்சிரசுவதி என்ற பெண் கடவுள்தான் கலைகளைக் கற்ற எல்லோராலும் முழுமையாக வணங்கப்படுகிறாள்.

சிரசுவதிக்கு நான்கு கைகள் உண்டு. சிரசுவதிக்கு வலது மேல் கையில் உருத்திராக்கமும், இடது மேல்கையில் ஏடும், மற்ற இரு கைகளிலும் வீணையும் உள்ளவளாக தோற்றப் பொலிவை வேதங்கள் விளக்குகின்றன. சிரசுவதிக்குரிய தோற்றம், வடிவமைப்பு, சிறப்புகள் எல்லாம் சரசுவதிக்கு அளிக்கப்பட்டு சரசுவதியாகப் போற்றப்பட்டு இன்று வழிப்படுகின்றனர்.

பதினெண்சித்தர்களுடைய நூலகளைப் பெரும்பாலானோர் அறியாததால், படிக்காததால் பெரும்பாலான தமிழ்ச் சொற்களுக்கு பொருள் புரியாமல் போய்விட்டன.

எனது குருதேவர்
அருட்பேரரசர்
'அன்பு சித்தர்'

மரணமில்லாத பெருநிலை ?  இறப்பது உடம்பா?  உயிரா? - கண்ணுக்குத் தெளிவாக உடம்பு அழிகின்றது. ஆனால், கற்பனைக்குக் கூட உயிர் அழ...
27/09/2020

மரணமில்லாத பெருநிலை ?

இறப்பது உடம்பா? உயிரா? - கண்ணுக்குத் தெளிவாக உடம்பு அழிகின்றது. ஆனால், கற்பனைக்குக் கூட உயிர் அழிவது தெரிவதில்லை. உயிரும், உடலும் இணைந்திருந்து பிரிவதால்தான் இந்தக் குழப்ப நிலை. உயிருக்கும், உடலுக்கும் ஏற்பட்ட உறவு என்றென்றும் முறிவுபடாமல் இருக்க வேண்டும். அதற்குரிய வழியைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

உடம்பு கரி (Carbon), உப்பு (Nitrogen), நெருப்பு (Oxygen), நீர் (Hydrogen) முதலிய நான்கு பொருள்களின் கூட்டினால் உண்டாகியது உடல்.

ஒலி (Sound), ஒளி (Light) இவை இரண்டும் சேர்ந்த கூட்டுப் பொருளே உயிர்.

உயிரும் உடம்பும் கூட்டுப் பொருள்களே. இருந்தும், உயிரும் உடம்பும் ஒன்றாகக் கூடி ஓர் புதிய கூட்டுப் பொருள் உண்டாக முடிவதில்லை. அப்படி ஒரு கூட்டுப் பொருள் உண்டாகுமேயானால் அதுவே இறவாநிலை பெற்று இருக்கும். எனவே, அதுவே பிறவா நிலையும் பெற்றுவிடும். அந்த நிலையே மரணமில்லாத பெருநிலை.

அதாவது, பிறப்பு, இறப்பு இல்லாத பேரின்ப நிலை. அதாவது, அது வானைவிட உயர்ந்தது, காற்றைவிட வேகமானது, நெருப்பைவிட ஆற்றல் வாய்ந்தது. நீரைவிட ஆக்கும் சத்தி வாய்ந்தது. மண்ணைவிட வளமிக்கது. இப்படிப்பட்ட ஒன்று காலத்தால் வெல்லப்படாதது, நீரில் கரையாதது, நெருப்பில் வேகாதது, மண்ணுள் மக்காதது, காற்றால் அசைக்கப் படாதது.

