MNMIT

MNMIT Official page for Makkal Needhi Maiam IT Wing

டாஸ்மாக் மதுபானக் கடை திறப்பதற்கு முன்பும் கிராம சபையின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட வேண்டும்.மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்...
06/09/2026

டாஸ்மாக் மதுபானக் கடை திறப்பதற்கு முன்பும் கிராம சபையின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் Kamal Haasan எம்பி அரசிடம் கோரிக்கை.

03/09/2026

மக்கள் நீதி மய்யம் சமூக ஊடக அணி சார்பில், Gen Z இளைஞர்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்ட "ஹே ராம்" (Hey Ram) திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு!
​மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்களின் திரைப்படங்களில் உள்ள நுட்பமான அரசியல் மற்றும் ஆரோக்கியமான அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்து இந்நிகழ்வில் ஆழமாக விவாதிக்கப்பட்டது.
​இந்தச் சிறப்பு நிகழ்வில் M. சதிஷ், அரசியல் செயற்பாட்டாளர் அவர்கள்
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

முழு வீடியோ: https://youtu.be/XV5qZ3Y57ww?si=XWsUqpEbxzoG3dTz





02/09/2026

மக்கள் நீதி மய்யம் சமூக ஊடக அணி சார்பில், Gen Z இளைஞர்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்ட "ஹே ராம்" (Hey Ram) திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு!
​மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்களின் திரைப்படங்களில் உள்ள நுட்பமான அரசியல் மற்றும் ஆரோக்கியமான அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்து இந்நிகழ்வில் ஆழமாக விவாதிக்கப்பட்டது.
​இந்தச் சிறப்பு நிகழ்வில் இயக்குனர் ஒளிப்பதிவாளர் சுஜித் N சுப்பிரமணியம்
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

முழு வீடியோ: https://youtu.be/XV5qZ3Y57ww?si=XWsUqpEbxzoG3dTz





தமிழக அரசு மாவட்ட நுகர்வோர் ஆணையங்களின் எண்ணிக்கையை 32-லிருந்து 14 ஆகக் குறைத்து, சில ஆணையங்களை ஒன்றிணைக்கும் முடிவு  எட...
01/09/2026

தமிழக அரசு மாவட்ட நுகர்வோர் ஆணையங்களின் எண்ணிக்கையை 32-லிருந்து 14 ஆகக் குறைத்து, சில ஆணையங்களை ஒன்றிணைக்கும் முடிவு எடுத்திருப்பதை
திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

இன்று வரை நுகர்வோருக்கு கலப்படமில்லாத உணவு பொருட்கள், மற்றும் தரமில்லாத பொருட்கள் விற்பனை குறித்தும் போதிய விழிப்புணர்வுகளை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றளவும் மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் காலாவதி தேதி முடிந்த பிறகும் விற்பனை செய்வது குறித்து சமூக வலைதளங்கள் மூலம் மக்களே வெளிப்படுத்தியதும்
செய்திகளாக வெளிவந்துள்ளது.

2006 ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட (FSS) உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பகிரப்பட்ட பொறுப்பு. இந்த சட்ட விதிகளுக்கு உட்பட்டு இயங்காமல் தரமில்லாத பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிரான ஒரே நம்பிக்கை இந்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் என்பதை இந்த அரசு மறந்து விடக்கூடாது.

மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மீதான நம்பிக்கையை இந்த அரசு நுகர்வோருக்கு வழங்க வேண்டியது கட்டாயம்.

நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் அந்தந்த மாவட்டங்களில் இருந்தால் மட்டுமே மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும்.

ஒரு சாதாரண நுகர்வோர் ஏற்கனவே ஒரு நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கான நிவாரணத்தைப் பெறுவதற்காக மீண்டும் பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவானால், அது நீதியைப் பெறுவதற்கான தடையாக மாறிவிடும்.

இந்த நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் எண்ணிக்கை குறைப்பினை இந்த அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கையை முன்வைக்கிறது.

Chief Minister of Tamil Nadu



நேபாள இமயமலைத் துயரம் : நமக்கு இயற்கை  விடுக்கும் எச்சரிக்கை.நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மனிதர்கள் உள்ள...
28/08/2026

நேபாள இமயமலைத் துயரம் : நமக்கு இயற்கை விடுக்கும் எச்சரிக்கை.

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மனிதர்கள் உள்ளிட்ட பல உயிரினங்களின் மரணங்களையும், பொருளாதார அழிவையும், சொல்லில் அடங்காத துயரத்தையும் விட்டுச் சென்றுள்ளது.

இமயமலையில் பனிக்கட்டியும் பாறையும் உருகி தகர்ந்ததால், கட்டுக்கடங்காத வெள்ளமும், சேறும் கலந்த பேரலை சாலைகளையும், பாலங்களையும், குடியிருப்புகளையும் அடித்துச் சென்றுள்ளது.

