29/09/2025
பகத்சிங் பிறந்தநாளில் 74 பேர் இரத்த தானம் செய்தனர்
கோவை : மாவீரன் பகத்சிங் 119வது பிறந்தநாள், மறைந்த இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் வே.கௌதம்குமார் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) கோவை மாவட்ட குழுவின் சார்பில் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு இரத்ததானம் வழங்கும் முகாம் இன்று (28.09.2025) கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்றது.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தொழிலாளர்கள், பொருளாதார ரீதியாக பிந்தங்கியவர்கள் பெருமளவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நாளொன்றுக்கு சுமார் 18 யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. மேலும், அவசர சிகிச்சைகளுக்கு அவ்வப்போது கூடுதல் யூனிட் தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் இரத்தக் கொடையாளர்களை தொடர்ந்து ஏற்பாடு செய்து கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று (28.09.2025) கோவை ஜீவா இல்லத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் மௌ.குணசேகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எம்.மணிகண்டன் வரவேற்றுப் பேசினார். பாலதண்டாயுதம் இரத்த தான இயக்க செயலாளர் வே.வசந்தகுமார் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முகாமினை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஜே.ஜேம்ஸ் துவக்கி வைத்தார். இளைஞர் பெருமன்ற தேசிய செயலாளர் ஹரீஷ் பாலா வாழ்த்துரை வழங்கினார். கரூரில் கூட்ட நெரிசலில் பலியான அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கட்சியின் மாமன்றக்குழுத் தலைவர் சாந்தி சந்திரன், இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் கலை.அஸ்வினி, மாமன்ற உறுப்பினர்கள் பிரபா ரவீந்திரன் (48வது வார்டு) ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் Ex.MLA, மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சி.தங்கவேல், மாவட்டப் பொருளாளர் மு.வ.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கொடையாளர்களை, மருத்துவக் குழுவினரை பாராட்டினர். மேலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கே.எம்.செல்வராஜ், பெ.மௌனசாமி, வி.ஆர்.பாண்டியன், ஜி.பி.சக்திவேல், ராமமூர்த்தி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில செயலாளர் அ.அசரப் அலி, இஸ்கப் மாநிலப் பொருளாளர் எஸ்.கோட்டியப்பன், மாதர் சம்மேளன மாவட்டச் செயலாளர் எம்.பேபி, சமாதான ஒருமைப்பாட்டுக் கழக மாவட்டச் செயலாளர் சையது இப்ராஹிம், AISF மாநிலக் குழு உறுப்பினர்கள் பா.துர்கா, விஷ்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முகாமில் 3 பெண்கள் உட்பட 71 பேர் இரத்த தானம் செய்தனர். மேலும், நீலம்பூர் அருகே ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலத்தைச் சேர்ந்த தோழர் சேகர் அவர்களுக்கு 3 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது. மொத்தம் 74 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது.
இளைஞர் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் அ.மன்சூர் நன்றி கூறினார்.
முகாமில் இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் மூ.மணிகண்டன், என்.கணேசமூர்த்தி, அ.ஹரிஹரசுதன், முகாம் பொறுப்பாளர் எம்.அபிமன், நிர்வாகக்குழுக் உறுப்பினர்கள் சு.பிரசாத், அ.விஜயகுமார், கே.ஜி.பவன்குமார், எஸ்.முத்துகிருஷ்ணன், மேட்டுப்பாளையம் தாலுகா செயலாளர் எம்.ராஜ்கமல், தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.விஜயகுமார், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் அ.ஹரிஹரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
#இரத்ததானம் #கோவை #இளைஞர்