தேவாலா prcc ஆலை எதிர்ப்பு இயக்கம்

  • Home
  • India
  • Devala
  • தேவாலா prcc ஆலை எதிர்ப்பு இயக்கம்

தேவாலா prcc ஆலை எதிர்ப்பு இயக்கம் மக்களின் வாழும் உரிமைக்கான போராட்டம?

எத்தனை ஆண்டுகள்.? எத்தனை போராட்டங்கள்.?எத்தனை கண்ணீர் கதைகள்.?எத்தனை வழக்குகள்.? அனைத்திற்கும் பலன் கிடைத்தது இன்று..!!ம...
04/08/2025

எத்தனை ஆண்டுகள்.?
எத்தனை போராட்டங்கள்.?
எத்தனை கண்ணீர் கதைகள்.?
எத்தனை வழக்குகள்.?

அனைத்திற்கும் பலன் கிடைத்தது இன்று..!!

மக்கள் சக்தியை மீறி பண பலம் என்றுமே வெற்றி பெறாது நியாயமான போராட்டங்கள் ஒரு போதும் தோற்காது என்பதை மீண்டும் ஒரு முறை காலம் நிரூபித்துள்ளது..

கடந்த வாரம் PRCC தார் கலவை ஆலையின் சுற்று சுவர் இடிந்து பல வீடுகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து தேவாலா மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்றும் 03/08/25 இன்று அபாயகரமான பாதுகாப்பு குறைபாடு மற்றும் விதிமீறல் உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக்காட்டி தேவாலாவில் சட்ட விரோதமாக இயங்கி வந்த PRCC தார் கலவை ஆலையை அதிகாரிகள் சீல் வைத்து மூடினார்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..

மக்களின் இந்த பல ஆண்டு கால வாழும் உரிமைக்கான போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ ராசா அவர்களுக்கும் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பொன் ஜெயசீலன் அவர்களுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு திராவிடமணி அவர்களுக்கும் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும், அனைத்து சமூக நல அமைப்புகளுக்கும், அனைத்து வியாபார சங்கங்களுக்கும் வியாபாரிகளுக்கும், அனைத்து ஓட்டுநர் நண்பர்களுக்கும், அனைத்து சமூக நல ஆர்வலர்களுக்கும் தேவாலா மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.. 🤝🤝

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் அடுத்த தலைமுறை இந்த நச்சு ஆலையால் பாதிக்கப்பட கூடாது என்கிற ஒற்றை லட்சியத்தை இதயத்தில் தாங்கி சொந்தமாக ஆலைக்கு எதிராக பல வழக்குகளை தொடுத்து மக்களை ஒன்று திரட்டி பல போராட்டங்களை முன்னெடுத்து 2020ம் ஆண்டு PRCC ஆலைக்கு சீல் வைக்க காரணமாக இருந்து நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற போராட்ட நாயகன் திரு. [ முகமது அனீஷ். V ] அவர்களை இந்நேரத்தில் நினைவு கூறுகிறோம்..

நன்றி.. நன்றி.. நன்றி..

இவன்
தேவாலா PRCC ஆலை எதிர்ப்பு போராட்ட குழு

*தேவாலா PRCC தார் கலவை ஆலை நாளை மீண்டும் திறப்பு*எளிய மக்களுக்காக இரவு பகல் பாராமல் அயராது செயல்பட்டு அண்டை மாநிலங்களிலு...
29/12/2024

*தேவாலா PRCC தார் கலவை ஆலை நாளை மீண்டும் திறப்பு*

எளிய மக்களுக்காக இரவு பகல் பாராமல் அயராது செயல்பட்டு அண்டை மாநிலங்களிலும் உலக தமிழர்களின் பாராட்டு பெற்று சரித்திரம் படைத்து வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களின் மக்கள் நல அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நூற்றுக்கணக்கான மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தனி ஒரு முதலாளியின் நலனுக்காக PRCC தார் கலவை ஆலை மீண்டும் நாளை திறந்து செயல்படவுள்ளது என்பது மிகவும் கண்டனத்துக்குரியது

கடந்த மாதம் கூட மஞ்சள் காமாலை நோய் போக்கர் காலனி குடியிருப்பு பகுதியில் வேகமாக பரவி பல பேர் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கே மூன்று நாட்கள் மருத்துவ முகாம் நடைபெற்றது இது போன்ற சூழலில் மீண்டும் மாசு ஏற்படுத்தும் வகையில்
மக்கள் நலனை விட தனி நபரின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு இந்த ஆலை திறக்க இந்த அனுமதியை யார் கொடுத்தது என்கிற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது..??