நேபாளத்திலும், திபெத் பகுதியிலும் இதுவரை 165 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 1,300-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மீட்புக் குழுக்கள் தேடுதலைத் தொடர்ந்து வருவதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் இந்திய யாத்ரீகர்களும் உள்ளதாகவும், தொடர்ந்து நடைபெறும் மீட்புப் பணிகளின்போது, 130-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த யாத்ரீகர்களும் இந்தப் பேரிடரில் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே சமயம், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் சற்று ஆறுதல் அளிக்கிறது.

இயற்கைப் பேரிடரில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

காணாமல் போனவர்கள் மீண்டு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பங்களுடன் உறுதுணையாக நாங்களும் உணர்வு ரீதியாக உடனிருக்கிறோம்.

இச்சவாலான சூழலில் மீட்புக் குழுவினர் ஒவ்வொரு உயிரையும் பத்திரமாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், உடமைகள் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்கள் தங்கள் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான மனவலிமையையும் ஆதரவையும் பெற வேண்டும் எனவும் விழைகிறோம்.

இந்திய அரசு உடனடி நிவாரண உதவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது ; எனினும் இப்பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். நேபாள அரசுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, கூடுதல் மீட்புக் குழுக்களையும் மனிதாபிமான உதவிகளையும் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன், அங்குள்ள இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தாயகம் அழைத்து வருவதை உறுதிசெய்து, இந்நெருக்கடியான தருணத்தில் நேபாளத்திற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் இந்தியா தொடர்ந்து வழங்க வேண்டும்

நிவாரணப் பணிகளுக்கு அப்பால், இத்துயரம் நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது.

இமயமலை வெறும் பாறைகள் சூழ்ந்த மலைகள் மட்டுமல்ல. அவை இயற்கை அரண்கள். தெற்காசியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கி நிற்கும் முக்கியமான சூழலியல் அமைப்பு.

இயற்கையை, வளர்ச்சிக்குத் தடையாகப் பார்க்கும் மனப்போக்கை நாம் இனியும் தொடரக் கூடாது.

கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் தீவிர காலநிலை மாற்றம் ஆகியவை இமயமலையின் மென்மையான சூழலை நிலைகுலையச் செய்து பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன. பனிப்பாறை உடைவால் நிகழ்ந்த இப்பேரிடர், இமயத்தின் பலவீனமான தன்மையை மீண்டும் உலகுக்கு உணர்த்தியுள்ளதாக சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

கடுமையான சுற்றுச்சூழல் சட்டங்கள், உரிய தாக்க மதிப்பீடுகள், பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் காலநிலையைத் தாங்கும் உள்கட்டமைப்புகள் ஆகியவையே இப்போதைய அவசரத் தேவை.

இயற்கையைச் சிதைக்காத வளர்ச்சி மூலம் சூழலியல் சமநிலையை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்.

இது நேபாளத்தைப் பற்றியது மட்டுமல்ல.

இது இந்தியாவுக்கான எச்சரிக்கை. இது இமயமலைக்கான எச்சரிக்கை. இது உலகிற்கான எச்சரிக்கை.

அடுத்த பேரழிவுக்காகக் காத்திராமல் இப்போதே செயல்படுவோம்.

இயற்கையைப் பாதுகாப்போம். சூழலியல் சமநிலையை மீட்டெடுப்போம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவோம். இன்னும் தாமதிக்காமல் விரைந்து செயல்படுவோம்.

நேபாளப் பேரிடரில் உயிரிழந்தோர் மற்றும் மாயமானோரின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுச் சகோதரர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும் என்றும் துணையாக இருக்கும்.

Nepal’s Himalayan Tragedy: Nature Is Warning UsThe devastating flash floods in Nepal have left behind a trail of death, ...
28/08/2026

Nepal’s Himalayan Tragedy: Nature Is Warning Us

The devastating flash floods in Nepal have left behind a trail of death, destruction and unimaginable human suffering.

A catastrophic collapse of ice and rock in the Himalayas triggered a massive torrent of water and debris, sweeping away homes, roads, bridges and entire settlements. At least 165 people have been reported dead, with more than 1,300 people still missing across Nepal and the Tibet region. The numbers are changing as rescue teams continue their search.

Among those affected are Indian nationals, including pilgrims travelling through the Himalayan region. More than 130 Indians have been reported missing in the evolving rescue effort. Reports have also indicated that pilgrims from Tamil Nadu are among those caught in the disaster, while several have thankfully been rescued.

Our deepest condolences go out to every family that has lost a loved one.

To the families waiting anxiously for news of those still missing — we stand with you in hope and solidarity. May the rescue teams find every possible survivor, and may those who have lost everything find the strength and support to rebuild their lives.

