31/03/2026
அண்ணாமலை கிட்ட இவனுங்க எப்படி வசமா சிக்கி இருக்கானுங்க பாருங்க..!
அண்ணாமலை ஜாதிய சொல்லி திட்ட முடியாது.. ஏன்னா அவர் பிராமணர் இல்லை
தமிழன் இல்லணும் சொல்ல முடியாது..
படிக்காதவன் எனவும் சொல்ல முடியாது..
Data தெரியாதுனும் சொல்ல முடியாது..
நேர்மையை பத்தியும் தப்பா பேச முடியாது..
வயசாயிருச்சினு சொல்ல முடியாது..
விவசாயத்தை பத்தியும் பேச முடியாது..
பணக்கார வீட்டு பையன் எனவும் பேச முடியாது..
ஏதாவது சொல்லியும் பயமுறுத்தவும் முடியல..
கேப்டனை வீழ்த்தியது போல மீடியாவ வச்சும் வீழ்த்தலாம்ணு பார்த்தா.. ரிப்போர்ட்டர்ஸ் எல்லாம் தெறிச்சு ஓடுறானுங்க..
என்ன பண்ணுவது என தெரியாம, மெல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாம அவஸ்தை படுறானுங்க..!
திமுக _ அண்ணாமலை
அதிமுக _ அண்ணாமலை
காங்கிரஸ் _ அண்ணாமலை
கம்யூனிஸ்ட் _ அண்ணாமலை
மதிமுக _ அண்ணாமலை
சிறுத்தைகள் _ அண்ணாமலை
நாம் தமிழர் _ அண்ணாமலை
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு _ அண்ணாமலை.. கிறிஸ்தவ மதவாத அடிப்படை அமைப்பு _ அண்ணாமலை
இடதுசாரி மீடியா பத்திரிகை ஊடகவியலாளர் _ அண்ணாமலை..
இப்படி.. ஒரு மனிதனை எதிர்க்க எத்தனை நபர்கள். சும்மா சொல்ல கூடாது. இந்த மூன்று ஆண்டுகளில் இவ்வளவு நபர்களை இரவு பகல் பாராது கதற விட்டு கொண்டு உள்ளார் அண்ணாமலை.
உண்மையில் இந்திய அளவில் மோடி அய்யா அவர்களுக்கு கூட இத்தனை எதிரிகள் கிடையாது. தமிழக அரசியலில் இவ்வளவு எதிரிகள் ஒரு நபருக்கு எதிராக உள்ளது, அண்ணாமலை அவர்களுக்கு மட்டுமே என்று நினைக்கிறேன்.
அண்ணாமலை வந்த பின்பு திமுக படும்பாடு !
#தனியாருக்கு தாரை வார்க்கும் 5000 கோடி அனல் மின் நிலைய ஒப்பந்தம் ரத்து.
#விவசாயத்தை சிதைக்கும் அன்னூர் சிப்காட் தொழிற்சாலை நிறுத்தம்.
#பத்து ரூபாய் பாலாஜியின் சவால்கள் ஏற்று கொள்ளப்பட்டு, இன்று அவர் புழல் சிறையில்.
#நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சவால்கள் ஏற்று கொள்ளப்பட்டு நிதியமைச்சர் பதவியே காலி.
#வடக்கன் வடக்கு என்று பிரிவினை பேசி
வயிறு வளர்த்து திரிந்த வாய்கள்; இன்று அடங்கி ஒடுங்கி கிடக்கிறது.
#இந்தி மொழி மீது வெறுப்புணர்வை பதிவு செய்து அரசியல் செய்த அட்டூழியங்கள் அடங்கி பொந்துக்குள் புகுந்து கொண்டது.
#இந்தியாவின் மீது வன்மம் கொண்டு, தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று பிரிவினை பேசிய கும்பல், தன்னுடைய நாக்கில் தானாகவே சூடு வைத்து கொண்டு ஒடுங்கி கொண்டது.
#இந்து தர்மத்தின் மீது தினம் தினம் சேற்றை வாரி இறைத்து கொண்டிருந்த கும்பல், இன்று மன்னிப்பு கேட்கும் நிலைக்கு சென்று விட்டது.
#அனைத்து கடைகளையும், டாஸ்மாக்கையும் திறந்து விட்டு, கோவிலை மட்டும் பூட்டி வைத்த கும்பலை, ஒரே அறிவிப்பில் திறக்க வைத்தார்.
#தேர்தல் வாக்குறுதிபடி ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் ஏமாற்றி வந்த கும்பலை, அதிரடி அறிவிப்பின் மூலம் வேறு வழியில்லாமல் கொடுக்க வைத்தார்.
#ஆவின் ஊழல் பற்றி நாட்டிற்கு அண்ணாமலை தெரியப்படுத்த அமைச்சர் நாசர் வீட்டுக்கு போனார்.
#கோயம்புத்தூர் தற்கொலை படை சிலிண்டர் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக, ஊரை ஏமாற்றி வந்த திமுகவின் முகத்தில் ஆணித்தரமான ஆதாரப்பூர்வமாக செய்தியாளர் சந்திப்பின் மூலம் கரியை பூசினார்.
#சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறிய உதயநிதியை, இனி ஒருபோதும் சனாதனம் பற்றி வாய் திறக்க மாட்டேன் என்று புறமுதுகிட்டு ஓட வைத்தார்.
#மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டு இறந்த லாவண்யாவின் விவகாரத்தை, இந்திய அளவில் கொண்டு சென்று, பொய் கூறிய கும்பலை திணற வைத்தார்.
#திமுக கும்பலின் சொத்து பட்டியலை வெளியிட்டு இந்தியாவையே அதிர வைத்து, மக்களுக்கு எதிராக சுரண்டும் கும்பலை அம்பல படுத்தினார்.
#நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதற்கு, ஆற்காடு வீராசாமி தொடங்கி ஜெகத்ரட்சகன் வரை செய்த தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி, திமுகவை திணற வைத்து கொண்டிருக்கிறார்.
#கால்டுவெல் பாதிரி, ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி என அனைவரும் தமிழுக்கு, தமிழருக்கு, தமிழர்களின் தர்மமான இந்து தர்ம நம்பிக்கைகளுக்கு, தமிழகத்திற்கு எதிராக செய்த வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி வருவதால் தற்போது திக்கி திணறுகிறது போலி திராவிடம்.
#வடமாநிலத்தவர்களை ஆரியன் என்று திமுகவினர் வாய் கிழிய பிரிவினை பேசினால், ராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும் ஆரியர்கள் தானே, அவர்களோடு எதற்கு கூட்டணி வைத்திருக்கிறாய் என்று மண்டை அடியாக போடுகிறார்.
#மணல் மாஃபியாக்கள் செய்த பெருத்த ஊழல்களை அம்பலப்படுத்தி, இன்று அமலாக்கத்துறை முழுமையாக ஆராய்ந்து வருகிறது.
#மின் கட்டண உயர்வை பற்றி தெளிவாக விளக்கி கூறி, மக்களின் ஆதரவை பெற்று, திமுகவை சின்னாபின்னம் ஆக்கி கொண்டிருக்கிறார்