24/12/2023
சமீபத்திய பெருமழை காரணமாக தூத்துக்குடி திருச்செந்தூர் மாவட்டங்களில் பல பகுதிகள்
வீடுகள், தார்சாலைகள், வாழைதோப்பு, கால்நடைகள் என பெருமளவில் பாதிப்பு அடைந்து உள்ளது.
ஏரல் மேலமங்கலம், முக்காணி, ஆழ்வார் திருநகரி, நாசரேத், உடையார் குளம், கடயனோடை, செங்குளம், பேச்சியம்மாள் புரம், முறப்பநாடு சணல்பட்டி, v.கோவில்பத்து, கொங்கராயன் குறிச்சி, படுகையூர், நாணல்காடு(கருங்குளம்), நளன்குடி, கேம்பாலபாத் ...
இதுபோன்ற பாதிக்கப்பட்ட பல பகுதிகள்/ கிராமங்களுக்கு சேவாபாரதி RSS தொண்டர்கள் நேரில் சென்று தற்போது அவர்களது தேவைக்கு உணவு, மளிகை பொருட்கள், பிரட் பிஸ்கட், தண்ணீர், நாப்கின்கள் போன்ற நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
நேரில் பார்க்கும் போது செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது.
மேலும் தண்ணீர் வடிந்த பகுதிகளில்
நோய்கள் பரவாமல் இருக்க, மருத்துவ முகாம்கள், பள்ளி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் நோட்டுகள் .. போன்ற பணிகள் செய்ய வேண்டி உள்ளது.
relief work
SevaBharathi TTN
Sevabharathi Tamilnadu