16/01/2026
தமிழக தெலுங்கர் முன்னேற்றக் கழகம் ( TTMK)
தற்போதைய வடதமிழக மாவட்டங்களில் தெலுங்கு மொழி பேசும் இயக்கர் இன பூர்வக்குடி மக்கள் பல்லாயிர ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இதில், லட்சகணக்கானோர் தென்தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டும் குடிபெயர்ந்தும் நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றனர்.
தற்போதைய தமிழகம் 1000 ஆண்டுகளுக்கு முன் வரை 5 முதல் 7 பேரரசுகளாகவும், இவர்களின் கீழ் 100க்கு மேற்பட்ட சிற்றரசர்களும் ஆட்சி புரிந்து புகழ் பெற்று இருந்துள்ளது. இதில் தெலுங்கு மொழி பேசும் பேரரசும்,சிற்றரசுகளும் அடங்கிய மிக பெரிய சம்ராஜ்யம் அடங்கும்.
ஆங்கிலேயர்கள் படையெடுப்பதற்கு பின் பேரரசுக்களின் வரலாறுகளின் உண்மை நிலை மறைத்தும், திரித்தும் தெலுங்கர் பேரரசு வரலாறுகளை வெளிவராதவாறு குழி தோன்றி புதைத்து வைத்துள்ளனர்.
மேலும், மேலும் தென்னிந்திய மொழிகள் தமிழ் மொழியில் இருந்து தான் பிறந்தது என்ற " மெகா பொய் " பிரச்சாரத்தை பதிந்து வருகின்றனர்.
கல்வெட்டுகளில் உள்ள " எழுத்து நிலை உண்மைகள் " அறியாமல், திரித்து திணிக்கப்பட்ட பல ஆய்வுகளை அரசு இயந்திரத்தில் ஆவணங்களாக பதியப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.
தமிழ் பேசும் மக்கள் இந்த திரிக்கப்பட்ட வரலாற்று ஆய்வுகளை படித்துவிட்டு, இதர தென்னிந்திய மக்களின் மொழி உரிமையை கொள்ளை அடித்து உள்ளதை, தடுக்கவும் எதிராகவும் உண்மை நிலையை உலக மக்களுக்கு உணர்த்தவும் துவக்கப்பட்டது தான்
" தமிழக தெலுங்கர் முன்னேற்றக் கழகம்" என்ற ' முன்னோர் வரலாற்றின் படைப்பு 'ஆகும்.
தெலுங்கு மொழி பேசும் நபர்களுக்கு எதிராக அரசு ஆய்வுகளில் பதிந்துள்ள போலி பதிவுகளான பண்டைய கால நில உரிமை மற்றும் ஆட்சி உரிமை, கல்வெட்டு பதிவுகள், உண்மையான மொழி பதிவுகள் போன்ற ஆவண போலி பதிவுகளை நீக்க வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் குளறுபடி தகவலுடன் பதியப்பட்ட தமிழக தெலுங்கர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவுகளை நேர் செய்தல், தாய் மொழி கல்வி கோரிக்கை , மொழி வாரியான மாநில உருவாக்கத்தால் தெலுங்கருக்கு ஏற்பட்ட வரலாற்று உரிமை இழப்பை மீட்டெடுத்தல் என சில தெலுங்கர் நல கோரிக்கைகளையும் வலியுறுத்தி ஒரு சில தெலுங்கர் அரசியல் இயக்க ஒத்துழைப்புடன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஆவடி சட்ட மன்ற தொகுதியில் திரு M. நாகராஜ் நாயுடு அவர்கள் வேட்பாளராக களம் கண்டார்.
தற்போது, தமிழக தெலுங்கர் வாழ்வுரிமையை நிலை நிறுத்தும் விதமாக " தமிழக தெலுங்கர் முன்னேற்றக் கழகம் " என்ற அரசியல் இயக்கத்தை 2025 ஆம் ஆண்டு துவங்கி வழி நடத்த திரு கோ. ஞானசேகர் தலைமையில் புதிய கட்சி நிறுவப்பட்டது.
இதன் பொது செயலாளராக திரு M. நாகராஜ் நாயுடு அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இனி "தமிழக தெலுங்கர் முன்னேற்றக் கழகம்" தனது இயக்கர் இன தெலுங்கர் மக்களுக்கான வரலாற்று மீட்பு சேவையை துவங்கும் சேவகம் என்ற நிலைப்பாட்டுடன் அரசியல் ரீதியாக செயல்படும். இக்கழகத்தின் பெயர் கொடி பதிவுக்கு உட்பட்டது.
M நாகராஜ்
பொது செயலாளர்
தமிழக தெலுங்கர் முன்னேற்றக் கழகம்
K.Gnanasekar