20/02/2019
தொகுதி ஆய்வில் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்!!!
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட உள்ளகரம் 168வது வட்டத்தில் தொகுதியின் போற்றுதலுக்குறிய சட்டமன்ற உறுப்பினர் மக்கள் தொண்டர் அண்ணன் அரவிந்த் ரமேஷ் அவர்கள் இன்று வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை, மேக்மிலன் காலனி, அம்பேத்கர் தெரு, பெரியார் தெரு, இந்திரா தெரு, இளங்கோ தெரு, திரௌபதி அம்மன் கோயில் தெரு, அவ்வை தெரு, எம்.ஜி.ஆர். தெரு, வித்யா நகர், ராஜரத்தினம் தெரு,காந்தி தெரு, சோழன் தெரு, வா.உ.சி தெரு, நேரு தெரு, என வட்டத்தின் பெரும்பாலான தெருக்களை காலை 7.30 மணி முதல் மதியம் 12மணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் பொது நல சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்று குறைகளை கேட்டறிந்தார் அவைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த ஆய்வில் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் ஆற்றல்மிகு செயல்வீரர் அண்ணன் பெருங்குடி
எஸ்.வி.ரவிச்சந்திரன், வட்ட செயலாளர் அண்ணன் உள்ளகரம் திவாகர் உள்பட வட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Aravind Ramesh