இவ்வளவு போராட்டங்களுக்கும் மக்களின் எதிர்ப்புக்கு பிறகும் தேவாலா போக்கர் காலனியில் மட்டும் தான் இந்த PRCC தார் கலவை ஆலை இயங்க வேண்டும் என்கிற கட்டாயம் யாருக்காவது இருக்கிறது என்றால் போக்கர் காலனி மக்கள் மீது ஆணையிட்டு சொல்கிறேன் ஆலை திறந்து மூன்றாம் நாள் என் உயிர் பந்தலூர் நகர மத்தியில் போக்கர் காலனி மக்களுக்காக அர்ப்பணிப்பேன் என்று உறுதியாக கூறுகிறேன் அப்படியாவது இந்த ஆளை கொல்லும் தார் கலவை ஆலை அகற்றப்படுமா மக்களுக்கு ஒரு விடிவு காலம் வருமா என்று பார்ப்போம் நன்றி..

இவன்
*HARIS தேவாலா PRCC தார் கலவை ஆலை போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்*

09/02/2024
01/01/2024
30/12/2023

தினமலர் செய்தி

Today Dinakaran News paper
28/12/2023

Today Dinakaran News paper

 #தேவாலா_தார்_கலவை_ஆலை போக்கர் காலனி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக கடந்த 12/12/23 அன்று  கூடலூர் கோட்டாட்சியர் அவர்கள...
27/12/2023

#தேவாலா_தார்_கலவை_ஆலை போக்கர் காலனி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக கடந்த 12/12/23 அன்று கூடலூர் கோட்டாட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகளால் #இழுத்து_மூடி_சீல்_வைக்கப்பட்டது..

*ஆனால் வாழ்வாதாரத்தை காக்க போராடும் போக்கர் காலனி மக்களின் போராட்டத்தையும் உயிரையும் துச்சமாக நினைத்து இம்மியளவும் மனிதத்தன்மை இல்லாத ஆலை முதலாளி உடனடியாக உயர்நீதிமன்றம் சென்று ஆலை சீல் வைத்ததை எதிர்த்து தடையாணை பெற்று மீண்டும் தார் கலவை ஆலையை வீம்புக்காக இயக்கி வந்தார்..

இதனை தொடர்ந்து நேற்று மீண்டும் PRCC தார் கலவை ஆலை மாசு ஏற்படுத்துவதை உறுதி செய்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மறு உத்தரவு வரும் வரை ஆலை இயங்க கூடாது என கூறி மூட உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அளித்துள்ளது..

மக்களின் உறுதியான, நேர்மையான அற வழியிலான போராட்டங்கள் வெற்றி பெற சில சமயம் கால தாமதம் ஆகலாம் ஆனால் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறும் என்பதற்கு தேவாலா மக்களின் போராட்டமே சாட்சி..

மீண்டும் ஒரு முறை எங்கள் போராட்டத்திற்கு மனப்பூர்வமாக ஆதரவு தந்த
அனைவருக்கும் தேவாலா போக்கர் காலனி மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..!!

இவன்
*தேவாலா PRCC தார் ஆலை எதிர்ப்பு இயக்கம்*

 #உடைபடும்_ராயனின்_பொய்  #வழக்குகள்தேவாலா PRCC தார் கலவை ஆலைக்கு எதிராக தொடர்ந்து அற வழியில் போராடி வரும் மக்களை அச்சுறு...
21/12/2023

#உடைபடும்_ராயனின்_பொய் #வழக்குகள்

தேவாலா PRCC தார் கலவை ஆலைக்கு எதிராக தொடர்ந்து அற வழியில் போராடி வரும் மக்களை அச்சுறுத்தி அடக்க நினைக்கும் தார் ஆலை முதலாளி ராயன் பல பொய் வழக்குகளை போக்கர் காலனி மக்கள் மீது தொடுத்திருக்கிறார்..

