14/10/2022
அன்பு உழவு சொந்தங்களே!
14-10-2022 மாலை 6 மணிக்கு பொள்ளாச்சிக்கு வருகை தந்த மாண்புமிகு மத்திய வேளாண்மை துறை அமைச்சர்
திரு நரேந்திர சிங் தோமர்
அவர்களை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளாக
நதிகளை தேசிய மயமாக்க வேண்டியும்,
தேங்காய் கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்தவும்,
நதிகளை தேசிய மயமாக்கி மாநிலங்களுக்குள் நடைபெறும் மோதலை தடுக்கவும்,
ஆனைமலை நல்லாறு இணைப்பு திட்டங்களை நிறைவேற்றவும்,
விவசாயிகளின் வருமானங்களை இரட்டிப்பாகுவதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியும்,
வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள உரம் மற்றும் பூச்சி மருந்து விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும்,
தலைவர் சொல்லேருழவன் செல்லமுத்து அவர்களும்,
மாநில பொருளாளர்
E.பாலசுப்பிரமணியம் அவர்களும்,
மாநில மகளிர் அணி செயலாளர்
KCM.சங்கீதபிரியா அவர்களும்,
கோரிக்கை மனுவை வழங்கி,
தலைவர் சொல்லேருழவன் செல்லமுத்து அவர்கள் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்
அமுல் கந்தசாமி,
நமது இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் அலங்கியம் ஈஸ்வரமூர்த்தி,
பொறியாளர் அணி செயலாளர் Er.பொன்.ஜெகநாதன்,
தாராபுரம் வட்டார தலைவர் பழனிச்சாமி,
பொங்கலூர் வட்டார செயலாளர் சுங்கம் நடராஜன்,
பொருளாளர்
சி எஸ் என்கிற
சி சுப்பிரமணியம்,
மூலனூர் வட்டார தலைவர் குருசாமி,
உள்ளிட்ட இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
நன்றி!
ஈஸ்வரன்
ஊடக பிரிவு செயலாளர்.