29/08/2013
What this show's we, the members of parliament will make mistake then no one suppose to ask any questions?? Is this real democracy of India???..
எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி ரத்து ஆகாது!
குற்ற வழக்கில் தண்டனை பெற்ற உடனேயே எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி ரத்து ஆகாது. சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இதனால் கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்து இருந்தால், அதன் மீதான இறுதித் தீர்ப்பு வரும் வரை அவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியும். அதாவது நாடாளுமன்ற கூட்டத்திலோ அல்லது சட்டசபை கூட்டத்திலோ கலந்து கொள்ள முடியும். ஆனால் அவர்கள் அந்த சபைகளில் நடைபெறும் ஓட்டெடுப்புகளில் கலந்து கொள்ள முடியாது. அதாவது ஓட்டுப் போடும் உரிமை கிடையாது.
சமீபத்தில் குற்ற வழக்கில் தண்டனை பெற்ற உடனேயே எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை இழந்து விடுவார்கள் என்றும், அப்பீல் மனு மீதான விசாரணை முடியும் வரை காத்து இருக்கக்கூடாது என்றும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4) பிரிவு அரசியல் சட்டத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதாக அமைந்து இருப்பதால் அது செல்லாது என்றும் கடந்த ஜூலை 10–ந் தேதி தீர்ப்பு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது