12/01/2024
பொங்கல் விழா அழைப்பிதழ்
ஜி.கே.மணி MLA அவர்கள்
பேரன்புடையீர், வணக்கம்.
வருகின்ற 13.01.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு பென்னாகரத்தில் தர்மபுரி நெடுஞ்சாலையில் உள்ள மல்லிகை மகால் திருமண மண்டபத்தில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. பொங்கல் வைத்து கொண்டாடப்படும் கலைநிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இப்பொங்கல் விழாவில் நமது முன்னோடிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், அணிகள் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தை பிறந்தால் வழி பிறக்கும்... புதிய நம்பிக்கையுடன், உடல் ஆரோக்கியமுடன், வளமும் நலமும் பெற்று நீங்களும் குடும்பத்தினரும் நீடுழி வாழ இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவண்.
அன்புடன் அழைக்கும் ஜி.கே.மணி கௌரவ தலைவர் பா.ம.க. சட்டமன்றகுழு தலைவர். பென்னாகரம் தொகுதி நிர்வாகிகள்.