India has already mobilised assistance and relief support. This effort must be strengthened further. The Government of India should continue working closely with the Government of Nepal, deploy every necessary rescue and humanitarian resource, ensure the safe evacuation and return of Indian citizens, and provide all possible assistance to Nepal in its hour of need.

But beyond rescue and relief, this tragedy demands reflection.

The Himalayas are not merely mountains. They are a critical ecological system that sustains millions of lives across South Asia.

We cannot keep treating nature as an obstacle to development.

Unchecked construction, ecological degradation, changing climate patterns and fragile Himalayan ecosystems are creating risks that can no longer be ignored. Experts have linked this disaster to a glacier collapse, highlighting once again the vulnerability of the rapidly changing Himalayan environment.

We need stronger environmental protection laws.
We need rigorous environmental impact assessments.
We need to protect fragile ecosystems from reckless development.
We need early-warning systems and climate-resilient infrastructure.
And above all, we need to restore the balance between development and nature.

This is not just about Nepal.

It is a warning for India.
It is a warning for the Himalayas.
It is a warning for the world.

Let us not wait for the next catastrophe to act.

🌿 Protect nature. Restore ecological balance. Strengthen environmental safeguards. Act before it is too late.

Our thoughts, prayers and solidarity are with the people of Nepal, the families of those who have lost their lives, those still missing, and every Indian — including our brothers and sisters from Tamil Nadu — affected by this terrible calamity.

On Mother Teresa’s birthday, Makkal Needhi Maiam, remembers a woman who chose compassion over comfort, service over reco...
26/08/2026

On Mother Teresa’s birthday, Makkal Needhi Maiam, remembers a woman who chose compassion over comfort, service over recognition, and love over indifference

Her greatest legacy is perhaps the simplest reminder: Every human being deserves dignity, kindness and love.

MTC-யில் 2,000-க்கும் மேற்பட்ட நடத்துனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக இளைஞர்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடி...
19/08/2026

MTC-யில் 2,000-க்கும் மேற்பட்ட நடத்துனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக இளைஞர்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக, நிரந்தரமாக நியமிக்க வேண்டியதற்குப் பதிலாக — உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு, இட ஒதுக்கீடு இல்லாமல், தற்காலிக அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒவ்வொரு பணியிடமும் வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாகச் செல்ல வேண்டும். இந்த ஒவ்வொரு பணியிடமும் இட ஒதுக்கீட்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இந்த ஒவ்வொரு பணியிடமும் நிரந்தரமாக இருக்க வேண்டும் — ஏனெனில் இவை உயர் பொறுப்பு, அத்தியாவசிய பொதுப் போக்குவரத்து பணிகள், தற்காலிக வேலைகள் அல்ல.

நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் சொந்த மக்களின் அரசு வேலைவாய்ப்பு உரிமையை மீறும் அரசு நடவடிக்கைக்கு எதிரானவர்கள். இந்த டெண்டரை ரத்து செய்யுங்கள். உள்ளூரிலேயே, நிரந்தரமாக ஆட்கள் எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைக்கிக்கிறது.

Chief Minister of Tamil Nadu

எண்ணூரில் ஆற்றில்  ஆயிரக்கணக்கில் மீன்கள் இறப்பு !உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் !சென்னையை அடுத்த...
17/08/2026

எண்ணூரில் ஆற்றில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறப்பு !

உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் !

சென்னையை அடுத்த எண்ணூர் அருகே கடலில் கலக்கும் இடத்திற்கு சற்று முன்பாக, கொசஸ்தலை ஆற்றில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் அப்பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்கள் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால் தான் மீன்கள் இறப்பதாகக் கூறி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இறந்த மீன்களைச் சேகரித்த மீன்வளத் துறை அதிகாரிகள், அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வின் முடிவுகள் வெளிவந்தால் மட்டுமே , மீன்களின் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் .
தகுந்த காரணத்தை அறிந்து இது போன்று மீண்டும் நடக்காதவாறு ஆறுகள் மற்றும் உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.


கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலைமாணவர்களிடமும் பொதுமக்களிடமும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இளைஞ...
13/08/2026

கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை
மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இளைஞர் சமூகத்தை சரியான பாதையில் வழிநடத்த இந்த அரசுக்கு பொறுப்பும், கடமையும் உள்ளது.

இதில் பெற்றோர்களின் பங்களிப்பும் மிக அவசியமான ஒன்று. கல்லூரி நிர்வாகமும் கண்காணித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

கல்லூரி வளாகங்களுக்குள் போதைப்பொருள்களுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர்
கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை இந்த நிகழ்வு உணர்த்தியிருக்கிறது.

தொடர்ந்து நடக்கும் இந்த படுகொலைகள் நம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கேள்விக்குறியாக்குகிறது...
இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அத்தனை குற்றவாளிகளையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.


Address

Eldams Road
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when MNMIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share