Tamil Maanila Congress - Moopanar

Tamil Maanila Congress - Moopanar Official Page of Tamil Maanila Congress | Prosperous Tamil Nadu. Stronger India

இன்று 06.09.2026 மாலை, சென்னை, நீலாங்கரை, RK. கன்வென்ஷன் சென்டரில்,  விராட்  விஸ்வகர்மா சேவாலயா நிறுவுனரும், பேராசிரியர்...
06/09/2026

இன்று 06.09.2026 மாலை, சென்னை, நீலாங்கரை, RK. கன்வென்ஷன் சென்டரில், விராட் விஸ்வகர்மா சேவாலயா நிறுவுனரும், பேராசிரியர், ஜோதிடவியல் தலைவருமான, ஜோதிட ரத்னா Dr.K.P. வித்யாதரன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில்,

தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஐயா
திரு G.K.Vasan அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

சென்னை, திருவான்மியூரில், இன்று 06.09.2026 நடைபெற்ற கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் பிரிவு தலைவர் திரு. ப. திருமாவேலன் அவர...
06/09/2026

சென்னை, திருவான்மியூரில், இன்று 06.09.2026 நடைபெற்ற கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் பிரிவு தலைவர் திரு. ப. திருமாவேலன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில்,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

சென்னை, நீலாங்கரையில்,  திருப்பதி தேவஸ்தான முன்னாள் அரங்காவல உறுப்பினர் திரு. சேகர் ரெட்டி அவர்களின் இல்ல திருமண வரவேற்ப...
05/09/2026

சென்னை, நீலாங்கரையில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அரங்காவல உறுப்பினர் திரு. சேகர் ரெட்டி அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில்,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள்

இன்று 05.09.2026 மாலை கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு G.K...
05/09/2026

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள்

இன்று 05.09.2026 காலை,சென்னை, இராஜாஜி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள அவர்களது திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வேடிக்கைப் பார்க்கக்கூடாத...
04/09/2026

தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

மத்திய அரசு தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் #அறிக்கை

தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பதால் மீனவக்குடும்பங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

கடந்த ஜூலை 22 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களில் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ரூ. 5.76 கோடி அபராதம் விதித்தது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அபராதத் தொகை மிகுந்த பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும்.

இச்சூழலில் தமிழக மீனவர்களுக்கு இலங்கையால் விதிக்கப்பட்டிருக்கும் அபராதத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

அபராதத் தொகையை கட்ட முடியாத நிலையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இனிமேலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு இலங்கை அரசிடம் கண்டிப்போடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பான மீன்பிடித்தொழிலுக்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

சென்னையில், இன்று 04.09.2026 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவர் இரா. முத்தரசன் அவர்கள் விவசாயியாக நடித்துள்...
04/09/2026

சென்னையில், இன்று 04.09.2026 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவர் இரா. முத்தரசன் அவர்கள் விவசாயியாக நடித்துள்ள "அரிசி" திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி (Preview) திரையிடப்பட்டது.

இதனையொட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு G.K.Vasan அவர்கள்

திரு. முத்தரசன் அவர்களையும், திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு. சண்முகம் அவர்களையும் மற்றும் இயக்குநர் திரு. விஜயகுமார் அவர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 19-வது ஜி.எஸ்.எல்.வி திட்டமான GSLV-F17 ராக்கெட்டை  இன்று வெற்றிகரமாக விண்...
04/09/2026

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 19-வது ஜி.எஸ்.எல்.வி திட்டமான GSLV-F17 ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியதும், புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதும் பாராட்டுக்குரியது.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் வாழ்த்து

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 19-வது ஜி.எஸ்.எல்.வி திட்டமான GSLV-F17 ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியதும், புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதும் பாராட்டுக்குரியது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 2,367 கிலோகிராம் எடை கொண்ட EOS-05 (Earth Observation Satellite-05) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் புவிசார் சுற்றுப்பாதையில் மிகத் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.

குறிப்பாக ஜி.எஸ்.எல்.வி-யைப் பயன்படுத்தி உலகின் மிக கனமான செயற்கைக்கோளை செலுத்திய இந்திய விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி அடைந்திருக்கிறது.

இந்த செயற்கைக்கோள் செயல்பாட்டுக்கு வந்தவுடன், புவி சுற்றுப்பாதையில் இருந்து செயல்படும் இந்தியாவின் முதல் பிரத்யேக படமெடுக்கும் செயற்கைக்கோளாக விளங்கி, நாட்டிற்கு முக்கியமான மூலோபாயத் தரவுகளை வழங்கும்.
இயற்கை பேரிடர்கள், புயல், மேகவெடிப்பு போன்றவற்றை முன்கூட்டியே கண்டறியவும், விவசாயம், வனம், எல்லைப்பகுதி மற்றும் நீர்நிலைகளைக் கண்காணிக்கவும் இது பெரிதும் உதவும்.

