25/05/2021
அன்பு பாசமும் நிறைந்த கழகத் தோழர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்
நம் மனதில் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் வணக்கம்
இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல் மிகவும் கடுமையானது நோயின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது
இந்த சூழலில் நாம் நமது கழக தோழர்கள் மற்றும் அவரின் உறவினர்கள் பலரை இழந்துள்ளோம் இதை குறிப்பிடும் போது மனது மிகவும் வேதனை அடைகிறது..
அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்..
அனைத்து தோழர்களையும் பாதுகாப்பது நமது கடமை ஆகிறது
அறிவியல்பூர்வமாக இந்த கடுமையான நோயினை நாம் வெற்றி பெற்று வர இயலும்
நம் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இதைத்தான் நமக்கு கூறுகின்றார்.
நமது அரசு அமல்படுத்தி உள்ள முழு ஊரடங்கு உத்தரவை மதித்து நாம் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும்
தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது
மேலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே வருகிற போது இரட்டை முக கவசம் அணிய வேண்டும்.
கிருமிநாசினி அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
சோப்பு போட்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
நமது ஊரிலேயே கோவில்கள் திண்ணைகள் ஆகிய இடங்களில் கூட்டமாக அமர்ந்து பேசுவதை தயவுசெய்து தவிர்க்க வேண்டும்.
முடிந்தவரை அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்..
ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் நாம் அலட்சியமாக விடாமல் உடனே பரிசோதனை எடுத்துக்கொண்டு பின்னர் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அறிகுறிகள் இருந்தால் தயவு செய்து யாரும் தயங்காமல் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்..
மேலும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள் இன்று நாம் பார்ப்பவர்களை நாளை பார்ப்பது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது.
எனவே தயவு செய்து அவரவர் அவரவர் உடல்நிலையை பார்த்துக்கொள்ள
வேண்டும் கழகத் தோழர்கள் யாரும் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்..
நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம்...!!!
தொற்றை ஒழிப்போம்...!!
இதை உங்களின் உற்ற தோழனாகவும், சகோதரனாகவும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன் :-
சீ.அசோக் BE
ஒன்றிய கழக செயலாளர்,
திமிரி கிழக்கு ஒன்றியம்,
ராணிப்பேட்டை மாவட்டம்