CPIM Dharmapuri

CPIM Dharmapuri CPIM
DHARMAPURI DISTRICT COMMITTE OFFICIAL FACE BOOK PAGE

28/05/2025

எளிய மக்களை கடுமையாக பாதிக்க கூடிய ரிசர்வ் வங்கியின் நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகளை உடனடியாக திரும்பப் பெற ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்த வலியுறுத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சு.வெங்கடேசன்.எம்.பி., நேரில் சந்தித்து கடிதம்! - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், ReserveBank More: https://youtu.be/RviF0J9oOfg

26/05/2025

மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்து - நீதி விசாரணைக்கு உத்தரவிடு!
சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்எல்) லிபரேசன் கட்சிகளின் சார்பில் ஜூன் 2 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம். More: https://shorturl.at/LFXrP

பாசிசம் இன்று தோழர். முத்துக் கண்ணன் மாநில செயற்குழு  அவர்கள் @முத்து இல்லம் தருமபுரி
15/05/2025

பாசிசம் இன்று

தோழர். முத்துக் கண்ணன்
மாநில செயற்குழு அவர்கள்
@முத்து இல்லம்
தருமபுரி

2004 மக்களவை தேர்தல் முடிவில் 145 இடங்களில் வென்ற காங்கிரஸ் இடதுசாரி ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்கலாம் எனும் சூழல் வருகிற...
15/04/2025

2004 மக்களவை தேர்தல் முடிவில் 145 இடங்களில் வென்ற காங்கிரஸ் இடதுசாரி ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்கலாம் எனும் சூழல் வருகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அவர்களை சந்திக்கிறார்.

பொலீட் பியிரோ கூடி ஒரு முடிவுக்கு வருகிறது.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நினைத்திருந்தால் தனக்கு வேண்டிய முக்கிய இலாக்காகளை எடுத்து கொண்டு அமைச்சரவையில் பங்கேற்று இருக்கலாம்.அந்த தார்மீக உரிமையை அன்னை சோனியா மார்க்சிஸ்ட் கட்சிக்கு தந்திருந்தார்.

மத்திய அமைச்சருக்கு ஆசை பட்டிருந்தால் அப்போது மதுரையில் இருந்து மோகனும் கன்னியாகுமரியில் இருந்து பெல்லார்மினும் சக்தி வாய்ந்த அமைச்சராத வலம் வந்திருப்பார்கள்.

அதே சமயம் இடதுசாரிகள் வேறொரு திட்டத்தை வைத்திருந்தார்கள்.
அந்த குறைந்த பட்ச உறுதி அளிப்பு திட்டத்தை காங்கிரஸ் அரசும் ஏற்று கொண்டது.

அதன் விளைவாய் கிடைத்ததுதான்

இந்தியாவில் உள்ள ஏழை எளிய விவசாயக் கூலிகள் பயன்பெறும்

🩸மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம்.

இந்தியாவில் ஒரு சாமானியன் ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்கும்

🩸தகவல் அறியும் உரிமை சட்டம்.

கார்பரேட்களிடம் இருந்து இந்தியாவின் இயற்கை வளத்தை பாதுகாக்கும்

🩸வனபாதுகாப்பு சட்டம்

🩸உணவு பாதுகாப்பு சட்டம்

இப்படி ஏராளம்.

மேலும் இந்த ஆட்சி முடியும் வரை பெட்ரோல் - டீசல் -கேஸ் விலை உயர்ந்தபடாமல் காங்கிரஸ் கட்சியை நெறியாள்கை செய்து வெளியில் இருந்து ஆட்டுவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

மீண்டும் இது போல் ஒரு வசந்த காலம் மலர இடதுசாரி கட்சிகளின் எண்ணிக்கை பாராளுமன்றத்தில் உயர்வது கட்டாயம்.

துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழுவை ஆளுநரை நியமிப்பார் என்ற   வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப் பெற   அரசியல் தலைமைக...
08/01/2025

துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழுவை ஆளுநரை நியமிப்பார் என்ற வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப் பெற அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்

  24வது மாநில மாநாட்டில் 80 மாநிலக்குழு உறுப்பினர்களும், மாநிலக்குழு செயலாளராக தோழர் பெ.சண்முகம் தேர்வு.
05/01/2025

24வது மாநில மாநாட்டில் 80 மாநிலக்குழு உறுப்பினர்களும், மாநிலக்குழு செயலாளராக தோழர் பெ.சண்முகம் தேர்வு.

கைத்தொழிலான நெசவு தொழில் செய்யும் வீடுகளுக்கு இண்டஸ்ட்ரின்நிலவரி விதிப்பதை  நகராட்சி நிர்வாகம் ரத்து செய்ய சிபிஎம் வலியு...
17/12/2024

கைத்தொழிலான நெசவு தொழில் செய்யும் வீடுகளுக்கு இண்டஸ்ட்ரின்
நிலவரி விதிப்பதை நகராட்சி நிர்வாகம் ரத்து செய்ய சிபிஎம் வலியுறுத்தல்.

