TN Health Connect

TN Health Connect Tamilnadu Health System Project (TNHSP) : Dedicated to promoting health and well-being in our community. Join us in our mission to create a healthier tomorrow!

𝐂𝐡𝐞𝐧𝐠𝐚𝐥𝐩𝐚𝐭𝐭𝐮 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞'𝐬 𝐃𝐢𝐚𝐦𝐨𝐧𝐝 𝐉𝐮𝐛𝐢𝐥𝐞𝐞 𝐕𝐚𝐥𝐞𝐝𝐢𝐜𝐭𝐨𝐫𝐲 𝐅𝐮𝐧𝐜𝐭𝐢𝐨𝐧 — 𝐀𝐥𝐮𝐦𝐧𝐢 𝐆𝐢𝐯𝐞 𝐁𝐚𝐜𝐤 𝐓𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐍𝐚𝐥𝐚𝐦 𝐓𝐍.Chengalpattu Med...
20/08/2026

𝐂𝐡𝐞𝐧𝐠𝐚𝐥𝐩𝐚𝐭𝐭𝐮 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞'𝐬 𝐃𝐢𝐚𝐦𝐨𝐧𝐝 𝐉𝐮𝐛𝐢𝐥𝐞𝐞 𝐕𝐚𝐥𝐞𝐝𝐢𝐜𝐭𝐨𝐫𝐲 𝐅𝐮𝐧𝐜𝐭𝐢𝐨𝐧 — 𝐀𝐥𝐮𝐦𝐧𝐢 𝐆𝐢𝐯𝐞 𝐁𝐚𝐜𝐤 𝐓𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐍𝐚𝐥𝐚𝐦 𝐓𝐍.

Chengalpattu Medical College is celebrating its Diamond Jubilee with a Valedictory Function on Saturday, 22nd August 2026, at 4:00 PM, at the Chengalpattu Medical College Auditorium.

As part of this historic 60-year milestone, the Chengalpattu Medical College Alumni Trust is contributing approximately ₹1.37 lakh towards a Human Breast Milk Pasteuriser for the Neonatology Department a meaningful gesture of support channelled through Nalam TN.

The event will be graced by Dr. M. Veerappan, I.A.S., District Collector of Chengalpattu, as Chief Guest, and presided over by Prof. Dr. Priya Pasupathy, M.D. (C.M.), D.G.O., Dean, Chengalpattu Medical College & Hospital. Also present will be Prof. Dr. S. Saravanan (Director, Government Arignar Anna Memorial Cancer Research Institute, Kanchipuram), Prof. Dr. A. Anitha (Vice Principal, CMCH), Prof. Dr. R. Nandhakumar (Medical Superintendent, CMCH), Prof. Dr. K.R. Padmanabhan (Deputy Medical Superintendent, CMCH), and Dr. S. Mugundhan (Resident Medical Officer, CMCH).

This is exactly what Nalam TN was built for alumni reconnecting with their alma mater, and turning that connection into real support for patients. A breast milk pasteuriser directly strengthens neonatal care for the most vulnerable newborns.

𝐂𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐮𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐭𝐨 𝐂𝐡𝐞𝐧𝐠𝐚𝐥𝐩𝐚𝐭𝐭𝐮 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐨𝐧 𝟔𝟎 𝐫𝐞𝐦𝐚𝐫𝐤𝐚𝐛𝐥𝐞 𝐲𝐞𝐚𝐫𝐬!


.dphpm

தமிழ்நாடு மருத்துவ நகரம் (TN Medicity) — தமிழகத்தின் புதிய சுகாதார அடையாளம்.தமிழ்நாடு, இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் எ...
19/08/2026

தமிழ்நாடு மருத்துவ நகரம் (TN Medicity) — தமிழகத்தின் புதிய சுகாதார அடையாளம்.

தமிழ்நாடு, இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. நம் மாநிலத்தை உலக அளவில் மருத்துவத் துறையில் முதன்மை இடங்களில் ஒன்று என்ற இலக்கினை அடைய, முதல் முறையாக 'தமிழ்நாடு மருத்துவ நகரம்' (TN Medicity) உருவாக்கப்பட்டு, உலகத் தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள், மருத்துவ ஆராய்ச்சி, Medical Tourism, ஆயுஷ் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.

இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்திட, முதற்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு ஏற்கனவே மருத்துவச் சிகிச்சை, சுகாதார மனிதவளம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் உலகத் தரத்தில் உள்ளது. இவ்வாறு முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வரும் நிலையில், "தமிழ்நாடு மருத்துவ நகரம்" (Medicity) எனும் உலகத் தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நகரத்தை நிறுவ, தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது.

தமிழகத்தின் சுகாதாரத் துறையை உலக வரைபடத்தில் இன்னும் உயர்த்தும் இந்த முயற்சி, மருத்துவ சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சுற்றுலா ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் இணைக்கும் ஒரு பெரிய அடி எடுத்து வைப்பாக அமையும்.


