SDPI மேட்டுப்பாளையம் தொகுதி

  • Home
  • India
  • Chennai
  • SDPI மேட்டுப்பாளையம் தொகுதி

SDPI மேட்டுப்பாளையம் தொகுதி பசியிலிருந்து விடுதலை...!
பயத்திலிருந்து விடுதலை....!!

18/08/2026

்சி #தலைவர்கள்_சங்கமம்

NSV GRAND SPACE

SDPI கட்சி LEADER'S CONCLAVE தலைவர்கள் சங்கமம், Aug 18SDPI கட்சி கோவை வடக்கு மாவட்டம்,
18/08/2026

SDPI கட்சி LEADER'S CONCLAVE தலைவர்கள் சங்கமம், Aug 18

SDPI கட்சி கோவை வடக்கு மாவட்டம்,

கோவையில் எழுச்சியுடன் நடைபெற்று வரும் SDPI கட்சியின் மாபெரும் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் எழுச்சியுரையாற்றிய அகில ...
18/08/2026

கோவையில் எழுச்சியுடன் நடைபெற்று வரும் SDPI கட்சியின் மாபெரும் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் எழுச்சியுரையாற்றிய அகில இந்திய தலைவர் ைஸி
அகில இந்திய பொதுச் செயலாளர்,
#அப்துல்மஜீத்ஃபைஸி

கோவையில் எழுச்சியுடன் நடைபெற்று வரும் SDPI கட்சியின் மாபெரும் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மாநில த...
18/08/2026

கோவையில் எழுச்சியுடன் நடைபெற்று வரும்
SDPI கட்சியின் மாபெரும் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநிலச் செயலாளர் AS ஷபிக் அஹமது, மாநில பொருளாளர், முஸ்தபா அவர்கள்....

SDPI கட்சி "LEADERS CONCLAVE" தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சிக்கு வருகை தரும் SDPI கட்சியின் தேசியத் தலைவர்  ைஸி அவர்களையும்...
17/08/2026

SDPI கட்சி "LEADERS CONCLAVE" தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சிக்கு வருகை தரும் SDPI கட்சியின் தேசியத் தலைவர் ைஸி அவர்களையும், தேசிய பொதுச்செயலாளர் #அப்துல்மஜீத்ஃபைஸி அவர்களையும்,
தமிழ் மாநில தலைவர் ுஹம்மதுமுபாரக் அவர்களையும், மாநிலநிர்வாகிகளையும், மண்டல நிர்வாகிகளையும், மாவட்ட,தொகுதி, ஒன்றிய,நகர,கிளை நிர்வாகிகளையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்...

SDPI கட்சி,
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி
கோவை வடக்கு மாவட்டம்,


#மேட்டுப்பாளையம்

 #கோவை_வடக்கு_மாவட்ட ்சி நடத்திய சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி. SDPIகட்சி மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி சார்பில்...
15/08/2026

#கோவை_வடக்கு_மாவட்ட
்சி நடத்திய சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி.

SDPIகட்சி மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி சார்பில் கோவை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று #80வது_சுதந்திரதினவிழா நிகழ்வு தொகுதிதலைவர் ுஹம்மதுஅப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.. இந்நிகழ்வில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் ுகமதுஜுபைர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். SDPIகட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ்துல்ஹக்கீம் அவர்கள் தேசிய கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்விற்கு கோவை வடக்கு மாவட்ட தலைவர் M.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும், SDTU கோவை வடக்கு மாவட்ட தலைவர், A.அசனார் அவர்களும், வர்த்தக அணி மண்டல மாநில செயற்குழு உறுப்பினர், ்தாப் அவர்களும், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர், MA.ராஜிக் அஹமது அவர்களும், மாவட்டச் செயலாளர் S.அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் S.அப்துல் காதர் அவர்கள் சுதந்திர தின வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் இனிப்புகள் வழங்கி இறுதியாக SDPI கட்சி பெரியபள்ளி கிளைதலைவர் A.முகம்மது பாரீஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இதில் கட்சியின் மாவட்ட ,தொகுதி, கிளை நிர்வாகிகளும் SDTU தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்...

  கட்சியின் தொடர் முயற்சியால்  #மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் மீண்டும் திறப்பு!மேட்டுப்பாளை...
11/08/2026

கட்சியின் தொடர் முயற்சியால் #மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் மீண்டும் திறப்பு!

மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் இருந்த ஆதார் சேவை மையம், SDPI கட்சியின் தொடர் முயற்சியால் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இச்சேவை மையம் பல மாதங்களாக செயல்படாததால், புதிய ஆதார் அட்டை பெறுதல், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் மற்றும் கைரேகை பதிவு போன்ற அவசரத் தேவைகளுக்காக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். பொதுமக்களின் இந்த இன்னல்களைப் போக்கும் வகையில் SDPI கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட தொடர் கோரிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளின் பலனாக, தற்போது மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே ஆதார் சேவை தங்குதடையின்றி வழங்கப்பட உள்ளது.

