BJP Nelliyalam Nagar Mandal The Nilgiris

BJP Nelliyalam Nagar Mandal The Nilgiris Bharatiya Janata Party Nelliyalam Nagar Mandal, Pandhalur Taluk, The Nilgiris, Tamil Nadu.

05/04/2024

#நீலகிரி_பாராளுமன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், இன்றைய தேர்தல் பரப்புரையின் போது, பவானிசாகர் அணை அருகில், சாலையோரங்களில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் சிறு குறு வியாபாரிகளிடம் பழங்கள் வாங்கினோம்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. ஜி அவர்கள், கடந்த பத்தாண்டு காலங்களில் மேற்கொண்டுள்ள தொழில்நுட்பப் புரட்சியின் ஒரு பகுதியே ‘ஆன்லைன் பண பரிவர்த்தனை.’ அதனடிப்படையில் பரிவர்த்தனை முறையில் பணம் செலுத்தி வியாபாரிகளிடம் பழங்கள் பெற்றோம்.

நமது நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில் மட்டும் மத்திய அரசின் சாலையோர வியாபரிகளுக்கான கடன் உதவித் திட்டத்தின் கீழ் 10,437 நபர்கள் பயனடைந்துள்ளார்கள்.

“வளர்ச்சியடைந்த பாரதமே நமது லட்சியம்!”

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!”

 #நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் பகுதிகளில்,  #தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து இன்றைய தேர்தல் பரப...
05/04/2024

#நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் பகுதிகளில், #தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து இன்றைய தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்கினோம்.

எரங்காட்டூர், தொட்டம்பாளையம் மற்றும் பவானிசாகர் நகர் பகுதிகளில் மக்களைச் சந்தித்தோம்.

பெருந்தலைவர் காமராஜர் அய்யாவின் பெயர் கொண்ட பவானிசாகர் பேருந்து நிலையத்திற்கு, பெயர் மாற்றம் செய்வதற்கான பணிகள் மேற்கொண்டு வரும் ‘போலி திராவிட மாடலின்’ முயற்சிகள் முறியடிக்கப்படும்; மீன் வளர்ப்புக்கான திட்டப் பணிகள், மத்திய மீன்வளத்துறை சார்பில் முன்னெடுக்கப்படும் என்ற வாக்குறுதிகளை கொடுத்துள்ளேன்.

மேலும், முத்தரையர் சமூக மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ‘பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்’ அய்யாவிற்கு என்னுடைய சொந்த செலவில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பேன் என்பதை உறுதியளித்துள்ளேன்.

களத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; அந்த மாற்றத்தை நம்மால் மட்டுமே தர முடியும்.

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!’

 #நீலகிரி_பாராளுமன்றம், அவினாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையத்தில், தேர்தல் பரப்புரைகள் மேற்கொண்டு வாக்கு சேகரி...
04/04/2024

#நீலகிரி_பாராளுமன்றம்,
அவினாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையத்தில், தேர்தல் பரப்புரைகள் மேற்கொண்டு வாக்கு சேகரித்தோம்.

இப்பகுதியின் சுற்றுவட்டாரங்களில்
உள்ள சுற்றுச்சூழல் மற்றும் ஊர் நலன் சார்ந்த தன்னார்வலர்கள் நம்முடன் இணைந்து கொண்டார்கள்.

“தாமரையின் மலர்ச்சி..!
நீலகிரியின் வளர்ச்சி..!”

 #நீலகிரி_பாராளுமன்றம், அவினாசி தொகுதிக்குட்பட்ட கருவலூர், தெக்கலூர், ஆட்டையாம்பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள மக்களைச் சந...
04/04/2024

#நீலகிரி_பாராளுமன்றம், அவினாசி தொகுதிக்குட்பட்ட
கருவலூர், தெக்கலூர், ஆட்டையாம்பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள மக்களைச் சந்தித்து, இன்றைய தேர்தல் பரப்புரை மேற்கொண்டோம்.

ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு குறைகள் தலைதூக்கிய வண்ணம் இருக்கிறது. ஆட்சியமைப்பதற்கு மக்கள் அளித்த வாய்ப்பை, 2ஜி ராசாவை போன்றவர்கள் பயன்படுத்த தவறியிருப்பதன் விளைவே மக்களின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது.

பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்லாத பேருந்துகள், நலத்திட்டங்களுக்கான நிதியளித்தும் நிறைவேற்றப்படாத குடிநீர் பிரச்சனைகள் என்று பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

தற்போது மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். அதற்கான சான்று, செல்லும் இடங்கள் எல்லாம் நமக்கு உற்சாக வரவேற்பளிக்கிறார்கள்.