என் குருதேவர்
அருட்பேரரசர்
'அன்பு சித்தர்'

"தமிழ்ச் சைவ கருணீக்க வேளாளர்" ஞானசித்தர்  #ஆதிசங்கரர் -வரலாறு #ஆதிசங்கரர் என்ற பெயர் இவர்தான் முதல் சங்கரர் என்ற பொருளி...
23/09/2020

"தமிழ்ச் சைவ கருணீக்க வேளாளர்" ஞானசித்தர் #ஆதிசங்கரர் -வரலாறு

#ஆதிசங்கரர் என்ற பெயர் இவர்தான் முதல் சங்கரர் என்ற பொருளில் #வழங்கப்பட்டது #அல்ல! ஆதிசிவன், ஆதிசங்கரன், ஆதிபரமசிவன், ஆதிவேதன், ஆதிநாதன் ... என்ற பெயர்கள் சாதாரணமாக வழக்கில் உள்ளவைகள்தான். மேலும், ஞானத்துக்கே உரிய வைகாசித் திங்களில் சிவனுக்கே உரிய திருவாதிரை மீனில் (நட்சத்திரம்) வளர்பிறையில் பிறந்த ஆண்குழந்தைக்கு மேற்படி ஆதிசிவன், ஆதிசங்கரன்... என்கின்ற பெயர்கள் வைப்பதே மரபாகும். இதுவே பிறப்பியல் சாத்திறத்திலும், பெயரியல் சாத்திறத்திலும் உள்ள உண்மை.

இன்றுள்ள மலையாள மொழி தோன்றி சில நூறு ஆண்டுகளே ஆகின்றது என்பதால், இந்த ஆதிசங்கரன் பிறந்த காலத்துச் சேரநாடு முழுவதும் தமிழ்மொழி பேசப்பட்டு அது தென்பாண்டித் தமிழகமாகத்தான் இருந்தது. எனவே, ஆதிசங்கரர் ஒரு தமிழ் அந்தணர் குடும்பத்தில் பிறந்தவரே. தமிழால் சிவன் கோயிலில் பூசை செய்யும் குருக்களான தமிழ்ச் சிவாச்சாரியார் குடும்பத்தில் பிறந்தவரே ஆதிசங்கரர். மிகத் தெளிவாகச் சொன்னால் சீர்காழித் திருஞான சம்பந்தர் தந்தையான சிவபாத இருதயரின் வழிவந்த சிவாச்சாரியாரியாரான தமிழ் அந்தணர் சிவகுருவின் மகனே ஆதிசங்கரர்.

ஆதிசங்கரர் தமிழ்ச் சைவ கருணீக்க வேளாளர் குலக் கொழுந்தாய் பிறந்தவரே. [ஆதிசங்கரர் தோன்றிய அதே கருணீக்க சைவ வேளாளர் மரபில், சிவபூசையில் தேறிய சிவாச்சாரியார் குடும்பத்தில் தோன்றிய வடலூர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர், அருட்கொடை வள்ளல், அருட்பா வழங்கிய பேரருளாளர், ஞானசித்தர் இராமலிங்க அடிகளார் என்பது குறிப்பிடத் தக்கது]

எனவே, கருணீக்க வேளாளர் மரபில் பிறந்த தமிழ் அந்தணர் சிவகுரு என்னும் சிவாச்சாரியாருக்கும், அவரது மனைவி ஆரியம்மாளுக்கும் [ஆரியம்மாள், ஆரியமாலா, ஆரியமாலை, ஆரியாத்தாள்... முதலிய பல பெயர்கள் ஏடுகளில் குறிக்கப் படுகின்றன. மேலும், இதுபோன்ற பெயர்களான ஆரியம்மாள், மாரியம்மாள், காளியம்மாள்... தமிழர்கள் மட்டுமே வைக்கக் கூடியவை] வைகாசித் திங்களில் வளர்பிறையில் திருவாதிரை நட்சத்திரத்தில் காலடியில் பிறந்த ஆண்மகவே ‘ஆதிசங்கரன்’.

பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் கி.பி.785இல் முதல் விசயாலயனை அரசுக் கட்டிலில் அமர்த்தி அருட்பேரரசுக்கு வித்திட்டு விட்டு உலகச் சுற்றுப் பயணம் சென்று திரும்பிய காலத்தில் தென்பாண்டி தமிழகத்தில் தோன்றியவர். எனவேதான், இவரைப் பற்றி மிகத் தெளிவான குறிப்புக்கள் இவர் எழுதிய குரு பாரம்பரியத்தில் காணப்படுகின்றன. (தொடரும் )

எனது குருதேவர்
அருட்பேரரசர்
'அன்பு சித்தர்'

 #சர்வயக்ஞர்  சமசுகிருதச் சொல் அல்லசருவ+யக்ஞர் - அதாவது சருவம் +யக்ஞர்இந்தச் சொல்லுக்கு சட்டி அல்லது பானை ( வாய் அகன்ற ப...
22/09/2020

#சர்வயக்ஞர் சமசுகிருதச் சொல் அல்ல

சருவ+யக்ஞர் - அதாவது சருவம் +யக்ஞர்

இந்தச் சொல்லுக்கு சட்டி அல்லது பானை ( வாய் அகன்ற பானை) இது தூய தமிழ்ச் சொல். அதாவது யக்ஞத்தின் பயன்கள் தேங்கியிருக்கக் கூடிய பாத்திரம் போன்றவர்.

கலைமகள் யக்ஞத்தின் பயனை பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதியின் பரிந்துரையால் காலடி ஆதி சங்கராச்சாரியாருக்கு அருவி போல் வழங்கினாலும்; இவர் சூரிய குலத்தவர் என்பதாலும்; பீடாதிபதியல்ல என்பதாலும் இவருடைய உழைப்புக்கும் முயற்சிக்கும் ஏற்பவே அந்த யக்ஞ பயன் இவரிடம் தங்கிற்று.

எனவே தான் *யக்ஞ பயன் தங்கியிருக்கக் கூடிய பாத்திரம் போன்றவர்* என்ற பொருளுக்குரிய " #சருவயக்ஞர்" ( யக்ஞப் பயனுள்ள சட்டி, பாத்திரம்) என்ற #அருட்பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது என்பார்

எனது குருதேவர்
அருட்பேரரசர்
'அன்பு சித்தர்'

 #சேயோன் -  #சிவன் - 🔥தூய தமிழ் சொற்கள்மலைப் பக்கங்களில் தோன்றிய இறைவனது தோற்றம் சிவந்த இளைய வடிவமாய்த் தோன்றினமை கண்டு ...
21/09/2020

#சேயோன் - #சிவன் - 🔥
தூய தமிழ் சொற்கள்

மலைப் பக்கங்களில் தோன்றிய இறைவனது தோற்றம் சிவந்த இளைய வடிவமாய்த் தோன்றினமை கண்டு தமிழ் மக்கள் அத்தெய்வத்தை ' #சேயோன்' - #செந்நிறமானவன் என்றும்

#சேய்மை = தூரம், உயரம்

#சேயோன் - தூரத்தில் தொலைவில் இருப்பவன்; உயரத்தில் இருப்பவன்: உயரமான வானத்தில் இருப்பவன்

{குறிப்பு- புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க (திருவாசகம். 1, 8).}°°

#சேய்மை=செம்மை=சிவந்தவன்= #சிவன்= #சிவத்தையா

#சேயோன் என்ற சொல் ' #சிவன்' என்றும் சான்றோர் வழங்கினர் என்பார் எனது குருதேவர்,
அருட்பேரரசர்
' #அன்புசித்தர்'.

{எனவே #எனது #புரிதல்

#சிவன்= எல்லோரினும் மேலானவன்; உயர்ந்தவன்

{ஒப்புமை- சிவிகை- மகுடம்; சிவிங்கி- உயர்ந்த விலங்கு, ஒட்டகச் சிவிங்கி}

சிவன்

ஆக்கம், அளவு, இறுதி இல்லாதவன்
ஆழ்ந்த அகன்ற நுண்ணியவன்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். }°°

Address

Kalligudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Induism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Induism:

Share