செயல்படும் நாட்கள்: திங்கள் முதல் சனி வரை (வாரத்தில் 6 நாட்கள்)
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் தங்களது ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் இந்த மையத்தில் நேரில் அணுகிப் பயன் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

SDPI கட்சி மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கச் செய்த அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், SDPI கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

்சி,
#கோவை_வடக்கு
மேட்டுப்பாளையம்

கோவை வடக்கு மாவட்ட  உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான சிறப்பு கூட்டம்  மாநில செயலாளர்  ீக்அஹமது பங்கேற்பு 03-08-2026SDPI கட்ச...
04/08/2026

கோவை வடக்கு மாவட்ட உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான சிறப்பு கூட்டம் மாநில செயலாளர் ீக்அஹமது பங்கேற்பு

03-08-2026
SDPI கட்சியின் கோவை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது..
சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ீக்அகமது பங்கேற்றார்..
மாவட்ட பொதுச்செயலாளர் ்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார் , இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர்,
ாஜிக்அகமது , மாவட்ட செயற்குழு உறுப்பினர் #அன்சர்அலி, #அப்துல்ஜப்பார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்

கூட்டத்தில் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் கோவை வடக்கு மாவட்டதில்
உள்ள கிராம பஞ்சாயத்து, வார்டு உறுப்பினர் ஒன்றிய கவுன்சிலர்
நகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான உள்ளாட்சி இடங்கள் குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டு 80க்கும் மேற்பட்ட உள்ளாட்சி இடங்களிலும், நகராட்சி இடங்களிலும் போட்டியிட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன...
நிறைவாக மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி தலைவர் ுஹம்மதுஅப்பாஸ் அவர்கள் நன்றி உரையாற்றினார்..

தமிழக அரசே! வனத்துறையை! காட்டு யானைகளின் படுகொலையை தடுத்து நிறுத்து!!வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க வனத்துறை உடனடி நடவடி...
27/07/2026

தமிழக அரசே! வனத்துறையை!
காட்டு யானைகளின் படுகொலையை தடுத்து நிறுத்து!!

வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவங்கள் மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன.

சட்டவிரோதமாக சோலார் மின்வேலிகளில் மாற்று மின்சாரம் (AC) செலுத்தப்படுவதன் காரணமாக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களை வெளிப்படையாக மீறுவதோடு, சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

மேலும், மேட்டுப்பாளையம்-ஊட்டி பிரதான சாலையோர வனப்பகுதிகளில் யானைகளின் பாரம்பரிய வலசைப் பாதைகள் தடுப்பு சுவர்கள், புதிய கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் மறைக்கப்பட்டுள்ளதால், அவை தங்களது இயல்பான வழித்தடங்களை பயன்படுத்த முடியாமல் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழையும் சூழல் உருவாகியுள்ளது. இதன் விளைவாக மனித–யானை மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அதேபோல், விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகளை விரட்டும் பெயரில் பட்டாசுகள் மற்றும் பிற ஆபத்தான பொருட்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுவதாக இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய செயல்கள் யானைகளுக்கு கடுமையான காயங்களையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்குகின்றன.

விவசாயிகளின் உயிரும், வாழ்வாதாரமும், வாழை, கரும்பு போன்ற பயிரிடப்பட்டவைகள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில், வனவிலங்குகளை கொல்லும் நோக்கத்துடன் சட்டவிரோத மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் செயல்படுவோருக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படக் கூடாது.

எனவே, SDPI கட்சி கோவை வடக்கு மாவட்டம் தமிழக அரசையும், மேட்டுப்பாளையம் வனத்துறையையும் வலியுறுத்துவது:

🔊 சட்டவிரோதமாக மின்வேலிகளில் மாற்று மின்சாரம் (AC current) செலுத்துவோர் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
🔊 யானைகளின் பாரம்பரிய வலசைப் பாதைகளை உடனடியாக அடையாளம் கண்டு பாதுகாத்து, ஆக்கிரமிப்புகள் மற்றும் தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
🔊 மனித–யானை மோதல்களை குறைக்கும் வகையில் அறிவியல் அடிப்படையிலான நிரந்தர தீர்வுகளை செயல்படுத்த வேண்டும்.
🔊 வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, வனவிலங்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை முழுமையாக தடுக்க வேண்டும்.
🔊 விவசாயிகளின் பாதுகாப்பையும், வனவிலங்குகளின் உயிர் பாதுகாப்பையும் ஒருங்கிணைக்கும் நீடித்த திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

வனவிலங்குகளை பாதுகாப்பது என்பது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நமது அரசியலமைப்பு மற்றும் மனிதநேயக் கடமையாகும். எனவே, இதுபோன்ற உயிரிழப்புகள் இனி மீண்டும் நிகழாத வகையில் தமிழக அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என SDPI கட்சி கோவை வடக்கு மாவட்டம் வலியுறுத்துகிறது.

S. அஷ்ரப் அலி,
மாவட்டச் செயலாளர்,
SDPI கட்சி, கோவை வடக்கு

  கட்சியின் கோவை வடக்கு மாவட்ட தலைவராக  ்மத்துல்லா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவரின் சமூக, அரசியல் பணிகள் சிறக்க ...
25/07/2026

கட்சியின் கோவை வடக்கு மாவட்ட தலைவராக ்மத்துல்லா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவரின் சமூக, அரசியல் பணிகள் சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

M.நிஜாம் முகைதீன்
மாநில பொதுச்செயலாளர், SDPI

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when SDPI மேட்டுப்பாளையம் தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share