19/03/2024
அதிமுக கூட்டணிக்கு நம்பத்தகுந்த கட்சி இல்லை - பா.ம.க வுக்கு தருமபுரி சொல்லித்தரும் பாடம்..
அதிமுக கூட்டணிக்கு உகந்த கட்சி அல்ல என்பது பா.ம.க வுக்கு தெரிந்தும்,
2021 ஆம் ஆண்டு அஇஅதிமுக வுடன் கூட்டணியை ஏன் வைத்தார்கள் என்றால், வன்னியர் இட ஒதுக்கீடு என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும்தான் என்பதை அனைவருக்கும் உதாரணத்துடன் சொல்ல வேண்டிய கடமை உள்ளது.
அதிமுக கூட்டணிக்கு உகந்த கட்சி அல்ல அன்று ஏன் சொல்கிறோம் என்றால், கடந்த 2014 ஆம் ஆண்டு மருத்துவர் அன்புமணி அவர்கள் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட போது, சுமார் 42.5 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெறுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரோ 35.5 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பெறுகிறார். ஆக மொத்தம் 2014 ஆம் ஆண்டு தர்மபுரி தொகுதியில் அதிமுக மற்றும் பாமக பெற்ற வாக்குகள் 78%.
அதே தருமபுரி தொகுதியில் அதே மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2019 போட்டியிடும் போது பெற்ற வாக்கு சதவீதம் எத்தனை தெரியுமா? 41 மட்டுமே! அதாவது முன்பு பதிவான 78 சதவீதத்தில் 37 சதவீத வாக்குகள் பதிவாகவில்லை.
அதே நேரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சில தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுக ஆட்சி நீடிக்கும் என்ற நிலை வந்தபோது, பாமக முழு ஆதரவை அளித்தது. இக்கட்டான நிலையில் 18 தொகுதி சட்டமன்ற தேர்தலை சந்தித்த அதிமுக, பாப்பிரெட்டிப்பட்டி அரூர் சோளிங்கர் ஆகிய 3 தொகுதிகளில் பாமகவின் பலத்தோடு தான் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை வைத்து தான் அதிமுக அடுத்து இரண்டு ஆண்டுகள் ஆட்சி அமைத்தது என்பதுதான் வரலாறு.
அந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கு வாக்களிக்கவில்லை என்பதுதான் உண்மையான நிலவரம். தருமபுரி மக்களவை தொகுதிக்கு அடங்கிய அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் இடைத்தேர்தலும் நடைபெற்றது. அவர்கள் சட்டமன்றத்திற்கும் மக்களவைக்கும் வாக்களித்தார்கள்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில், அரூரில் இரட்டை இலைக்கு 88632 பேர் வாக்களித்த நிலையில் மாம்பழத்திற்கோ 65072 பேர் மட்டுமே வாக்களித்தார்கள். அதாவது 23560 பேர் அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள், பாமகவிற்கு வாக்களிக்கவில்லை. அதே போன்று பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுமார் 103981 வாக்குகளை பெற்ற அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 94029 வாக்குகளை மட்டுமே பெறுகிறார். அதாவது 9952 வாக்குகள் அதிமுகவிற்கு போட்டவர்கள் பாமகவிற்கு போடவில்லை.
ஒரே நேரத்தில் நடைபெற்ற தேர்தலில், இரண்டு தொகுதிகளில் மட்டுமே 33,512 பேர் அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் பாமகவிற்கு வாக்களிக்கவில்லை என்பதுதான் உண்மையான வரலாறு..
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் 2019ல் சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றார்.
இந்த 33512 அதிமுகவினரும் பாமகவிற்கு வாக்களித்து இருந்தால் வெற்றிக் கோட்டிற்கு மிக அருகில் அன்புமணி அவர்கள் இருந்திருப்பார். அதேபோன்று அன்றைய அமைச்சர் கே பி அன்பழகனுக்கு சொந்தமான பாலக்கோடு தொகுதியில் சுமார் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பின்தங்கி இருந்தார்.
