06/10/2025
மக்கள் நலனைக் காக்க வேண்டிய ஆட்சியர் – ஊழலை காக்கிறார்!
தமிழக அரசு உடனடியாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும்!
கிராம நிர்வாக அலுவலர்களின் (VAO) தவறுகளை மறைத்து காப்பாற்றும் வகையில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் வழங்கிய இடமாற்ற உத்தரவை ரத்து செய்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
பட்டா மாற்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருந்த சில கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எதிராக, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் வழங்கிய இடமாற்ற உத்தரவு, மாவட்ட ஆட்சியர் திருமதி. சிவசவுந்தரவள்ளி I.A.S., அவர்களால் எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது மிகக் கடுமையான மற்றும் பொறுப்பற்ற செயல் ஆகும்.
நிர்வாகத்தில் நேர்மை, பொறுப்புணர்வு, மக்கள் நலன் ஆகியவற்றை புறக்கணித்து, தவறு செய்தவர்களை காப்பாற்றும் வகையில் எடுத்துள்ள இந்த நடவடிக்கை அரசு சேவையின் ஒழுக்க நெறிகளையும், நல்லாட்சியின் அடிப்படைகளையும் முற்றிலும் புறக்கணிப்பதாகும்.
தமிழக அரசு உடனடியாக District Collector, Tirupathur திருமதி. சிவசவுந்தரவள்ளி I.A.S., அவர்களை இடமாற்றம் செய்து பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.
தவறு செய்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எதிராக சீரிய விசாரணை நடத்தி, கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மக்களின் நம்பிக்கையை குலைக்கும், ஊழலுக்கு ஆதரவாகவும் நடைபெறும் இத்தகைய செயல்களை கடுமையாகக் கண்டிக்கிறோம். மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமையாகும் / Chief Minister of Tamilnadu.
I .PCC
| Polimer News | The Times of India
Rahul Gandhi Chief Minister of Tamil Nadu