11/06/2025
குமரி டிரஸ்ட்ன் மக்கள் பணிகளுக்கு மேலும் ஒரு அங்கீகாரம்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மர்ஹூம் ஜனாப்.முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் நினைவாக அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் வகையில்குமரி டிரஸ்ட்க்கு அவசர ஊர்தி அர்ப்பணிப்பு.
அவசர ஊர்தி மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் சாகிப் அவர்களின் சகோதரரின் மருமக்கள் சகோ. இக்பால் M.அலி(கனடா)
சகோ.அஷ்ரப் நூர்தீன் ஆகியோரின் சொந்த செலவில் வழங்கும் நிகழ்வு
இன்று 11/06/2025 புதன்கிழமை காலை நாகர்கோவிலில் வைத்து நடைபெற்றது.
அவசர ஊர்தியின் சாவியை மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் சகோதரர் ஜனாப்.செய்யது முஹம்மது கான் அவர்கள் குமரி டிரஸ்ட் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்வில் குமரி டிரஸ்ட் நிர்வாகிகள் அன்வர் சதாத்,ஜாஹிர் ஹுசைன்,நூர் முஹம்மத்(திருவை)
மருத்துவ அணி ஷபீக்,திருவை மெடிக்கல் டிரஸ்ட் செயலாளர் முஜீப்,SHADE சாரிட்டபிள் தலைவர் அசார் அஹ்மத்,M.G.M.மலுக்கு முஹம்மத்,முஹம்மது ஷலீம் professor மற்றும்
குமரி டிரஸ்ட்- ன் திருவை ஷபீக்,பீர்முஹம்மத்,அபுதாஹிர்,கோட்டார் ஷாகுல்,செய்யது கான்,மாலிக்கீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குமரி மாவட்டத்தில் அவசர சேவையிலும், மருத்துவ சேவையிலும் தன்னிகரில்லா பணிகளை தனதாக்கி மக்கள் சேவை செய்து வரும் குமரி டிரஸ்ட் பணிகளை மேலும் வலுப்பெற செய்யும் விதமாக மர்ஹூம் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் நினைவில் அவர்கள் குடும்பம் அவசர ஊர்தி வாங்கித்தந்து எங்கள் சேவைகளை மேலும் வலுவடைய செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
இன்ஷா அல்லாஹ் உங்களிடமிருந்து பெறப்பட்ட அமானிதம் சிறப்பாக மக்கள் சேவையில் ஜொலிக்கும். இறைவழியில் அவசர ஊர்தியை தானமாக தந்த அவர்களின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் பேரருளும்,பெரும் கிருபையும் செய்வானாக..!
இந்த அவசர ஊர்தி தக்கலை பகுதியில் அவசர சேவைக்காக அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் வகையில் செயல்படும்.குறிப்பாக ஜனாஸாக்களை இலவசமாக எடுத்து நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் எங்களின்,உங்களின் நற்செயல்களை ஏற்றுக்கொள்வானாக..!
என்றும் சமுதாய சேவையில்,
குமரி டிரஸ்ட்,
கன்னியாகுமரி மாவட்டம்.