30/05/2026
காஞ்சிபுரத்தில் ஸ்ரீ ஜெய மாருதி சிலம்பப் பள்ளியை நடத்திவரும் சிலம்பக் கலைஞரான திரு. காமகோடி அவர்கள், பின் தங்கிய நிலையிலிருக்கும் குழந்தைகள் - மாணவர்களின் முன்னேற்றத்துக்குக் கல்வி சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்.
கல்வி, அறிவு மேம்பாடு சார்ந்து பல்வேறு இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் அவர், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு மே 23 அன்று அவர்களை அழைத்து வந்தார்.
மிகுந்த ஆர்வத்துடன் நூலகத்தைச் சுற்றிப் பார்த்த குழந்தைகள், நூலக இயக்குநர் சுந்தர் கணேசன் அவர்களுடன் கலந்துரையாடினர்.
ஆர்வம் மிகுந்த குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்து வந்து பார்வையிடச் செய்த காமகோடி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Kanchi Selvam