மேலும் பூமியின் சுழற்சி வேகத்திலேயே சுழலும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைகோளானது இந்தியாவின் நிலப்பரப்பை 24 மணிநேரமும் கண்காணிக்கும்.
புவிசார் சுற்றுப்பாதையில் (Geosynchronous Orbit) நிலைநிறுத்தப்பட்ட இந்தியாவின் முதல் 'இமேஜிங்' செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்திய விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளை வியக்கவைக்கும் அளவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தாய்நாட்டிற்கு பேரும் புகழும் பெற்றுத்தருவது தொடர்கிறது.

கடின உழைப்பால், அர்ப்பணிப்பால், தொடர் முயற்சியால் விண்ணில் GSLV-F17 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தி, புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.

இஸ்‌ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெறவும், புகழ் பெறவும் வாழ்த்துகிறேன்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#இஸ்ரோ #விண்வெளி_வெற்றி”

இன்று தமிழக முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுவது குறித்து அறிவித்ததும், சென்னை உயர்நீதி...
03/09/2026

இன்று தமிழக முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுவது குறித்து அறிவித்ததும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மற்றும் வழக்காடு மொழியாக அங்கீகரிக்கக் கோரி தனித் தீர்மானம் கொண்டு வந்ததும் மிகவும் இன்றியமையாதது, வரவேற்கத்தக்கது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் #அறிக்கை

இன்று தமிழக முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்த பல்வேறு அறிவிப்புகள் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெரும் பயன் தரும்.

தமிழகத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது மிகவும் இன்றியமையாதது.

மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மற்றும் வழக்காடு மொழியாக அங்கீகரிக்கக் கோரி தனித் தீர்மானம் கொண்டு வந்தது மகிழ்ச்சிக்குரியது.

மேலும் தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உள்ளிட்ட அறிவிப்புகள் அனைத்தும் பாராட்டத்தக்கது.

தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப அறிவித்திருக்கும் புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வரவேற்று தமிழக அரசின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#தவெகஅரசு

இன்று தமிழக முதல்வர் அவர்கள் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்திருப்பது விவசாயிகளு...
01/09/2026

இன்று தமிழக முதல்வர் அவர்கள் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்திருப்பது விவசாயிகளுக்கு பயனளிக்கும், விவசாயம் மேம்படும்.

கடைமடைவரை தண்ணீர் செல்வதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு. G.K.Vasan அவர்கள் #அறிக்கை

இன்று தமிழக முதல்வர் அவர்கள் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறந்து வைத்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்திலிருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருப்பில் இல்லாமல், தண்ணீர் திறக்கப்படாமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.

இப்போது சம்பா சாகுபடிக்கு ஏதுவாக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது கடைமடைவரை செல்வதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்.
டெல்டா பாசனத்திற்கும் மற்றும் மக்களின் குடிநீருக்கும் மேட்டூர் அணையின் நீரானது பெரும் பயன் தரும்.

தமிழ்நாட்டின் குடிநீருக்கும், காவிரி டெல்டா பாசனத்திற்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று செப்டம்பர் 1 – மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துள்ள தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது.

குறிப்பாக திறக்கப்பட்டுள்ள தண்ணீரானது காவிரி பாசன மாவட்டப்பகுதி முழுவதும் சென்றடைந்து சம்பா சாகுபடி முழுமையாக நடைபெற வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று இலாபம் அடைய வேண்டும்.

மேலும் சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் பயிர்க்கடன் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு விவசாயிகளுக்கு துணை நிற்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிக முக்கியமாக விவசாயிகளுக்கு இடுபொருள் உதவி, இயந்திர நடவு ஊக்கத்தொகை, உர மானியம் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சம்பா சிறப்பு தொகுப்பு திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்து செயல்படுத்த வேண்டும்.

தமிழக முதல்வர் அவர்கள் மேட்டூர் அணையை திறந்திருப்பதன் மூலம் காவிரி பாசனப்பகுதிகளில், டெல்டா மாவட்டப்பகுதிகளில் விவசாயம் முழுமையாக நடைபெற்று, விவசாயம் மேம்பட்டு, விவசாயிகள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது தான் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) இயக்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#மேட்டூர்அணைதிறப்பு
#காவிரிநீர்

#தவெகஅரசு

இராணிப்பேட்டை,  அரப்பாக்கத்தில் நேற்று  30.08.2026 நடைபெற்ற திருப்பத்தூர் வடக்கு மாவட்ட த.மா.கா(மூ) தலைவர் ஆம்பூர் திரு....
31/08/2026

இராணிப்பேட்டை, அரப்பாக்கத்தில் நேற்று 30.08.2026 நடைபெற்ற திருப்பத்தூர் வடக்கு மாவட்ட த.மா.கா(மூ) தலைவர் ஆம்பூர் திரு. குப்புசாமி அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

Address

No: 4, Ashoka Road, Alwarpet
Chennai
600018

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Maanila Congress - Moopanar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamil Maanila Congress - Moopanar:

Shortcuts

Share