04/07/2024
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்
செம்மண்டலம், கடலூர்.
வணக்கம், கடலூர் மாவட்ட விவசாய பெருங்குடிமக்களே வருகின்ற 29.07.2024 அன்று நமது சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் கால்நடை உற்பத்தி மேலாண்மை துறையுடன் இணைந்து பருவக் காலங்களுக்கேற்ற கால்நடை பராமரிப்பு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் சிறப்பு விழிப்புணர்வு முகாம் கடலூர் செம்மண்டலம், குண்டுசாலையில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது. இதில் ஒரு நாள் பயிற்சி மற்றும் இடுபொருட்கள் விலையின்றி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள நேரில் வந்து முன் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதலில் வரும் 50 நபர்களுக்கு மட்டுமே பயிற்சியில் பங்கு பெற அனுமதி வழங்கப்படும் பயனாளிகள் இப்பயிற்சியில் பங்குபெற பின்வரும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம
நிபந்தனைகள்:
1.பயனாளிகள் கடலூர் மாவட்டத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்
2.நேரில்வந்து முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை தரப்படும்.
தொலைபேசி எண் : 04142 - 290249 / 9487813812
பயிற்சி நடைபெறும் நாள்: 29.07.2024
இப்படிக்கு
உதவி பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மையம்,
கடலூர்.-607001.