05/09/2026
# # # 🛶 காலனி ஆதிக்கம் தகர்க்கக் கடுஞ்சிறைக்கும் அஞ்சாத கப்பலோட்டிய செம்மாப்புத் தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155-ஆவது பிறந்தநாளில் வீர வணக்கம்!
===============================
=================
விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் திருச்சிராப்பள்ளி கிளை சார்பில் இன்று திருச்சியில் வீர வணக்க நிகழ்வு நடைபெற்றது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நெஞ்சுறுதியோடு போராடிய செம்மாப்புத் தமிழர், தமிழ்ப் பேரறிஞர், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
மக்களிடம் நிதி திரட்டி சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கப்பல் நிறுவனத்தை நடத்தி, ஆங்கிலேயரின் வணிக ஆதிக்கத்திற்கு சவால் விடுத்த வ.உ.சி. அவர்களின் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
வ.உ.சி. அவர்களின் வரலாறும், அவருடைய சிறந்த இலக்கியப் படைப்புகளும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பியபடி பேரணியாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் வே.க. இலக்குவன், தலைமை செயற்குழு உறுப்பினர் மூ.த. கவித்துவன், தெய்வத் தமிழ்ப் பேரவையின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் திரு. வே.பூ. ராமராசு மற்றும் பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் தோழர் இனியன், தோழர் கிருட்டிணமூர்த்தி, ஐயா சத்தியமூர்த்தி, தோழர் ஆ. இராசா, தோழர் சி. இராகுல் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் நிர்வாகக் குழு உறுப்பினர் பேராசிரியர் முகம்மது யூனுஸ், கி. குபேரன் இனிய நிலா, தோழர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் முன்னரே வ.உ.சி. அவர்களைப் பற்றி இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு விடுத்த கோரிக்கைகள் அடங்கிய துண்டறிக்கைகளை, தோழர்கள் மக்களுக்கு வழங்கி பரப்புரை செய்தனர்.
\*\*வ.உ.சி.யின் வரலாறு பாடமாகட்டும்! அவரது இலக்கியப் படைப்புகள் இளைய தலைமுறையைச் சென்றடையட்டும்! விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறு பாதுகாக்கப்படட்டும்!\*\*
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களின் தியாகமும், தமிழினத்தின் உரிமைக்கான அவரது போராட்டமும் என்றும் நிலைத்திருக்கட்டும்!
\*\*வீர வணக்கம்! வீர வணக்கம்! கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களுக்கு வீர வணக்கம்!\*\*
தமிழ்த் தேசியப் பேரியக்கம் —
#வஉசி155 #வஉசிதம்பரனார் #கப்பலோட்டியதமிழர் #வீரவணக்கம் #தமிழ்த்தேசியப்பேரியக்கம் #திருச்சிராப்பள்ளி #சுதேசிகப்பல் #விடுதலைப்போராட்டம் # #வஉசிபிறந்தநாள்