04/07/2013
கூடு இயக்கத்தின் நிறுவன தலைவர் பூங்கா பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்கள் மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்யும் இளைய தலைமுறைகளின் மத்தியில் தர்மபுரி இளவரசனின் மரணச் செய்தி மிகபெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் உருவாக்கியுள்ளது.
பெரியார் பிறந்த இந்த மண்ணில் சாதி மறுப்புக் காதல் திருமணம் செய்யும் இளம் தம்பதியர் கொலை செய்யப் படுவது, கௌரவக் கொலைகள் என்ற பெயரில் பல பகுதிகளில் நடந்து வரும் கொடுமை சாதிமறுப்பு செய்யும் தம்பதியற்கு உரிய பாதுகாப்பு இல்லை என்ற நிலையையே உறுதிசெய்கிறது என்று என்னும்போது, பகுத்தறிவு தந்தை பெரியார் கருத்துகளை உள்ளவாங்கியும் அண்ணா பாசறையிலும் உருவான திரவிட இயக்க தலைமியிலான அரசியல் கட்சிகள் இப்படிப்பட்ட செயலுக்கு காரணமான சாதியவெறி சிந்தனை கொண்ட கட்சிகளையும் அதன் செயல்பாடுகளையும் என்ன செய்ய போகிறது..?
சாதி ஒட்டு வாங்கி ஆட்சி நடத்தினால் போதும் என்ற நிலையினை எடுக்க போகிறதா மாறாக பெரியார் கண்ட கனவினை நனவாக்குகின்ற சாதிமறுப்பு திருமணத்தினை அக்கீகரின்கின்ற வகையில்லும் சாதி மறுப்புக் காதல் திருமணம் செய்யும் தம்பதிகள் பாதுகாப்புடன் வாழ எடுக்கபோகின்ற நிலைதான் என்ன என்று தமிழக மக்களின் சார்பாகவும், தான் சார்ந்துள்ள கூடு இயக்கத்தின் சார்பாகும் கேட்டுக்கொள்வதோடு, சர்ச்சைக்குரிய சூழலில் இளவரசனின் மரணம் பல்வேறு வினாக்களை முன்வைக்கின்றது , ஆகவே அரசாங்கமும், காவல் துறையும் இது குறித்து தகுந்த விசாரணை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என் கேட்டுக்கொள்கிறேன்.
இவன்
பூங்கா பாக்யராஜ்,
நிறுவன தலைவர்
கூடு இயக்கம்