இளையதலைமுறை - ilayathalaimurai

இளையதலைமுறை - ilayathalaimurai Ilaya Thalaimurai welcome youngsters to be a Social Service Stalwart,t o make Awarness to the Society and to support Deserved with any obstacles
(1)

சுடப்பட்ட ராணுவ வீரனின் மரணம் உங்களது மனதை கண்டிப்பாக தைத்திருக்கும். அவனது தியாகம் இதயத்தை பிழிந்திருக்கும். நாட்டுகாக நாமும் எதாவது செய்வோம் எனும் எண்ணம் கண்டிப்பாக உங்கள் மனதில் உதித்திருக்கும். அதை போன்ற இந்த நாட்டின் நேசம் தான் "இளைய தலைமுறை"யின் ஆதாரம்.

இழிவுகள் அடங்காதா! ஒரு மாற்றம் உருவாகாதா! என்பது நம்மை போன்ற அனைவர் மனதிலும் குடி கொண்ட ஆசை மற்றும் கனவு. ஒரு துளி போல உருவான அந்த கனவு பெருக்கெடுத்தால், "ஒன்றிணைந்தால்" அது பெரும் சக்தியாக உருவாகும். கனவு மெய்படும். அதை போன்ற கனவு கொண்ட நம் அனைவரையம் ஒன்றிணைப்பதே இளைய தலைமுறையின் முதல் குறிக்கோள்!!

இதை நம்மை போன்ற அனைவரிடமும் பகிர்வோம். ஒன்றிணைவோம்!!!

சென்னையின் 2வது விமான நிலையம் - செய்யூர், கும்மிடிப்பூண்டி தேர்வு. ஆக, இந்த இரண்டு பகுதி மக்களும் போராட தயாராகி கொண்டுள்...
06/09/2026

சென்னையின் 2வது விமான நிலையம் - செய்யூர், கும்மிடிப்பூண்டி தேர்வு. ஆக, இந்த இரண்டு பகுதி மக்களும் போராட தயாராகி கொண்டுள்ளனரா?

கடைசிவரை நிரந்தர பணி என்ற வாக்குறுதி பற்றிய தகவல் எதுவும் இல்லை.
04/09/2026

கடைசிவரை நிரந்தர பணி என்ற வாக்குறுதி பற்றிய தகவல் எதுவும் இல்லை.

மக்களை முட்டாள்கள் என்று நினைத்து பேசும் அமைச்சர்கள்...நாட்டு மக்களே கொஞ்சமாவது சிந்தியுங்கள் 🙏
04/09/2026

மக்களை முட்டாள்கள் என்று நினைத்து பேசும் அமைச்சர்கள்...
நாட்டு மக்களே கொஞ்சமாவது சிந்தியுங்கள் 🙏

03/09/2026
100 நாட்களில் செம்ம சாதனை படைத்து விட்டோம்.
03/09/2026

100 நாட்களில் செம்ம சாதனை படைத்து விட்டோம்.

02/09/2026

பேரன்பின் விஜய்... நாயகனாகத்தான் உங்களை ரசித்தேன்; வியந்தேன்; பாராட்டினேன்; சீராட்டினேன். ஆனால், ‘ஜன’நாயகனாக உங்களின் செயல்பாடுகளை வியக்க முடியவில்லை; பாராட்ட முடியவில்லை; சீராட்ட முடியவில்லை!

அதிமுக - திமுகவிற்கு மாற்று அரசியல் தேவை என்றுதான் உங்களுக்கு மட்டுமல்ல, வேட்பாளர்கள் யார் என்றுகூட பார்க்காமல், நீங்கள் கைகாட்டியவர்களுக்கெல்லாம் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், ஒட்டுமொத்த அரசியல் தந்திரவாதிகளையும் தூக்கி விழுங்கி, ‘மகா நடிகன்’ என நிரூபித்துக் விடுவீர்கள் போல! வென்றுவிட்டோம் என்ற எகத்தாளத்தில், கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் தோற்றுவிடாதீர்கள், விஜய்.

ஆட்சிக்கு வந்து 100 நாட்களைத்தான் கடந்திருக்கிறீர்கள். அதற்குள், விஜய்தான் பிரதமர் என புகழ் பாடுகிறார்கள். “வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க” என்பதை சீரியஸ் ஆக கூவிக்கொண்டிருக்கிறார்கள். கேட்டால், CM ஆக நினைத்தபோதும் விஜய்யை இப்படித்தான் கேலி செய்தார்கள். ஆனால், ஒரே தேர்தலில் CM ஆகவில்லையா? என கேள்வி எழுப்புவார்கள். அதெல்லாம், புளூ சட்டை மாறன் போல் விமர்சகராக இருக்கும்வரைதான்! தற்போது, தமிழ்நாட்டிற்கே இயக்குநர் ஆகிவிட்டீர்கள்.

இனி உங்களின் இயக்கம்; செயல்பாடுகள் சரியில்லையென்றால், ஆயிரமாயிரம் விமர்சகர்கள் எழும்பிக்கொண்டே இருப்பார்கள். வேட்பாளர் யாரென்றே தெரியாமல் வாக்களித்தார்கள். ஆனால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் உங்கள் செயல்பாடுகளை மதிப்பீடு செய்துதான் வாக்களிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

உண்மையில் இந்த 100 நாள் ஆட்சியில் “வாய் மட்டும்தான் அசையுது மத்ததெல்லாம் அப்படியேத்தான் இருக்கு” என்ற ‘போக்கிரி’ பட காமெடியைப்போல்தான் ‘வாய்ப்பேச்சு... ரீல்ஸ் ரீச்சு...’ என மோடியை இன்ஸ்பிரேஷனாக்கி, மோடியையே முந்த துடித்துக்கொண்டிருக்கிறீர்கள். மோடியை நம்பும் மக்கள் நம்மை நம்பமாட்டார்களா? போட்டோ ஷூட்டிலேயே ஆட்சியை பிடித்துவிடலாம் என்றெல்லாம் கணக்கு போட்டு ‘ரூட்டு’ போட்டு கொடுக்கிறார்களோ உங்களது ஆலோசகர்கள்?