வழிகளில் உள்ள உப்பிலிபாளையம், வெங்கல்பாளையம், வெள்ளியம்பாளையம் மற்றும் வேலாயுதம்பாளையும் கிராமங்களில் வசிக்கின்ற பொதுமக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து, ஜூன் மாதம் முதல் ஒவ்வொன்றாய் நிறைவேற்றப்படும் என்கிற நம்பிக்கை அளித்துள்ளேன்.

மாற்றத்திற்கான விதை நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தூவப்படுகிறது!

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!”

09/03/2024

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்த, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் பிறந்த...
19/02/2024

தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்த, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் பிறந்த தினம் இன்று.

மூன்றாயிரத்திற்கும் அதிகமான ஓலைச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் மீட்டு, அழிந்துபோகும் நிலையிலிருந்த தொண்ணூறுக்கும் மேற்பட்ட பண்டையத் தமிழ் இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட்டவர்.

தமது அரிய பணிகள் மூலம் தமிழ் மொழியைக் காத்து வளர்த்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.

-திரு. K.அண்ணாமலை,
மாநில தலைவர்,
பாரதிய ஜனதா கட்சி,
தமிழ்நாடு.

தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்த, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் பிறந்த தினம் இன்று.

மூன்றாயிரத்திற்கும் அதிகமான ஓலைச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் மீட்டு, அழிந்துபோகும் நிலையிலிருந்த தொண்ணூறுக்கும் மேற்பட்ட பண்டையத் தமிழ் இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட்டவர்.

தமது அரிய பணிகள் மூலம் தமிழ் மொழியைக் காத்து வளர்த்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.

அறியப்படாத அதிசய மனிதர்கள்!நேர்மறையான எண்ணமும், நெஞ்சுரமும் கொண்டு முயன்றால் நமது கனவை அடைய முடியும் என்பதை உலகிற்கு தனத...
16/11/2023

அறியப்படாத அதிசய மனிதர்கள்!

நேர்மறையான எண்ணமும், நெஞ்சுரமும் கொண்டு முயன்றால் நமது கனவை அடைய முடியும் என்பதை உலகிற்கு தனது சாதனையின் மூலம் காட்டியிருக்கிறார் மதிப்பிற்குரிய சகோதரி திருமதி காயத்ரி அருள், சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- திரு. K. அண்ணாமலை (Ex. I.P.S) அவர்கள்.

மாநில தலைவர்,
பாரதிய ஜனதா கட்சி
தமிழ்நாடு.

அறியப்படாத அதிசய மனிதர்கள்!உளப்பூர்வமாக தமிழுக்கு சேவையாற்றி வரும் தமிழாசிரியர், முனைவர். வெற்றிவேல் அவர்களுக்கு எனது உள...
10/11/2023

அறியப்படாத அதிசய மனிதர்கள்!

உளப்பூர்வமாக தமிழுக்கு சேவையாற்றி வரும் தமிழாசிரியர், முனைவர். வெற்றிவேல் அவர்களுக்கு எனது உளமார்ந்த வணக்கங்களையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- திரு. K. அண்ணாமலை (Ex. I.P.S) அவர்கள்.

மாநில தலைவர்,
பாரதிய ஜனதா கட்சி
தமிழ்நாடு.

இன்று 08.11.2023 நெல்லியாள மண்டலுக்கு உட்பட்ட பந்தலூர் பஜார் பந்தலூர் மார்க்கெட் பந்தலூர் அட்டி சேலக்குன்னு  ஆகிய பகுதிக...
08/11/2023

இன்று 08.11.2023 நெல்லியாள மண்டலுக்கு உட்பட்ட பந்தலூர் பஜார் பந்தலூர் மார்க்கெட் பந்தலூர் அட்டி சேலக்குன்னு ஆகிய பகுதிகளில் மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை ஜி ஆணைப்படி மாவட்ட தலைவர் திரு.மோகன்ராஜ் ஜி ஆலோசனைப்படி நகர தலைவர் திரு. அண்ணாதுரை தலைமையில் நகர நிர்வாகிகள் கிளை தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள்‌ அனைவரும் கலந்து கொண்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

பாரத் மாதா கி ஜெய் ✊🏽🇮🇳 🪷

Address

Gudalur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Nelliyalam Nagar Mandal The Nilgiris posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share