.dphpm

சிறுவனின் மூச்சுக்குழாயிலிருந்து பேனா மூடி அகற்றம்!சிதம்பரத்திலுள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில...
18/08/2026

சிறுவனின் மூச்சுக்குழாயிலிருந்து பேனா மூடி அகற்றம்!

சிதம்பரத்திலுள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் புகுந்த பேனா மூடியை மருத்துவர்கள் அகற்றிச் சாதனை படைத்துள்ளனர்.

தவறுதலாகப் பேனா மூடியை அச்சிறுவன் சுவாசித்துவிட்டதால், கடுமையான மூச்சுத்திணறல் அறிகுறிகளுடன் ஆகஸ்ட் 13, வியாழக்கிழமை இரவு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான். உடனடியாக மேற்கொள்ளப்பட்ட அவசர சிடி ஸ்கேன் பரிசோதனையில், பேனா மூடி வலப்புற மூச்சுக்குழாயின் ஆழத்தில் பதிந்திருந்தது உறுதியானது.

வெளிப்பொருளின் கடினமான இருப்பிடம் காரணமாக, இந்தச் சிகிச்சைக்கு மிகுந்த திறமையும், தொழில்நுட்ப நிபுணத்துவமும், நீண்டகால அனுபவமும் தேவைப்பட்டன. மயக்கவியல் துறையினரின் ஒத்துழைப்புடன், காது மூக்கு தொண்டை துறை மருத்துவக் குழுவினர் இச்சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

சிகிச்சைக்குப் பிறகு சிறுவனின் மூச்சுத் திணறல் நீங்கி, அவனது உடல்நிலை தற்போது நலமாகவும் சீராகவும் உள்ளது.

இது குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம், "சிக்கலான இச்சூழலைக் கையாள்வதில் மருத்துவர்கள், பணியாளர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பும் குழுப்பணியுமே வெற்றிக்குக் காரணம்" எனக் குறிப்பிட்டது.

அவசர சிகிச்சையளித்து சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு, அவனது பெற்றோர் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

விழிப்புணர்வுடன் இருங்கள் சிறு பொருட்களை குழந்தைகளிடமிருந்து பாதுகாப்பாக வையுங்கள்.

.dphpm

#சிதம்பரம் #கடலூர் #அரசுமருத்துவக்கல்லூரி

சிதம்பரம் அண்ணாமலை நகரிலுள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 55 வயது பெண்ணின் கணை...
17/08/2026

சிதம்பரம் அண்ணாமலை நகரிலுள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 55 வயது பெண்ணின் கணைய புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த இந்தப் பெண், சில மாதங்களாக வயிற்று வலி பிரச்சினைக்காக சிகிச்சை பெற சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களைக் காண வந்தார். அவரைப் பரிசோதித்தபோது, கணையத்தில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதனை உடனடியாக அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதையடுத்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் பாஸ்கர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த திங்கட்கிழமை அறுவை சிகிச்சைத் துறை தலைவர் பேராசிரியர் அன்வர் அலி அவர்களின் தலைமையில், உதவிப் பேராசிரியர் மருத்துவர் நந்தா கோபாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர் மருத்துவர் ஜெயமேரி ஆகியோர் இணைந்து அறுவை சிகிச்சை (WHIPPLE'S PROCEDURE) மேற்கொண்டனர். மயக்க மருந்துத் துறையின் துறைத் தலைவர் பேராசிரியர் சரவணமூர்த்தி, இணை பேராசிரியர் வெங்கடேஷன், உதவிப் பேராசிரியர் அனிதா, செவிலியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது.

மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சை கடந்த 05.08.2026 அன்று காலை முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. இச்சிகிச்சையின் போது நோயாளிக்கு மொத்தம் 6 பாட்டில் இரத்தம் (3 FFP உள்பட) செலுத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு 1 நாள் செயற்கை சுவாசம் (Ventilation) அளிக்கப்பட்டு, மயக்க மருத்துவத் துறையின் மூலம் தீவிர வலி நிவாரண சிகிச்சையும் வழங்கப்பட்டது.

சிகிச்சையின் பலனாக, நோயாளி 3 நாட்களில் இயல்பாக நடமாடவும், உணவு உட்கொள்ளவும் தொடங்கினார். முழுமையாக குணமடைந்ததைத் தொடர்ந்து, அவர் விரைவில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

இது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும். இது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முழுவதும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

.dphpm

#சிதம்பரம் #குறிஞ்சிப்பாடி #அரசுமருத்துவக்கல்லூரி

விருதாசலம் தாலுகா நோயாளிக்கு கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய சிகிச்சையில் புதிய சாதனை!விருதாசலம் தாலு...
15/08/2026

விருதாசலம் தாலுகா நோயாளிக்கு கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய சிகிச்சையில் புதிய சாதனை!

