26/09/2014
பொன்னூசாமி
நடத்துனர்
அரசு பேருந்து
தீிருநெல்வேலி
Employee ID : 4497
இவர் ஒரு அரசு பேருந்து நடத்துனர். ஒரு நாள் திருநெல்வேலியிலிருந்து ஊருக்கு வரும்பொழுது நான் வந்த பேருந்தில் சந்தித்ேன். இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா! பயணச்சீட்டு கொடுக்கும்படி அருகில் வந்தார். பணத்தை கொடுத்ாென் பயணச்சீட்டு கொடுத்தார்.
வழக்கமாக நடத்துநர்கள் எச்சில் தொட்டு கிழித்து கொடுப்பார்கள். நம்மில் சிலர் அருவருப்பொடு
வாங்கிக்கொள்வோம் பலருக்கு பழகியும்விட்டது. ஆனால், இந்த நடத்துனர் விரலில் எச்சில் தொடுவதற்கு மாற்றாக அவரது பையில் இருந்த ஒரு டப்பாவில் தொட்டு பயணச்சீட்டுகளை கொடுத்தார்.
அது என்ன டப்பா என்று அவரிடம் கேட்டேன். அவர் அந்த டப்பாவில் ஈர பஞ்சு வைத்திருக்கிறார். அதை பார்த்த உடன் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவரின் அனுமதியோடு இந்த புகைப்படங்களை எடுத்தேன்.
எதற்காக இப்படி இந்த டப்பா வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அது மக்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் சுகாதார கேடு என்றார். உங்களுக்கு இதினால் என்ன கேடு என்று கேட்கும்போது, சொன்னார். எச்சில் தொடுவதற்காக நாக்கில் விரலை வைக்கும்போது, விரலில் உள்ள கிருமிகள் உள் சென்று தொண்டை பகுதிகளில் பிரச்சனைகளை (Throat Infection) வருவிக்கும் என்றார்.
மேலும், வேறு ஏதேனும் நடத்துணர்கள் கேட்டாலும் இதை அவர்களது பைகளில் செய்து கொடுக்கிறார் இலவசமாக. இதை செய்வதற்கு இவர் பயன்படுத்துவது ஒரு காலி Amurtanjan டப்பா. கொஞ்சம் பஞ்சு. இவரது இந்த செயலை பார்க்கும் பொழுது அவர் மேல் இன்னும் மரியாதை உயர்கிறது.
இவரது செயல் பிடித்திருந்தால் LIKE பண்ணுங்கள். இதை போல மற்ற நடத்துணர்களும் விழிப்புணர்வு அடைய SHARE செய்யுங்கள்.
I have taken these photos before 2 and half years back. Ponnusamy Sir, Sorry for this delayed posting.