தர்மபுரி என்ற இந்த ஒற்றை தொகுதியிலேயே அதிமுகவின் கூட்டணி நிலவரம் என்ன? அதனால் நமக்கு கிடைத்த பலன் என்ன? என்பது தெரிந்து விட்டது. 2014 இல் அதிமுக தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்ற மத்திய சென்னை, திண்டுக்கல் தொகுதியில் பாமக வைப்புத்தொகை பெறவே தடுமாறியது ஏன்? அதிமுகவினரின் வாக்குகள் எங்கே சென்றது?
கடந்த 2019 ஆம் ஆண்டு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட போது, ஒட்டுமொத்தமாகவே அதிமுக கூட்டணி 30 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 39 சதவீத வாக்குகளை பெற்றது.
அதேபோன்று 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 19% வாக்குகளை மட்டுமே பெற்ற அதிமுக, 2021 ஆம் ஆண்டு 33 சதவீத வாக்குகளை பெற்றது எப்படி?. 2019 இல் 5.5 சதவீத வாக்குகளை பெற்ற பாமக 2021 இல் 3.8 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது எப்படி?
பாமகவின் கோரிக்கையான வன்னியர் இட ஒதுக்கீடு என்பதை தனக்கு சாதகமாக்கி, பாமகவை பலிகடவாக்கி தன்னுடைய வளர்ச்சியை தன்னுடைய இடத்தினை தன்னுடைய கட்சியில் வலுப்படுத்திக்கொள்ள தந்திரமாக சூழ்ச்சி செய்து, வன்னியர்களின் வாக்குகளை அறுவடை செய்த எடப்பாடி பழனிச்சாமி, தன்னை ஒரு தலைவராக நிலை நிறுத்திக் கொண்டார் என்பது தான் வரலாற்று உண்மை.
அதிமுகவிற்கு 14% வாக்குகள் உயர்ந்த நிலையில் பாமகவிற்கு 2 சதவீத வாக்குகள் குறைந்தது எப்படி? பாமக செய்த தியாகம்தானே! அதிமுக பாமக கூட்டணி அமைந்ததால் பாமகவின் வாக்குகள் முழுமையாக அதிமுகவிற்கு சென்றதுடன், மேலும் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக பாமக செய்த போராட்டங்களின் பலனாக மேலும் கூடி வந்த வன்னியர்களின் வாக்குகளும் அதிமுகவிற்கு சென்றதே தவிர, அதிமுகவின் வன்னியர் இல்லாத இதர சாதிகளின் வாக்குகளும் அதிமுகவின் தலித் வாக்குகளும் அதிமுகவினரால் பாமகவிற்கு கிடைக்கவில்லை. அதனால் பல தொகுதிகளில் பாமகவினர் சொற்ப வாக்குகளில் தோல்வி அடைய நேரிட்டது.
அதிமுகவின் வெற்றிக்கு பாமகவின் முழுமையான ஒத்துழைப்பும், பாமகவின் தோல்விக்கு அதிமுகவின் வாக்குகள் முழுமையாக வந்து சேராமை மட்டுமே காரணம். அதிமுக பாமக கூட்டணி என்பது ஒரு பொருந்தாத கூட்டணி..
இதில் விளைந்த ஒரே பயன் என்றாவது ஒருநாள் வன்னியர் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் தான்.
மருத்துவர் அய்யாவின் உழைப்பில், மருத்துவர் அய்யாவின் அரசியல் சாதுரியத்தால், மருத்துவர் அய்யா அவர்கள் உழைத்து வளர்த்த கட்சியின் தியாகத்தில் உருவானதுதான் 10.5 % வன்னியர் இட ஒதுக்கீடு. அதற்கும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், சிவி சண்முகம் அவர்களுக்கும் , கே பி முனுசாமி அவர்களுக்கும் துளியும் தொடர்பில்லை.
பாமக - பாஜக கூட்டணியில் ஏற்கனவே 2014 இல் தருமபுரியில் வென்றோம், 2009, 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியைத்தான் சந்தித்தோம்..
ஆக பாஜக கூட்டணி என்பது தவறான முடிவல்ல, மாற்றத்திற்கான, கட்சியின் வளர்ச்சிக்கான முடிவு என்பதை உறுதியாக நம்புங்கள்நம்புங்கள்
K.Annamalai
TN29 BJP IT&SM WING Dr.Anbumani Ramadoss For Change