அதில் சில வழக்குகள் நீதிமன்றத்தில் பொய் வழக்கு என்று நிரூபித்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் ராயனுடைய உதவியாளர்களை கொலை மிரட்டல் விடுத்ததாக தார் கலவை ஆலைக்கு எதிராக போராடும் மக்கள் மீது தேவாலா காவல் நிலையத்தில் 371/2020 என்கிற வழக்கு ஒன்று புனையப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது இந்த வழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பந்தலூர் நீதிமன்றத்தால் அரசு தரப்பில் இந்த வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யமுடியவில்லை என்று #வழக்கு_தள்ளுபடி_செய்யப்பட்டுள்ளது..

இது போன்ற பல பொய் வழக்குகளை போக்கர் காலனி மக்கள் மீது தொடுத்து அவர்களை அச்சுறுத்த நினைக்கிறார் தார் ஆலை முதலாளி ராயன் ஆனால் எத்தனை பொய் வழக்கு போட்டாலும் அதற்கெல்லாம் பணிந்து விட மாட்டோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்...

போக்கர் காலனி மக்கள் மீது புனையப்படும் அனைத்து பொய் வழக்குகளையும் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் வாழ்வாதார பிரச்சினைக்காக போராட்ட களத்தில் இருக்கும் மக்களுக்கு சட்ட ரீதியான அனைத்து உதவிகளையும் நான் செய்து தருகிறேன் என்று சொல்லி பாமர மக்களின் தோழனாக இந்த வழக்கை வாதாடி வெற்றி கண்ட வழக்கறிஞர்
#திரு_கணேஷன் ்தலூர் அவர்களுக்கு கோடான கோடி #நன்றிகளை_போக்கர்_காலனி #மக்களின்_சார்பாக_தெரிவித்து #கொள்கிறோம்...

இவன்
#தேவாலா_தார்_கலவை_ஆலை #எதிர்ப்பு_இயக்கம்

தேவாலா prcc தார் கலவை ஆலை நிரந்தரனாக மூடு!!!எங்கள் சந்ததியயை காப்பாற்றுங்கள்!!!
19/12/2023

தேவாலா prcc தார் கலவை ஆலை நிரந்தரனாக மூடு!!!
எங்கள் சந்ததியயை காப்பாற்றுங்கள்!!!

நாள்:19-12-2023தேவாலா போக்கர் காலனியில் செயல்பட்டு வரும் prcc தார் கலவை நச்சு ஆலை தர்ப்போதும் முறையான எவ்வித அனுமதியும் ...
19/12/2023

நாள்:19-12-2023
தேவாலா போக்கர் காலனியில் செயல்பட்டு வரும் prcc தார் கலவை நச்சு ஆலை தர்ப்போதும் முறையான எவ்வித அனுமதியும் இல்லாமல் மாசுக்கட்டுமாடு வாரியம் மற்றும் அதிகாரிகளின் துணையோடு செயல்படத் தொடங்கியுள்ளது..இதனை மாவட்ட ஆட்சித் தலைவரிடம்
கடிதமாக புகார் பலமுறை தெரிவித்ததின் விளைவாக கோட்டாட்சியர் மூலம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஆலை மூடப்பட்டது .முறையான நடவடிக்கை கடைபிடிக்கவில்லை என்கின்ற ஒரு காரணம் தான் நீதி மன்றம் சொல்லியிருக்கிறது ஆலை பூட்டியது தவறு என்று நீதி மன்றம் சொல்லவில்லை எனவே நீதி மன்றத்தினுடைய அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு முறையாக அந்த அலையை சீல் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று போராட்ட குழு கேட்டு கொள்வதோடு இன்று இந்த போராட்டம் தொடர் போராட்டமாக தொடரும் என்கின்ற வகையில் இன்று (19-12-2023) எங்களுடைய கிராமம் முழுவதும் கருப்பு கொடியை ஏற்றி எங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளது

Address

Devala
643270

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேவாலா prcc ஆலை எதிர்ப்பு இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தேவாலா prcc ஆலை எதிர்ப்பு இயக்கம்:

Share

Category