“மோடி பில்லா... கில்லாடி ரங்கா” என படமே இயக்கலாம் என்கிற அளவுக்கு போய்க்கொண்டிருக்கிறது. இனி ரெண்டு பேருக்குள்ளதான் போட்டி. ஒன்று தவெக... இன்னொன்று பாஜக! ஏன், ஒலகத்துகே பிரதமர் வேட்பாளரா அறிவித்துவிட வேண்டியதுதானே? ஆட்சியமைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த உங்களுக்கு காங்கிரஸ் கட்சிதான் முதலில் ஆதரவுக் கொடுத்தது. ஆனால், அவர்களுக்கே நெருக்கடி கொடுக்கும் விதமாக அமைச்சர்கள் பேரானந்தப் பள்ளு பாடுகிறார்கள். உங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட்களையே டெர்ரரிஸ்ட் ரேஞ்சுக்கு நடத்திவிட்டீர்கள். இப்போது, காங்கிரஸையும் டார்கெட் செய்கிறீர்கள்!

பிரதமர் கனவு இருப்பதில் தவறில்லை. ஆனால், நம்பி வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு முதலில் ஐந்தாண்டுகள் நல்லாட்சியை கொடுங்கள்! உங்களது நிர்வாகம்; ஆளுமைத் திறன்களை நிரூபியுங்கள். இது, எதையுமே செய்யாமல், 'அகிலத்தின் தலைவனே... பிரபஞ்ச நாயகனே.... உலகாளும் தளபதியே... அண்ட சராசரங்களின் அதிபதியே' ரேஞ்சுக்கு எப்படி புகழ்பாட முடிகிறது? அதையும் நீங்கள் பேரானந்தத்தோடு ரசித்துக் கொண்டிருப்பது எப்படி?

இப்படியே தொடர்ந்தால்... ‘தென்னாட்டு மோடி’ என அழைக்கவேண்டியிருக்கும் போல!

- வினி சர்பனா

ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட காரணம் என்ன?
31/08/2026

ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட காரணம் என்ன?

31/08/2026

எங்கள் வீட்டின் அருகில் தெரிந்த ஒருவரின் மகன் புதிதாக flat ஒன்றை பதிவு செய்ய ஆன்லைன் மூலம் பல்லாவரம் பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ததாக கூறினார்.

நானும் ஆவலாக எப்படி பதிவு செய்தீர்கள்? வீட்டில் இருந்தே அனைத்தையும் செய்தீர்களா? பத்திர பதிவு பணம் அனைத்தையும் ஆன்லைன் மூலம் கட்டினீர்களா? லஞ்சம் ஒழிந்து விட்டதா என ஆவலாக பல கேள்விகளை கேட்டேன். அவர் அளித்த பதில் மிகவும் வியப்பாக இருந்தது.

அதாவது, ஆன்லைன் மூலம் பத்திர பதிவு என்பதே புது வகையான மோசடி என கூறினார். நாம் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பதிவு செய்வதாக இருந்தால், நம்மிடம் கைரேகை வைக்க / கண் கருவிழி பார்க்க இயந்திரம் வேண்டும். ஒருமுறை பதிவு செய்யும் பயனாளர்களால் இந்த இயந்திரங்களை வாங்கி வைக்க முடியாது. ஆகவே, மீண்டும் அதே டாகுமெண்ட் ரைட்டர் உதவி தேவைப்படுகிறது.

டாகுமெண்ட் ரைட்டர் பத்திர பதிவு அலுவலகத்தின் அருகில் xerox கடைகளின் மூலம் செயல்படும் போது, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளில் சிக்க வேண்டி உள்ளது. ஆகையால், வரும் வாடிக்கையாளர்களை டாகுமெண்ட் ரைட்டர் தனியாக வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு அனைத்து பதிவு வேலைகளையும் முடித்து விட்டு, ரூ.15000 லஞ்சமும் பெற்று விடுகின்றார். நண்பரின் மகனிடம் லஞ்சம் ஒழிந்து விட்டதாக செய்திகள் வருகின்றனவே என்றால், அப்படியெல்லாம் இல்லை. பதிவுத்துறை அதிகாரிகள் டாகுமெண்ட் ரைட்டர் மூலம் லஞ்சத்தை பெற்று கொண்டு தான் உள்ளனர் என கூறினார்.

நமது சேவை பாதிக்கப்படுமோ என மக்களும் புகார் அளிக்க தயங்குகின்றனர். இந்த தயக்கத்தை அரசு அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். லஞ்சத்தை ஒழிக்க என்ன தான் வழி என தெரியவில்லை.

ஆனால், தற்போதுள்ள தவெக அரசு லஞ்சம் ஒழிந்து விட்டது என தம்பட்டம் அடித்து கொண்டுள்ளது. ஒன்றும் சொல்வதற்கில்லை.

- sankar

Chief Minister of Tamil Nadu
TVK Vijay
TVK Party HQ

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் ப...
30/08/2026

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் பாரபட்சமாக நடத்துகின்றன. எந்த நடவடிக்கையும் முந்தைய அரசுத் தரப்பில் இல்லை. தவெக அரசாவது நடவடிக்கை எடுக்குமா?

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when இளையதலைமுறை - ilayathalaimurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to இளையதலைமுறை - ilayathalaimurai:

Shortcuts

Share

Category