வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள்

  • Home
  • India
  • Harur
  • வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள்

வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள் அரூரை பூர்வீகமாக கொண்டு வெளியூரில் வ

முப்பது நாள் நோன்புதனில் ஏழையின்பசியினை போதிக்கும் ரமலானே...!ஐந்து வேலை தொழுகையில் மனிதஆன்மாவினை சிறப்பிக்கும் ரமலானே......
22/04/2023

முப்பது நாள் நோன்புதனில் ஏழையின்
பசியினை போதிக்கும் ரமலானே...!

ஐந்து வேலை தொழுகையில் மனித
ஆன்மாவினை சிறப்பிக்கும் ரமலானே...!

இல்லாது உண்ணாததை விடுத்து எல்லாம்
இருந்தும் உண்ணாமையில் தீரம் தரும் ரமலானே...!

சுத்தம் சுகாதாரம் ஒழுக்கம் காத்து அதை
சுற்றத்திற்கும் வாழ்ந்து கற்பிக்கும் ரமலானே...!

உடலின் புத்துணர்ச்சியை ஒவ்வொரு நாளும் கூட்டி
மருத்துவகுண சிறப்பினையும் நோன்பினில் காண்பிக்கும் ரமலானே...!

ஏற்றத் தாழ்வினை கடந்து இறையன்பில் கூடிநின்றோருக்கு
மறையின் மகத்துவத்தை புரியவைத்திட்ட ரமலானே...!

இல்லார் இல்லாததை மறந்து இருப்போர் இயன்றதை வழங்கி உள்ளத்தில் உலகின் வாழ்வின் சிறப்பென இந்நாளை கொண்டாடி மகிழும் ''குதூகல ரமலானே''...!

தகப்பல் அல்லாஹு மின்னா வ மின்கும்

அல்லாஹ் உங்களிடம் இருந்தும் நம்மிடம் இருந்தும் நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக.

--------------------------------
வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள் குழுமம்
22/4/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மருத்துவ உதவிவெளியூர் வாழ் குழு சார்பாக தாஸ் தியேட்டர் பின்புறமுள்ள வயதான அம்மாவுக்கு கால் முறிவு...
21/04/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

மருத்துவ உதவி

வெளியூர் வாழ் குழு சார்பாக தாஸ் தியேட்டர் பின்புறமுள்ள வயதான அம்மாவுக்கு கால் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று 21/4/2023 இன்று மருத்துவ உதவி செய்யப்பட்டது.

அவருடைய மருத்துவ செலவுக்காக வெளியூர் வாழ் குழு சார்பாக கால் மாவு கட்டுக்கு ரூ.2900/- + 600/- என மொத்தம் ரூ. 3500/- இன்று 21/4/2023 வழங்கப்பட்டது.

மருத்துவ உதவிக்கு முழு முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் மற்றும் அரூர் பிரதியூஷ் எலும்பு மருத்துவமனை Dr.ராஜூகணேஷ் & Dr.சத்யபிரபா அவர்களுக்கும் ஜஸாகல்லாஹ் கைர்.

-------------------------------
VVHIS குழு
21/4/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*மருத்துவ உதவி*வெளியூர் வாழ் குழு சார்பாக பொய்யப்பட்டியை சேர்ந்த உடல்நலம் பாதிக்கப்பட்ட சகோதரர் ஒ...
21/04/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

*மருத்துவ உதவி*

வெளியூர் வாழ் குழு சார்பாக பொய்யப்பட்டியை சேர்ந்த உடல்நலம் பாதிக்கப்பட்ட சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டது. அவருடைய மருத்துவ செலவுக்காக வெளியூர் வாழ் குழு சார்பாக *ரூ.3000/-* இன்று 21/4/2023 வழங்கப்பட்டது.

மருத்துவ உதவிக்கு முழு முயற்சி மேற்கொண்ட தருமபுரி மாவட்ட தமுமுக மருத்துவரணி து.செயலாளர் சுல்தான், குழு அட்மின்கள் துபாய் நூர், இனாயத், தஸ்தகீர் ஆகியோருக்கு ஜஸாகல்லாஹ் கைர்.

-------------------------------
*VVHIS குழு*
21/4/2023

அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் நமது வெளியூர் குழுவின் மூலமாக ஃபித்ரா தொகை வசூலித்து அதை முழுமையாக ஏழை எளிய மக்களுக்க...
21/04/2023

அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் நமது வெளியூர் குழுவின் மூலமாக ஃபித்ரா தொகை வசூலித்து அதை முழுமையாக ஏழை எளிய மக்களுக்கு இன்று 21/4/2023 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு முன்பே விநியோகம் செய்யப்பட்டுவிட்டது.