தருமபுரி டிச-17,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே. விசுவநாதன்,சிஐடியு மாநில செயலாளர் சி. நாகராசன் மாவட்ட செயலாளர் பி. ஜீவா ஆகியோர் தருமபுரி அன்ன சாகரம் நெசவு தொழிலாளர்களை சந்தித்து தொழில் குறித்து கேட்டறிந்தார். அப்போது தொழில் செய்வதில் ஏற்படும் சிக்கல் நகராட்சி வரி விதிப்பால் ஏற்படும் இன்னல்கள் குறித்து தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் அன்னசாகரம், எட்டிமரத்துப்பட்டி, இலளிகம், எரங்காட்டுக்கொட்டாய், உங்கரானஅள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, காந்தி நகர், மாட்லாம்பட்டி, ஓட்டப்பட்டி, பாரதிபுரம், ஐருகு, சோம்பட்டி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூர், கம்பைநல்லூர் காரிமங்கலம், பாலக்கோடு, புலிகரை, ஐயம்பட்டி, இண்டூர், கடகத்தூர், பொம்மிடி, ஓடசல்பட்டி, மொரப்பூர், ஜாலியூர், வடகம்பட்டி, பெரிய வடகம்பட்டி, தொப்பூர் வெல்லக்கல், மற்றும் பல்வேறு கிராமங்களில்1500 குடும்பத்தினர்கள் பல ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக நெசவு தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நெசவு தொழில் செய்ய அரசே விசைத்தறிகள் வாங்க மாணிய விலையில் தந்தனர். மாணிய வட்டி வழங்கியுள்ளது.

மற்றும் தமிழக அரசானது சிறு விசைத்தறியாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறது. இதனால் இவர்கள் இந்த தொழிலை செய்து வருகின்றனர்.
அரசு வழங்கும் மானியங்கள் காரணமாகவே விசைத்தறி தொழில் நடைபெறுகிறது. இதனால் சுமார் 2000 பேர்களுக்கு சுய வேலை வாய்ப்பு கிடைக்கின்றது.

நூல் விலை ஏற்றம் காரணமாகவும், வியாபார மந்தம் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளாலும் மற்றும் நவீன உயர்ரக விசைத்தறி இவைகளாலும் இத்தொழில் செய்து வருபவர்கள் இந்த தொழிலை நடத்த முடியாமல் பல்வேறு கூலி வேலைக்கு செல்கின்றனர்.
இவர்களுக்கு வேறு தொழில்கள் தெரியாத காரணத்தினால் குறைந்த வருமானம் கூலி கிடைத்தால் போதும் என்று இந்த தொழில் அழிந்து விடாமல் இருக்கவும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

தற்போது தருமபுரி நகராட்சி நிர்வாகமானது கைத்தொழிலாக செய்து வரும் விசைத்தறிகளுக்கு இண்டஸ்ட்ரியல் வரியாக அடிக்கு 12 வீதம் விதிக்கப்படும் என்று எந்த அறிவிப்பும் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக வரி விதித்து வருகின்றனர்.
சரத்து 265-ன்படி சட்டமன்றத்தால் சட்டம் இயற்றினால் தான் வரி விதிக்கும் அதிகாரம் ஏற்படும். ஆனால் நகராட்சியினரே வரி விதிக்கும் அதிகாரத்தினை கையெடுத்துக்கொண்டு கைத்தொழில் செய்பவர்கள் மீது அதி வரியாக இண்டஸ்ட்ரியல் வரி விதிப்பது சட்டப்படி செல்லத்தக்கதல்ல ஷரத்து 19 (1) (எப்) தொழில் செய்யும் பணிசுமையை பாதிக்கும் செயலாகும்.
மற்றும் வரி விதிப்பது பற்றியும் எவ்வித முன்னறிவிப்போ. அறிக்கையோ தராமல் தாங்களே இஸ்டம் போல் நடப்பது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.மற்றும் தினக் கூலிக்கு நெசவு செய்யும் தொழிலில் உள்ளவர்களுக்கு இண்டஸ்ரியல் வரி விதிப்பது என்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.எனவே நகராட்சி நிர்வாகம் நெசவு தொழில் செய்பவர்களுக்கு வரிவிதிப்பை தடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டக்குழு மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொண்டுள்ளது.

வாழ்த்துக்கள் தோழர்
16/12/2024

வாழ்த்துக்கள் தோழர்

15/12/2024

Address

Sengodipuram Dharmapuri
Dharmapuri
636701

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Dharmapuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share