விருதாசலம் தாலுகாவைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், மாரடைப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய மருத்துவ கவனிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது இதயத்தில் ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டபோது, முக்கிய இரத்தக் குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக இதய மருத்துவர்கள் குழு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டு அடைப்பை நீக்கினர். இச்சிகிச்சையின் மூலம் இதய இரத்தக் குழாய் அடைப்பு நீக்கப்பட்டது.

எங்கள் மாவட்ட மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை. மேலும், இந்தச் சிகிச்சை தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) கீழ் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட இதய நோயாளிகளுக்கு மட்டும் தற்போது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக மற்ற நோயாளிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனை முதல்வர், மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோர் நோயாளியைச் சந்தித்து நலம் விசாரித்தனர். இச்சாதனையை நிகழ்த்திய இதய மருத்துவர்கள் மற்றும் செவிலியர் குழுவினருக்கு பாராட்டுக்கள்!

.dphpm

#கடலூர் #விருதாசலம் #இதயசிகிச்சை

Madurai Government Medical College Hospital's Cardiology Department crosses 20,000 Cath Lab procedures!The Cardiology De...
14/08/2026

Madurai Government Medical College Hospital's Cardiology Department crosses 20,000 Cath Lab procedures!

The Cardiology Department at Madurai Government Medical College Hospital has achieved a significant milestone surpassing 20,000 patients treated through Cath Lab procedures.

To mark this achievement, doctors and hospital staff came together for a celebratory cake-cutting ceremony, recognizing the dedication and skill behind this milestone in cardiac care.

This achievement reflects the growing trust patients place in government healthcare for advanced, life-saving cardiac treatment accessible to all, free of cost.

.dphpm

𝐅𝐢𝐫𝐬𝐭 𝐟𝐨𝐫 𝐚 𝐠𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭 𝐡𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 𝐢𝐧 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮: 𝐜𝐨𝐦𝐩𝐥𝐞𝐱 𝐜𝐡𝐞𝐬𝐭 𝐛𝐨𝐧𝐞 𝐜𝐚𝐧𝐜𝐞𝐫 𝐬𝐮𝐫𝐠𝐞𝐫𝐲A team of doctors at Kalaignar Centenary...
13/08/2026

𝐅𝐢𝐫𝐬𝐭 𝐟𝐨𝐫 𝐚 𝐠𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭 𝐡𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 𝐢𝐧 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮: 𝐜𝐨𝐦𝐩𝐥𝐞𝐱 𝐜𝐡𝐞𝐬𝐭 𝐛𝐨𝐧𝐞 𝐜𝐚𝐧𝐜𝐞𝐫 𝐬𝐮𝐫𝐠𝐞𝐫𝐲

A team of doctors at Kalaignar Centenary Super Speciality Hospital, Chennai, recently performed a complex surgery a first for a government hospital in Tamil Nadu on a 59-year-old man diagnosed with chondrosarcoma, a rare malignant bone tumour affecting the sternum.

Dr Sujay Susikar, Associate Professor of Surgical Oncology, explained that chondrosarcoma occurs in about 0.1% of the population. In this case, the tumour had destroyed the patient's sternum and spread to the chest wall, affecting the 3rd to 6th ribs on the left side.

Doctors removed the affected ribs and surrounding soft tissue, which left a large gap in the sternum. To reconstruct the area, the surgical team used customised 3D printed titanium implants, precisely designed to fill the gap.

According to the doctors, this surgery would have cost up to ₹12 lakh at a private hospital here, the patient received this advanced, life-saving procedure through the government healthcare system.

.dphpm

l

Government hospitals' share in organ donation rises in Tamil Nadu.The contribution of government hospitals to Tamil Nadu...
12/08/2026

Government hospitals' share in organ donation rises in Tamil Nadu.

The contribution of government hospitals to Tamil Nadu's organ donor pool has grown steadily over the past four years and the numbers tell a strong story.

In 2025, government hospitals accounted for 58% of all deceased donors in the state. That share has since risen to 64% as of April 2026, up from just 33% a few years ago, according to data from the Transplant Authority of Tamil Nadu (TRANSTAN).

This progress is attributed to a systematic reorientation of government doctors, standardisation of operational protocols across hospitals, and consistent multi-level periodic reviews.

Meanwhile, the overall number of deceased donors in Tamil Nadu has grown substantially from 156 in 2022 to 178 in 2023, then to a record high of 268 in 2024. It held at a similar level in 2025 with 266 donors, and already stands at 112 as of April 2026.

While organ transplantation beyond kidneys still remains limited in volume, this steady rise in government hospitals' role reflects real, sustained progress in building a more capable and trusted public healthcare system.