நமது குழு சகோதரர்கள் சேலம் பெரோஸ், தஸ்தகீர், சுல்தான், பெங்களூர் இனாயத் பாஷா, துபாய் நூர், எலக்ட்ரீஷியன் ரஹீம் ஆகியோர்களால் அவரவர் இல்லம் தேடி சென்று ஃபித்ரா Kit விநியோகம் செய்தனர்.

நம்முடைய இந்த முயற்ச்சிக்கு பணமாகவும், பொருளாகவும், தங்களுடைய உடல் உழைப்பாலும் உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஜஸாகல்லாஹ் கைர்.

நம் அனைவருக்கும் அல்லாஹ் நற் கூலியை வழங்குவானாக.

ஆமீன்

குறிப்பு : ஃபித்ரா பெற்றவர்களின் கண்ணியத்தை காக்க புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டது.

#ரமலான்

-------------------------------
VVHIS குழு
21/4/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்கண்ணியமிக்க வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள் குழுமத்தில் பயணிக்கும் அன்பு சொந்தங்களே,நமது ...
06/04/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

கண்ணியமிக்க வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள் குழுமத்தில் பயணிக்கும் அன்பு சொந்தங்களே,

நமது வெளியூர் வாழ் குழு சார்பாக பல்வேறு விதமான உதவிகள் (மருத்துவ உதவி, கல்வி உதவி, திருமண உதவி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பொருளாதார உதவி, இரத்ததான உதவி) என பல்வேறு உதவிகளை உங்களுடைய பங்களிப்போடும் அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையுடனும் செய்து வருகிறோம்.

அதேபோல இந்த ரமலான் மாதத்தில் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் *ஸதகதுல் ஃபித்ரா* நமது குழு சார்பாக வசூல் செய்து நமது அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருக்கும் ஏழை மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் உங்களுடைய ஃபித்ரா, ஜகாத், ஸதகா வை வழங்கி ஏழை எளிய மக்கள் பயன்பெற உங்களுடைய பங்களிப்பை கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

முஸ்லிமான ஆண், பெண், பெரியார், சிறுவர், அடிமை, அடிமையல்லாதவர் ஆகிய அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீச்சம்பழம், தீட்டிய கோதுமை ஆகிய வற்றில் ஒரு ஸாவு கொடுப்பதை நபி (ஸல்) அவர் கள் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல்கள் புகாரி முஸ்லிம்)

குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்காகவும், நோன்பு நோற்றவர்களுக்கும், நோன்பு நோற்க முடியாத நிலை யிலுள்ள ஆண் பெண் குழந்தை, சிறியவர், முதியவர்களுக் காகவும், குடும்பத் தலைவன் ஒரு ஸாவு வீதம் பித்ரா கொடுக்க வேண்டும்.

எதை கொடுக்க வேண்டும் :-

மக்கள் எதனை பிரதான உணவாக கொள்கி றார்களோ அதையே கொடுக்க வேண்டும்.

صحيح البخاري (2ஃ 131)

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كُنَّا نُعْطِيهَا فِي زَمَانِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ

------------------------------------
ஃபித்ரா தொகை ஒரு நபருக்கு *ரூ.100/-*

கீழ்கண்ட தொலைபேசி எண்ணுக்கு Gpay & Phonepe மூலமாகவோ (அ) நேரடியாகவோ வழங்கலாம்.

*Gpay & Phonepe* செல் :

9943242140
*இனாயத் பாஷா*

--------------------------------------
*VVHIS குழு*
6/4/2023

🛑 எச்சரிக்கை பதிவு 🛑அருமை சகோதரர்களே, வாட்ஸ்அப்-ல் 5 லட்சம் பரிசு விழுந்துள்ளதாகவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பரிச...
23/09/2022

🛑 எச்சரிக்கை பதிவு 🛑

அருமை சகோதரர்களே,

வாட்ஸ்அப்-ல் 5 லட்சம் பரிசு விழுந்துள்ளதாகவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பரிசுத் தொகையை பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் ஒரு மெசேஜ் Unknown number ல் இருந்து வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதன் விபரீதம் தெரியாத நபர்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஒரு Application ஐ Download செய்து விடுகின்றனர்.

பிறகு உங்கள் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு, தாங்கள் அந்த App மூலமாக கடன் தொகை பெற்றுள்ளதாகவும் அதை உடனடியாக கட்டும்படியும் தொடர் தொலைபேசி அழைப்புகள் வரும்.

வாங்காத கடனை நாம் ஏன் திரும்ப செலுத்த வேண்டும் என நினைத்தால், ஹேக் செய்யப்பட்ட நம் தொலைபேசி யில் உள்ள நம்முடைய & நம் குடும்பத்தாருடைய புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து நம்முடைய நண்பர்களுக்கோ அல்லது நம் உறவினர்களுக்கோ அனுப்பி விடுவார்கள்.

இந்த மோசடி கும்பலின் வலையில் விழாமல் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தற்காத்துக் கொள்ளுங்கள்.

