26/09/2023
*என்ன நடந்தது சென்னிமலையில்?*
ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோயில் பிரசித்தி பெற்ற ஸ்தலம். கந்த சஷ்டி கவசம் முதல்முறையாக அரங்கேற்றப்பட்ட ஸ்தலம் இது.
சரி பிரச்சனைக்கு வருவோம்.
சென்னிமலையில் இருந்து அரச்சலூர் செல்லும் சாலையில் கத்தக்கொடிகாடு என்ற கிராமத்தில்.
சென்னிமலை அருகில் பசுவபட்டியைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவர் வீடு வாங்கி மத போதகராக கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். கடந்த இரு வருடங்களாக ஜெப கூட்டங்கள் நடத்துவதும், ஒலிபெருக்கி மூலம் இந்து தெய்வங்களை அவமதிப்பது தவறாக பேசுவது என்பது தொடர் கதையாக இப்பகுதியில் நடந்து வந்துள்ளது.
இதை கண்டித்து அவ்வூர் மக்கள் பலமுறை சென்னிமலை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
மேலும் சென்னி மலையை சுற்றி ஐந்து கொலைகளும் ஏகப்பட்ட கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் கொலை சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகளை ஒருவருடமாகியும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
அதனால், காவல் நிலையத்தினர் புதிதாக இப்பகுதியில் யார் வந்தாலும் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பதுடன். தகுந்த காரணம் இன்றி கிராமங்களுக்குள் வருபவரை கேள்வி கேட்க பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
சம்பவத்தன்று, காவல் நிலையத்தில் அனுமதி இன்றி மதப் பிரச்சாரம் மற்றும் ஜெபக்கூட்டங்களை ஜான் பீட்டர் அவர்கள் கத்தக்கொடிகாடு பகுதியில் நடத்தியுள்ளார்.
இந்து தெய்வங்களையும் இந்துக்களையும் பற்றி தவறாக பழித்துக் கூறவே அதைக் கண்டித்து அக்கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மற்றும் அவரது மகன் போய் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர்களை தகாத வார்த்தையால் பேசியதுடன், குண்டர்களை வைத்து ஜான் பீட்டர் மற்றும் அவர்கள் சகாக்கள் தாக்கி அனுப்பியுள்ளனர்.
அதைக் கண்டித்து கிராம மக்கள் சுமார் 60 பேருக்கு மேல் அங்கு சென்றனர் அதில் இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட பத்து பேருக்கு மேல் திமுகவினரும் அடக்கம்.
இரு தரப்பினரும் சென்னிமலை காவல் நிலையத்தில் இந்தப் பிரச்சினையைப் பற்றி புகார் அளித்துள்ளனர்.
சென்னிமலை காவல் துறையினரின் தகுந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இப்படி போய்க்கொண்டிருந்த வேளையில்.
போன வாரம் ஞாயிற்றுக்கிழமை (17/9) அன்று சனாதன எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் சென்னிமலையில் புரட்சிகர இளைஞரணி மற்றும் கீழ்பவானி ஆயகட்டு விவசாய சங்க செயலாளர் கி.வெ.பொன்னையன் என்பவர் இதைப் பற்றி அந்த மாநாட்டில் பேசினார். இதைக் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சென்னிமலை காவல்துறையினர் சின்னசாமி மற்றும் அவரது மகனை கைது செய்துள்ளனர்.
பசவுபட்டியைச் சேர்ந்த கி.வெ.பொன்னையன் அவர்கள் தன் ஊரைச் சேர்ந்த பாஸ்டர் ஜான் பீட்டர் ஆதரவாக அரசியல் களத்தில் ஆதரவுகளை திரட்டினார். மேலும் இரு மாதங்களுக்கு முன்பு அரச்சலூர் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் காங்கிரிட் எதிர்ப்பு போராட்டத்தின் போது கி.வெ. பொன்னையன் மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரை கீழ்பவானி விவசாயிகள் சிறை பிடித்தனர். அதை மனதில் வைத்துக் கொண்டு அந்த பிரச்சனைக்கு பழிவாங்கும் விதமாக . கத்தக்குடி காட்டிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலிறுக்கும் அரச்சலூர் சேர்ந்த விவசாயி திரு.தமிழரசு என்பவரை அடையாளம் தெரியாத குற்றவாளிகள் என்ற பட்டியலில் சேர்த்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், திரு வைகோ திரு சுப வீரபாண்டியன் முதலானோர் கண்டன அறிக்கை விடுத்தனர்.
நேற்று, திங்கட்கிழமை (25/9) காலை 11 மணியளவில் கிறிஸ்தவ முன்னணி என்ற அமைப்பினர் சார்பில் சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலவரத்தை தூண்டும் விதமாக தகாத முறையில் பேசியதுடன். இந்து முன்னணி இந்துக்கள் மற்றும் பாஜகவினரின் தகாத வார்த்தையால் திட்டி பேசி உள்ளனர்
*சென்னிமலையை கல்வாரி மலை (கிறிஸ்தவ மலை) என பெயர் மாற்றம் செய்வதுடன். சென்னிமலை முருகன் கோயிலை கிறிஸ்துவ கோவிலாக மாற்றுவேன் என சூளுரைத்தனர்*.
இதைக் கேட்டு வெகுண்டு எழுந்த சென்னிமலை பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையின் பேச்சுக்கினங்க போராட்டம் நிறுத்தப்பட்டது.
கிறிஸ்தவ முன்னணியர் பேசிய பேச்சுக்கள் வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது.
வன்முறையை தூண்டும் விதமாக பேசிய விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கிறிஸ்துவ அமைப்பினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக மதப் பிரச்சினையை தூண்டிவிடும் ஆசாமிகள் மீது தமிழக அரசு மற்றும் காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.