11/06/2021
தனது வாழ்க்கையின் ஒரு பகுதியை ஈரோடு நகர முன்னேற்றத்திற்க்காக செலவு செய்தவர் ஈரோடு மீனாட்சி சுந்தரனார் (எ)
எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் ex Chairman
தான் உழைத்து சம்பாதித்த சொத்தில் கலைமகள் கல்வி நிலையம் என்ற பெரிய கல்வி நிலையத்தை உருவாக்கி மக்களுக்கு சேவை செய்து, பின்பு அந்த சொத்தை ஈரோடு மக்கள் அனைவருக்கும் சொந்தம் என உயில் எழுதி வைத்தவர்
மீனாட்சிசுந்தரனார்.
இது பொது அமைப்பு. இன்றுவரை ய்து சாதி மாதத்திற்க்கு அப்பாற்ப்பட்ட அமைப்பாக செயல்படுகிறது.
ஐயா மறைந்த காலத்தில் இந்த அமைப்பின் senior staff Christian மத்தை சேர்ந்த முத்தையா அம்மாள். இவர் சிறப்பக இந்த பள்ளியை மேம்படுத்த பாடுபட்டவர் என்பதால் அவர்கே சாதி மத வேற்றுமைகளை கடந்து தலைவர் பொறுப்பை வழங்கினார்.
1952 முதல் 1955 வரை ஈரோடு நகராட்சித் தலைவராகப் பணியாற்றி பல திட்டங்களைச் செயல்படுத்தினார்.
ஈரோடு கோட்டை, கைக்கோளன் தோட்டம், பட்டக்காரர் ஆகிய பகுதி களில் குடிநீர் - தேவையை பூர்த்தி செய்ய குழாய்களை அமைத்தார். 1955 ம் வருடம் 1000 புதிய குடிநீர் இணைப்பை வழங்கியதோடு, இறைப்பு நிலையத்தின் கருவிகளை புதுப்பித்து நாள்தோறும் வழங்கும் நீரின் அளவை 7 லட்சம் காலன் (3.78 லட்சம் லிட்டர்) ஆக உயர்த்தி சாதனை படைத்தார். கர்ப்பிணி பெண்களின் துயர் துடைக்க பிரசவ விடுதியும், நகராட்சி ஊழியர்களுக்கு குடியிருப்பையும், 30 தெருக்களை சீரமைக்கவும் செய்தார்.
திருநகர் குடியிருப்பின் தலைவராக இருந்த 7 ஆண்டுகளில் சாலை வசதி, மின்விளக்கு வசதி, குழந்தைகள் விளையாடுமிடம், சாலையோரம் மரங்கள் உட்பட பல செயல்களால் நகரை செழிக்க செய்தார். ஈரோடு பசுழற்கழகம் தொடங்கியதிலிருந்து 15 ஆண்டுகள் உறுப்பினராகவும், ஒரு முறை தலைவராகவும் இருந்து தொண்டாற்றினார். எஸ் பி எல் ஏ தலைவராகவும், கூட்டுறவு அர்பன் வங்கியின் 1 தலைவராகவும், பெஞ்ச் கோர்ட் தலைவராகவும் இருந்து பல அரிய சேவைகளை செய்துள்ளார்.
கல்வியையும், பொதுவாழ்வையும் இரு கண்களாக போற்றிய மீனாட்சி சுந்தரனார்.
*சுதந்திர போராட்டம்*
சுதந்திர போராட்டக் களத்தில் ஆங்கிலேயரின் அடக்குமுறையில் இந்தியா கட்டுண்டு கிடந்தபோது, ஈரோட்டில், கதர் இயக்கம், கள்ளுக் கடை மறியல், அந்நியத் துணி எரிப்பு போன்ற போராட்டங்களை நடத்திய ஈ.வெ.ரா. சிறை சென்ற போது, அந்த போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து நடத்தியவர் மீனாட்சி சுந்தரனார். சுதந்திர போராட்டக் களத்தில் திருச்செங்கோடு வந்திருந்த மகாத்மா காந்தியடிகளுக்கு ஈரோட்டிலிருந்து அங்கு சென்று அவருக்குப் பணி விடை செய்து அவரின் சீரிய தொண்டரானார்.
1921ல் மகாகவி பாரதியார் ஈரோடு வந்த காலத்தில் கருங்கல் பாளையம் நூலகத்தில் நேரில் சந்தித்து, அவருக்கு நெருங்கிய நண்பரானார்.
கல்விப் பணியில்...... 'கடமையைச் செய் பலனை கலைமகள் கல்வி நிலையத்தை வாசகத்துக்கு சான்றாக கல்வியையும், பொது வாழ்வையும் தம் கண்களாகக் வாழ்ந்து கல்வி தருமொழி ஐயா எதிர்பாராதே!' என்ற நிர்வகித்து வந்தார். உண்மையான சமுதாய முன்னேற்றத்திற்கு பெண் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தி கொண்டு மறைந்தவர்