இது போன்ற App மூலம் யாராவது பாதிக்கப்பட்டால் உடனடியாக *சைபர் கிரைம்* க்கு தகவல் கொடுங்கள்.

-----------------------------------
வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள் குழு
23/9/2022

ஓராயிரம் ஆபத்துக்கள்ஓயாமல் நம்மை நோக்கிவந்தாலும். நம் உள்ளம் உண்மைஎன்று உணர்ந்ததை உரைக்கஅஞ்சுபவன் கோழை மட்டுமல்லநாட்டுத்...
15/09/2022

ஓராயிரம் ஆபத்துக்கள்
ஓயாமல் நம்மை நோக்கி
வந்தாலும். நம் உள்ளம் உண்மை
என்று உணர்ந்ததை உரைக்க
அஞ்சுபவன் கோழை மட்டுமல்ல
நாட்டுத் துரோகி.

- அறிஞர் அண்ணா ❤

ஆழ்ந்த இரங்கல்  முன்னாள் தலைமை ஆசிரியர்திரு. லோகநாதன் அவர்களின் மனைவியும், L.சுரேஷ் L. ஆனந்த் அவர்களின் தாயாருமான திருமத...
14/09/2022

ஆழ்ந்த இரங்கல்

முன்னாள் தலைமை ஆசிரியர்
திரு. லோகநாதன் அவர்களின் மனைவியும், L.சுரேஷ் L. ஆனந்த் அவர்களின் தாயாருமான திருமதி. அமுதா லோகநாதன், அவர்கள் இன்று இரவு இயற்கை எய்தினார்.

அம்மையாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

30/08/2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

கடந்த மே மாதம் 16/5/2022 அன்று நமது வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள் குழு சார்பாக, அரூர் ராமியம்பட்டியை சேர்ந்த சகோதரிக்கு கல்லூரி செமஸ்டர் கட்டணத்திற்காக கல்வி உதவி செய்யப்பட்டது.

*அந்த சகோதரி தன்னுடைய 3ம் ஆண்டு செமஸ்டர் தேர்வை வெற்றிகரமாக முடித்து 100க்கு 80% மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளார்* என்பதை மகிழ்வுடன் தொலைப்பேசி வாயிலாக தெரிவித்தார்.

எல்லா புகழும் இறைவனுக்கே...!

அந்த சகோதரி மேற்படிப்பு படித்து சமுதாயத்தில் உச்சம் தொட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக....

ஆமீன்

-------------------------------------
அட்மின் குழு
VVHIS குழு
30/8/2022

22/08/2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

கடந்த 19/8/2022 அன்று அரூர் பெரியார் நகரை சேர்ந்த சகோதரர் ஷபீர் அவர்களின் மனைவி சகோதரி சாய்ரா பானு அவர்களின் மருத்துவ உதவிக்காக வேண்டி நமது வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள் குழுவில் பதிவிட்டிருந்தோம். அதனடிப்படையில் அந்த சகோதரியின் மருத்துவ செலவுக்காக ரூபாய் 13,500/- ஐ நோயாளியின் உறவினர் கத்தார் காசிம் அவர்களிடம் வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள் குழு சார்பாக இன்று 22/8/2022 அரூர் பெரிய பள்ளிவாசலில் முத்தவல்லி AMS ஷபீர், தர்கா கமிட்டி தலைவர் கிரஸர் அலாவுதீன், படேல் நியாஸ், எலக்ட்ரீஷியன் நூர், வெளியூர் வாழ் குழு அட்மின் சுல்தான் ஆகியோர் முன்னிலையில் கொடுக்கப்பட்டது.

நியாயமான காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து, துணை நிற்க வேண்டும்.
அநியாயமான காரியங்களில் யாரும் யாருக்கும் உதவி செய்வதின் வழியாக பாவத்திற்கு துணை போகக்கூடாது. இதுதான் இஸ்லாத்தின் உயர்வான கூற்றாகும். இது குறித்து திருக்குர்ஆன் கூறுவதைப் பார்ப்போம்: ‘நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்’. (5:2) நன்மையான காரியங்கள் என்றால், எவற்றை செய்யும்படி இஸ்லாம் கட்டளையிட்டுள்ளதோ அத்தகைய அனைத்துவிதமான நற்செயல்களுக்கும் உதவி செய்வது ஆகும். பாவமான காரியங்கள் என்றால், எவற்றை முற்றிலும் விட்டுவிடும்படி இஸ்லாம் கட்டளையிட்டுள்ளதோ அத்தகைய அனைத்து விதமான கெட்ட செயல்களையும் விட்டுவிடுவது ஆகும்.
-----------------------------------------
*அட்மின்கள்*
*VVHIS குழு*
22/8/2022

அரூர் மக்களுக்கு பல அனுபவங்களை கொடுத்த அரூர் நகரின் பொக்கிஷம்.தாஸ் திரையரங்கம்.புகைப்படம் : RK studio
18/08/2022

அரூர் மக்களுக்கு பல அனுபவங்களை கொடுத்த அரூர் நகரின் பொக்கிஷம்.

