18/04/2025
#வடசென்னை_கிழக்கு_மாவட்டத்தில்...
#புதிய_வக்பு_சட்டத்துக்கு_எதிராக ...
#ஒரு_கோடி_மக்களை_சந்திக்கும் ...
ுண்டறிக்கை_பரப்புரை_தீவிரம்!
ஏப்ரல்.18.,
புதிய வக்புச் சட்டத்துக்கு எதிராக, நாட்டில் கடும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது. எல்லா மாநிலங்களிலும் மக்கள் போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி முதல், தமிழ்நாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இதுவரை மஜக தமிழ்நாடெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன் ஒரு பகுதியாக இச்சட்டத்தின் அவலங்களை விளக்கி, ஒரு கோடி மக்களை சந்திக்கும் வகையில், ஏப்ரல் 10 முதல் மே 10 வரை ஒரு மாத காலத்திற்கு, துண்டறிக்கை பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக இன்று மஜக வடசென்னை கிழக்குமாவட்டம் திருவொற்றியூரில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜாஃபர் அவர்கள் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கதிர் உசேன் காலடிப்பேட்டை பள்ளிவாசலில் பரப்புரை துண்டறிக்கையை விநியோகித்தனர்.
தகவல் :
்_தொழில்நுட்ப_அணி
#வடசென்னை_கிழக்கு_மாவட்டம்