.dphpm

𝐍𝐨 𝐦𝐨𝐫𝐞 𝐩𝐚𝐩𝐞𝐫𝐰𝐨𝐫𝐤 𝐟𝐨𝐫 𝐡𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 𝐜𝐨𝐦𝐩𝐥𝐚𝐢𝐧𝐭𝐬 — 𝐣𝐮𝐬𝐭 𝐬𝐜𝐚𝐧 𝐚𝐧𝐝 𝐫𝐞𝐩𝐨𝐫𝐭!Government Rajaji Hospital (GRH), Madurai's QR code gri...
11/08/2026

𝐍𝐨 𝐦𝐨𝐫𝐞 𝐩𝐚𝐩𝐞𝐫𝐰𝐨𝐫𝐤 𝐟𝐨𝐫 𝐡𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 𝐜𝐨𝐦𝐩𝐥𝐚𝐢𝐧𝐭𝐬 — 𝐣𝐮𝐬𝐭 𝐬𝐜𝐚𝐧 𝐚𝐧𝐝 𝐫𝐞𝐩𝐨𝐫𝐭!

Government Rajaji Hospital (GRH), Madurai's QR code grievance system is winning praise from both patients and staff for making ward-level complaint resolution faster and smoother.

QR stickers placed across all wards let doctors, nurses, and sanitary staff instantly report issues along with a photo directly to the concerned department.

The old process meant a written memo, review by the Resident Medical Officer, and manual escalation often causing delays and missed complaints. Now, roughly 200 complaints a day get routed straight to the right technician, with regular review meetings ensuring nothing falls through the cracks.

This system, launched in January 2026, is now expanding to other government hospitals with plans to open QR access to the public too.

Simple technology, faster fixes.

.dphpm

10/08/2026

ஒரே 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 சேவை, இரண்டு முக்கிய தேவைகள்!

TNHSP-யின் அதிகாரப்பூர்வ WhatsApp சேவை மூலம், எந்த ஆப்பையும் பதிவிறக்கம் செய்யாமலேயே உங்களுக்குத் தேவையான இரண்டு முக்கிய சுகாதார சேவைகளை எளிதாகப் பெறலாம்:

உங்கள் 𝐀𝐁𝐇𝐀 (டிஜிட்டல் சுகாதார ஐடி) உருவாக்குதல்

1) "Hi" அனுப்பி தொடங்குங்கள்
2) "Create ABHA" தேர்வு செய்யுங்கள்
3) மொழியைத் தேர்ந்தெடுங்கள்
4) ஆதார் எண் & மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்
5) ஒப்புதல் அளியுங்கள் — உங்கள் ABHA தயார்!
உங்கள் மருத்துவப் பதிவுகள் அனைத்தும் இனி ஒரே இடத்தில், எளிதாக அணுகக்கூடிய வகையில் இருக்கும்.

𝟏𝟎𝟖 அவசர ஆம்புலன்ஸ் சேவை

1) 𝟗𝟒𝟒𝟓𝟎 𝟑𝟎𝟕𝟐𝟓-ஐ உங்கள் தொடர்பில் சேமியுங்கள்
2) WhatsApp திறந்து "Hi" அனுப்புங்கள்
3) அவசர நிலை குறித்த சில எளிய கேள்விகளுக்கு பதிலளியுங்கள்
4) விரைவான உதவிக்காக உங்கள் இருப்பிடத்தைப் பகிருங்கள்
5) ஆம்புலன்ஸ் புறப்பட்டதும், உறுதிப்படுத்தல் மற்றும் நேரடி டிராக்கிங் அப்டேட் கிடைக்கும்

✅ வேகமான சேவை — தேவைப்படும் நேரத்தில் உங்களை சென்றடைவோம்
✅ அக்கறையுள்ள பராமரிப்பு — பயிற்சி பெற்ற நிபுணர்கள்
✅ நம்பகமான சேவை — தமிழ்நாடு அரசின் ஆதரவுடன்
✅ அனைவருக்கும், எங்கும் — மாநிலம் முழுவதும் எளிதான அணுகல்

அவசர காலத்தில் ஒவ்வொரு நொடியும் முக்கியம். உங்கள் டிஜிட்டல் சுகாதார அடையாளத்தையும் இப்போதே உருவாக்கிக் கொள்ளுங்கள்.
இப்போதே 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 செய்யுங்கள்: 𝟗𝟒𝟒𝟓𝟎 𝟑𝟎𝟕𝟐𝟓

ஒரு அழைப்பு. ஒரு சாட். ஒரு வாழ்க்கை காக்கப்படும்.

Government of Tamil Nadu | Department of Health and Family Welfare

.dphpm .

Address

DMS Annex New Building, 259 Anna Salai, Teynampet
Chennai
600006

Alerts

Be the first to know and let us send you an email when TN Health Connect posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share