07/01/2025
2025ம் ஆண்டிலும் அருந்ததியர்களின் யாதர்த்த நிலை என்ன என்பதை உணர்த்தும் செயல் இது.
அருந்ததியர்களின் உள் இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் நோக்கிலும், அம்மக்களிடையே அரசியல் எழுச்சியை ஏற்படுத்தவும், அரசியல், அதிகார பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அம்சங்களை முன்னிறுத்தி அறவழியான பேரணியை அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை எழும்பூரில் 6.1.2025 அன்று மாபெரும் பேரணி நடைபெற்றது. பாமர மக்களின் பாதங்கள் சென்னை சாலை மிடுக்காய் அணிவகுத்தனர், அரசியல்-அதிகார வெளிச்சம் வேண்டி அவர்கள் ஒங்கி ஒலித்த குரல்கள், அனைவரையும் எழுச்சியில் ஆழ்த்தியது.
ஆனால், பத்திரிக்கை, காட்சி ஊடகம் இம்மக்களுக்கு ஆதரவாக ஒரு செய்தியினை கூட பதிவிடவில்லை. சந்தையூர் நிகழ்வு தொடங்கி இந்த பேரணி வரை மைய நீரோட்டம் ஊடகங்களின் நிலைப்பாடு அருந்ததியர்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. சாதியின் பெயரால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புறகணிப்பு என்பதை மட்டுமே அனுபவித்த மக்கள், இப்போது ஊடகங்களாலும் புறகணிக்கப்படுகிறார்கள்.
இந்த பேரணி தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகம் / பத்திரிக்கை:
சன் நியூஸ்
ஹிந்து தமிழ் திசை ( புகைப்படம் மட்டும்)
செய்தி வெளியிடாத ஊடகங்கள் :
புதிய தலைமுறை
தந்தி டிவி
நியூஸ்7
நியூஸ் தமிழ் 24/7
கலைஞர் செய்திகள்
நியூஸ்18
மாலைமுரசு
ராஜ் டிவி
செய்தி வெளியிடாத பத்திரிகைகள் :
தினதந்தி
தினமலர்
தினமணி
தினகரன்
Times of India
The Hindu
Indian express
இதற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? இந்த செயல் எதை உணர்த்துகிறது? நாம் என்ன செய்ய போகிறோம்?
#அருந்தியர்கள் #அருந்ததியர்பேரணி #உள்இடஒதுக்கீடுபேரணி #சனவரி6 Rani Guhan வெள்ளைக்குதிரை இதழ் பழ.பேரறிவாளன் திராவிடத் தமிழர் கட்சி தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம் ஆதித்தமிழர் பேரவை தமிழ்நாடு ஆதித்தமிழர்பேரவை வேலன் மாதாரி