தாஸ் திரையரங்கம்.

புகைப்படம் : RK studio

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள் குழு சார்பாக அனைவருக்கும் *75வது சுதந்திர தின நல் வாழ்த்த...
15/08/2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள் குழு சார்பாக அனைவருக்கும் *75வது சுதந்திர தின நல் வாழ்த்துக்களை* தெரிவித்துக் கொண்டு,

''இந்திய தேச விடுதலைக்காக இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்கு'' இதைப் பற்றிய ஒரு கட்டுரையை கீழே பதிவு செய்துள்ளோம்.

75 - வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும் நம் இந்திய தேசமும், இந்த தேசத்தின் அனைத்து சமய மக்களும் நினைத்துப் பார்க்க வேண்டிய நிகழ்வுகளும், வரலாற்றுப் பார்வைகளும் ஏராளம்.

இந்த தேசத்தில் சொந்தம் கொண்டாட எந்த ஒரு உரிமையும் முஸ்லிம்களுக்கு இல்லை என்பது போன்ற ஒரு மாயையை ஃபாஸிஸ, வகுப்பு வாத கும்பல்கள் உருவாக்கி, வரலாற்றில் எண்ணற்ற பல திரிபுகளை ஏற்படுத்தி இந்த தேசத்தின் வெகுஜன மக்களிடையே பரப்பி வருகின்றனர்.

மிகப் பெரும் துரதிஷ்டம் என்ன வென்றால் ”இந்த தேசத்தின் விடுதலைக்கும், உயர்வுக்கும், முன்னேற்றத்திற்கும் எல்லா வகையிலும் முஸ்லிம்களே முன்னோடிகளாக திகழ்ந்திருக்கின்றார்கள் என்பதை முஸ்லிம்களே அறிந்து வைத்திருக்க வில்லை” என்பது தான்.

இந்த தேசத்தின் எல்லையை தீர்மானித்தவர்கள் முஸ்லிம்கள்! இந்த தேசத்தின் வரைபடத்தை ஒழுங்கு படுத்தியவர்கள் முஸ்லிம்கள்!

சிறு, குறு நில ஆட்சி முறையை ஒழித்துக் கட்டி ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியதில் மொகலாய ஆட்சியாளர்களின் பங்களிப்பு அளப்பரியது.

வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கின்ற முஸ்லிம்களின் தியாக வரலாற்றை, குறிப்பாக இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் அரும் பெரும் தியாகங்களை சகோதர சமய மக்களுக்கு காய்தல், உவத்தலின்றி வெளிச்சம் போட்டு காட்டுவோம்.

பூரண சுதந்திரம் கோரி முதல் முழக்கமிட்டவன் இஸ்லாமியனே.

இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாகப் போரில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.

*அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்*

இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர்கள் செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.

*வரி தர மறுத்த வரிப்புலிகள்*

இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று பாடினார் பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ஆம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.

வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று யூகிக்க முடிகிறது.

*கதி கலக்கிய கான் சாஹிபு (எ) மருதநாயகம்*

ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப். இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.

*அஞ்சாத புலி ஹைதர் அலி*

18ஆம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் ‘முதலாம் மைசூர் போர்’ எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.

*தீரன் திப்பு சுல்தான்*

‘மைசூர் புலி’ திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.

1790ஆம் ஆண்டு முதல் 1792ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் ‘முடியாது’ என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.

*பிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்*

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.

பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ‘நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை’ என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.

ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும் பணியாற்றினார்கள்.

இப்படி இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நமது உயிராலும், பொருளாலும் எண்ணற்ற தியாகங்கள் செய்து இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்துள்ளோம்.

இந்திய நாடு எங்கள் நாடு, என்றும் நாங்கள் அந்நியரல்ல என்பதை நமது சகோதர சமுதாயத்தினரிடம் எடுத்துச் சொல்வோம். நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை மறைத்து, இந்த நாட்டிலிருந்து நம்மை அந்நியப்படுத்த நினைக்கும் தீய சக்திகளை அடையாளம் காட்டுவோம்.

மீண்டும் ஒருமுறை *அனைவருக்கும் இனிய 75வது சுதந்திர தின வாழ்த்துக்கள்*

*பெற்ற சுதந்திரத்தை காத்து நிற்போம்.*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

*இன்குலாப் ஜிந்தாபாத்*
*இந்தியா ஜிந்தாபாத்*
--------------------------------------
*வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள் குழுமம்*
*15/8/2022*

Address

Harur
636903

Website

Alerts

Be the first to know and let us send you an email when வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category